தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு தன்னெழுச்சி…. ஜல்லிக்கட்டு போராட்டம்

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு தன்னெழுச்சி மாணவர், இளைஞர் இயக்கம் ஒரு சட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த இயக்கம் இளம் பெண்கள், தாய்மார்களின் ஆதரவை மட்டுமல்ல ; பொதுவெளியில் பங்களிப்பையும் பெற்றது. சீரியல் பார்த்து வீணாக போய்க்கொண்டிருந்த தாய்மார்களும் சீரியஸ் மேட்டருக்கு போராடுவார்கள் என்பதை நிரூபித்தது. போஸ்டர் ஒட்டி அடுத்தவன் வீட்டு சுவரை அழுக்காவில்லை. நன்கொடை எனும் பெயரில் கல்லா கட்டவில்லை. எழுச்சி, வீழ்ச்சி என தலைவர்களை அடையாளப்படுத்தவில்லை.

(“தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு தன்னெழுச்சி…. ஜல்லிக்கட்டு போராட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழக அரசியல்வாதிகளே… போராட்டத்தைப் படியுங்கள்!

தேசத்தையே திரும்பிப் பார்க்கவைத்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில், மிகுந்த விவாதத்துக்குரிய அம்சங்களில் ஒன்று, தமிழக அரசியல் கட்சிகளுக்கு இதில் செய்வதற்கு ஒன்றுமே இல்லாமல் போனது. நம்பகத்தன்மையிழப்பு. கண் முன்னே அரசியலில் ஒரு வரலாறு நிகழும்போது, சமகாலத்தில் களத்திலிருக்கும் ஒரு அரசியல்வாதிக்கும் அதில் எந்தப் பங்கேற்புக்கும் இடமில்லாமல் போவது எவ்வளவு பெரிய வீழ்ச்சி!

(“தமிழக அரசியல்வாதிகளே… போராட்டத்தைப் படியுங்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

‘Made in India’

எமது பண்பாடுகள், பாரம்பரியங்கள், கலை, கலாச்சாரங்கள் என்பன பாதுகாக்கப்படுவதுடன் அவற்றை நாம் நம் அன்றாட வாழ்வில் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என எண்ணுபவர்களில் நானும் ஒருவன். ஏனெனில் வெறுமனே அழிந்து போகும் நம் இன அடையாளங்களை தூக்கி நிறுத்துவதற்காக அல்ல. அவற்றுக்குப் பின்னால் உள்ள உயிர்ப்புத் தன்மையும், இயற்கையுடன் சேர்ந்த வாழ்க்கை முறையும், மனித நல் வாழ்விற்கான வழிகாட்டிகளும் நிறையவே அங்கு காணப்படுகிறது.

(“‘Made in India’” தொடர்ந்து வாசிக்க…)

சோஷலிஸத்திற்காக வர்க்கத்திற்கு ஒரு கட்சி!

வருடம் முடிந்து விட்டது. புது வருடம் பிறந்திருக்கின்றது. புது வருடத்தை புதிய எதிர்பார்ப்புகளுடன் தொடங்குமாறு சிலர் சொல்கிறார்கள். ஆனால், இவ்வருடம் எமது வாழ்நிலை கடந்த வரவு செலவு அறிக்கையால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. நாம் எவ்வளவுதான் வணக்க வழிபாடுகளை செய்தாலும், நாள் நட்சத்திரங்களைப் பார்த்தாலும் எமது வாழ்நிலையைத் தீர்மானிப்பது எமது நாட்டின் மிகச்சிறு குழுவினரான அதிகாரபலம், பணபலம் படைத்த வர்க்கமாகும். அவர்கள் சொல்வதையும் செய்வதையும் கொண்டே எமதும் எமது பிள்ளைகளினதும் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. அதாவது முதலாளித்துவ வர்க்கம் எம்மிடமிருந்து பறித்துக் கொள்பவற்றின் காரணமாகத்தான் எந்நாளும் ஏக்கப் பெருமூச்சு விட வேண்டியுள்ளது.

(“சோஷலிஸத்திற்காக வர்க்கத்திற்கு ஒரு கட்சி!” தொடர்ந்து வாசிக்க…)

என் மனவலையிலிருந்து…..மெரினாவில் போராட்டகாரர்கள் பொலிஸ் இனால் சுற்றிவளைப்பு

(சாகரன்)

இது எதிர்பாரக்கப்பட்ட விடயம். தடைக்கு பின்னால் இருக்கும் சுதேசியத்தை அழிக்கும் செயற்பாட்டு வெளிக்கரங்களுக்கும் இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு இந்தப் போராட்டத்திற்கு ஒரு வளர்ச்சி நிலைக்கு பின்னர் ஆப்பு அடிக்க புறப்படும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். இந்நிலைமையை சமாளிக்க தொடர்ந்தும் போராடி இறுதி இலக்கை அடைய நிச்சயம் இதற்கு ஒரு ஸ்தாபன வடிவம் தேவை. தமிழ் உணர்வு தமிழ் வீரம் தமிழர் பண்பாடு கலாச்சாரம் என்பதற்கு அப்பால் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் காளைகளை இல்லாமல் செய்து சுதேசிய காலநடை இனங்களை இல்லாமல் செய்யும் காப்ரேட் கம்பனிகளின் சூழ்ச்சிகளுக்கு எதிராக இந்திய ஆளும் வர்க்கம் செயற்படப்போவது இல்லை இதில் உறுதியான மக்கள் போராட்டமே தமிழ்நாட்டை…. இந்தியாவை மீட்சிக்குள் உள்ளாக்கும்.

(“என் மனவலையிலிருந்து…..மெரினாவில் போராட்டகாரர்கள் பொலிஸ் இனால் சுற்றிவளைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

சல்லிக்கட்டை மீட்டெடுத்த ‘மெரினா கடற்கரைப் போராட்டம்’

“அவசரச் சட்டம் கொண்டு வந்து நானே சல்லிக்கட்டை துவங்கி வைப்பேன்” என்று தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்ததுபோல், அவசரச் சட்டம் கொண்டுவந்து, தற்காலிகமாக சல்லிக்கட்டுக்கான தடையை நீக்கியிருக்கிறார். சென்னை மெரினா கடற்கரையில் தன்னெழுச்சியாகக் கூடியிருக்கும் இளைஞர்கள், மாணவர்கள், பொது மக்கள் தமிழக முதலமைச்சருக்கு மட்டுமல்ல, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கே அழுத்தத்தை கொடுத்திருந்தார்கள்.

(“சல்லிக்கட்டை மீட்டெடுத்த ‘மெரினா கடற்கரைப் போராட்டம்’” தொடர்ந்து வாசிக்க…)

நேற்று முழுவதும் மெரீனாவில்…

நேற்று பகலிலும் இரவு 10 மணிக்குப் பின்னரும் இருமுறை மெரீனா சென்று சில மணி நேரம் அங்கு குழுமியிருந்த மக்கள் திரளில் கலந்தேன். உரைவீச்சுகள் நடக்கும் பக்கமாகப் போகாமல் ஆங்காங்கு திரண்டு நின்று இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டும், பறை முழக்கிக் கொண்டும், மோடியை ஏசிக் கொண்டும், நடனமாடிக் கொண்டும், தண்ணீர் பாக்கெட்களை வீசிக் கொண்டும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டும், ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டும்… நின்றிருந்த மக்கள் திரளிடையே கலந்து திரிந்தேன்.

(“நேற்று முழுவதும் மெரீனாவில்…” தொடர்ந்து வாசிக்க…)

ஜல்லிக்கட்டு அனுமதி…

இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும்
50 கேள்விகள்…

முதலில் இத்தனை இலட்சம் பேர் ஒன்றாக கூடியதற்காக, இளைஞர்கள், இளைஞிகளுக்கும் மாணவ, மாணவிகளுக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகள். அரசும் காவல்துறையும் அனுமதித்தது என்றாலும் மிக பொறுமையாக நிதானமாக நேர்மையாக கொட்டும்பனியிலும் தங்கள் கொள்கைக்காக காத்திருந்த நீங்கள் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாக, ஒளிமயமான எதிர்காலத்தின் ஒளியாக மாறி இருக்கிறீர்கள்… குழந்தைகளும் பெண்களும் குடும்பங்களும் என ஒட்டுமொத்த தமிழ்நாடே உங்களை ஆச்சர்யத்தோடு வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இனிமேல் இந்த மாணவர்கள், இந்த மாணவிகள், இந்த இளைய சமுதாயம் நம் தமிழகத்தை வளமான திசைக்கு மாற்றுவார்கள் என்று நம்புகிறார்கள். நானும் அந்த கூட்டத்தில் உள்ள ஒரு தமிழன் தான்.

(“ஜல்லிக்கட்டு அனுமதி…” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்தவின் பாதையில் மைத்திரி அரசாங்கம்

(கே.சஞ்சயன்)

அரசாங்கம் வெளியிட்டு வரும் பல்வேறு செய்திகள், தகவல்கள் உண்மைக்கு முரணானதாகவும் மக்களை ஏமாற்றும் விதத்திலும் இருக்கின்றன.  ஹம்பாந்தோட்டைத் துறைமுக விவகாரத்தில், ‘வொக்ஸ்வெகன்’ கார் ஒருங்கிணைப்புத் தொழிற்சாலை, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை போன்ற விவகாரங்களில் தற்போதைய அரசாங்கம் வெளியிட்டு வரும் தகவல்கள் சர்ச்சைக்குரியவையாகவே இருந்திருக்கின்றன.  மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகளை நினைவுபடுத்துகின்ற அளவுக்குத் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளும் மாறத் தொடங்கியிருக்கின்றன.

(“மஹிந்தவின் பாதையில் மைத்திரி அரசாங்கம்” தொடர்ந்து வாசிக்க…)

‘சல்லி’யை கட்ட ஜல்லிக்கட்டுத் தடை

ஐஸ்வரியா ராய் ஐ உலக அழகி ஆக்கி அதனைத் தொடர்ந்து நான்கு வரையிலான அழகிகளை உலகதரம் என்று காட்டி இன்று இந்தியாவின் மூலை முடுக்கொல்லாம் கக்கூசு இருக்குதோ இல்லையோ அழகு நிலையங்களை திறக்க வழிசமைத்து தமது அழகு சாதனபப் பொருள்களுக்கு உலகின் மிகப்பெரிய சந்தையை இந்தியாவில் உருவாக்கிய காப்ரேட் கம்பனிகளின் சுரண்டல் அரசியல் இந்த ‘உலக அழகியல்’ இற்குள் இருக்கின்றது.

(“‘சல்லி’யை கட்ட ஜல்லிக்கட்டுத் தடை” தொடர்ந்து வாசிக்க…)