பற்குணம் A.F.C (பகுதி 82 )

யாழ்ப்பாண அரச நிர்வாகம் ஓரளவு அரசால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தது.பிரதான பிரச்சினையான உணவுப் பிரச்சினை தொடர்பாக அரச அதிபர் பஞ்சலிங்கம் எந்த அக்கறையும் காட்டவில்லை. தன் பதவியை இயக்கங்கள் அரசாங்கம் இரண்டுக்கும் நடுவே காப்பாற்ற நாடகமாடிக் கொண்டிருந்தார்.
பற்குணம் கொழும்பு யாழ்ப்பாணம் என பயணம் உணவுகள் கொண்டுவந்து சமாளித்தார் .ஆனாலும் கொழும்பில் பாதுகாப்பு அமைச்சிலுள்ள இனவாதிகள் கொஞ்சம் நெருக்கடிகள் கொடுத்தனர்.இதனிடையே ஒரு முறை உணவுகளை ரயில் மூலமாக கொண்டுவர ்மிகவும்சிரம்ப்பட்டு ஏற்பாடு செய்தார்.இந்த தகவலை சிலரிடம் பகிர்ந்து கொண்டார்.உணவுத் திணைக்களத்திலுள்ள ஊழல் பேர்வழிகள் புளொட் அமைப்புக்கு தகவல்களை வழங்கிவிட்டனர்.

(“பற்குணம் A.F.C (பகுதி 82 )” தொடர்ந்து வாசிக்க…)

ஃபிடல் காஸ்ட்ரோ: வரலாற்றின் விடுதலை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

வரலாற்றின் வழித்தடத்தில் தவிர்க்கவியலாத தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் வெகுசிலரே. அதிலும் வரலாற்றின் திசைவழியை மாற்றியவர்கள் மதிக்கத்தக்கவர்கள் மட்டுமன்றி மாண்புடையோருமாவர். உலகில் ஒடுக்கப்படும் மக்களுக்கான அயராத குரல்கள் எப்போதும் மெச்சத்தக்கன. அவ்வாறான குரல்கள் உலகெங்கும் போராடுவோருக்கு முன்உதாரணமாக, உந்துசக்தியாக இருக்கும். உலகை நேசித்த அக்குரல்கள் காலம்கடந்தும் நிலைக்கும். வரலாறு அவ்வாறான குரல்களை விடுதலை செய்யும்.

(“ஃபிடல் காஸ்ட்ரோ: வரலாற்றின் விடுதலை” தொடர்ந்து வாசிக்க…)

தவறுகளை மறவுங்கள். மீண்டும் கிளறாதீர்கள்!

ஈழத்தமிழர் வரலாற்றில் தவறு செய்யாத தலைமைகள் என்று எவரும் இல்லை. அது மிதவாதம் தீவிரவாதம் பயங்கரவாதம் என எவ்வாறு அழைக்கப்பட்டாலும் அதன் தலைமைகள், “இடக்கன்னத்தில் அடித்தால் வலக்கன்னத்தையும் காட்டு” என்று சொன்ன யேசுபிரான்கள் அல்ல. எதோ வகையில் எதிர்ப்பை, வெறுப்பை விதைத்தவர்கள். அதனால் தான் தமிழ் காங்கிரஸ் பிளவுபட்டு தமிழ் அரசு கட்சி பின்பு அதுவும் பிளவுற்று சுயாட்சி கழகம் என தொடர்ந்தது.

(“தவறுகளை மறவுங்கள். மீண்டும் கிளறாதீர்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

பல ஆயிரம் மக்கள் வீதியெங்கும் குழுமியிருக்க பிடல் காஸ்ட்ரோ இன் இறுதி யாத்திரை

வெள்ளை றோஜா மலர்களினால் சோடிக்கப்பட்ட பச்சை நிற ரஷ்யத் தயாரிப்பான இராணுவ ஜீப் வாகனத்தில் நாலு நாட்கள் கியூபாவின் பட்டி தொட்டியெல்லாம் 800 கிலோ மீற்றர் பயணம் செய்த பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி இறுதி அமைவிடமான சன்டியாகோவை இன்று அடைந்தது. வீதி எங்கும் பல ஆயிரத்தற்கு மேற்பட்ட மக்கள் குழுமி நின்ற தமது தலைவனுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். புரட்சிக்கு பின்னர் 50 வருட காலமாக கியூபாவின் ஆட்சிப் பொறுப்பில் நாட்டை வெற்றிப்பாதையில் கொண்டு சென்ற தமது தலைவனுக்கு தமது கண்ணீரை காணிக்கையாக்கி வழியனுப்பி வைத்தனர்.

(“பல ஆயிரம் மக்கள் வீதியெங்கும் குழுமியிருக்க பிடல் காஸ்ட்ரோ இன் இறுதி யாத்திரை” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 81 )

பற்குணம் யாழ்ப்பாணத்தில் வேலை செய்வது என்பது உயிரைப் பணயம் வைத்து செயலாற்றுவது போன்று இருந்தது.இராணுவம் முகாம்களில் முடக்கப்பட்டிருந்த காலம்.உணவுக் களஞ்சியங்கள் துறைமுகம் என்பன இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தன.

(“பற்குணம் A.F.C (பகுதி 81 )” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் தேசிய கூட்டமைப்பை கலைக்க வேண்டிய காலம் கனிந்துவிட்டது.

அன்புடன் தமிழ் மக்களுக்கு,

நான் பழையவற்றை கிளறுகிறேன் என எவரும் என்மீது குற்றஞ் சுமத்த முடியாது. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி பற்றியதும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள பெரும் அனர்த்தத்தை பற்றியும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பதற்காக கட்சிக்காக அயராது உழைத்த பெரியார்கள் பற்றியும் வரிசை கிரமமாக கடந்தகால சம்பவங்களை சரியாக பதிய வேண்டிய புனிதமான கடமை என்மீது சுமத்தப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவை பற்றிய விடயங்களின் எல்லைக்குள் என்னை வரையறுத்துக்கொள்வேன். இன்றைய தலைமுறையினர் எமது கடந்தகாலத்தைப் பற்றி அரைகுறையாக தெரிந்தும் பூரணமாக தெரியாமலும் இருப்பதால் எனது முயற்சி பெரிதாக பாராட்டப்படுமென எண்ணுகிறேன்.

(“தமிழ் தேசிய கூட்டமைப்பை கலைக்க வேண்டிய காலம் கனிந்துவிட்டது.” தொடர்ந்து வாசிக்க…)

பிடல் காஸ்ட்ரோவின் மரணம்: அஞ்சலியால் சர்ச்சையில் கனேடியப் பிரதமர்

கியூபாவின் முன்னாள் பிரதமர் பிடல் காஸ்ட்ரோவின் மரணத்துக்கு, கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அளித்த அஞ்சலி மூலமாக, சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ட்ரூடோவுக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

(“பிடல் காஸ்ட்ரோவின் மரணம்: அஞ்சலியால் சர்ச்சையில் கனேடியப் பிரதமர்” தொடர்ந்து வாசிக்க…)

கிளிநொச்சி தாதா சிறீதரன் ஏற்றிய சுடரும் அவரின் எதிர்தரப்பின் ஒற்றைப் பரிமாண எதிர்ப்பும்

கிளிநொச்சியின் தாதா சிறீதரன் எம்.பி கனகபுரத்தில் மாவீரர் தின நிகழ்வில் வேட்டியுடன் விளக்கேற்றிய அவலம் மரணித்தவர்களை மீண்டும் கொலை செய்ததாக இருந்தது! விதவைகளுக்கு புலம்பெயர் நாடுகளிலிருந்து நிதி வழங்க முற்பட்ட சிறிய குழு ஒன்றிடமே 20 வீதத்தை தரகுப் பணமாகக் கேட்ட சிறீதரன் எம்.பியும் அவரது அடியாள் குழுக்களும் சுருட்டும் பணத்தை சிறீதரன் ஏற்றிய நெருப்பு வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஒரு புறத்தில் இலங்கை அரசபடைகளின் நண்பன், மறுபுறத்தில் வாக்குப் பொறுக்குவதற்காக மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் தேசியவாதி என்ற முகங்களைக் கொண்ட சிறீதரன் போன்றவர்கள் தீபம் ஏற்றும் போது இலங்கை அரசே மாவீரர் தினத்தை ஒழுங்குபடுத்தினாலும் வியப்பில்லை.

(“கிளிநொச்சி தாதா சிறீதரன் ஏற்றிய சுடரும் அவரின் எதிர்தரப்பின் ஒற்றைப் பரிமாண எதிர்ப்பும்” தொடர்ந்து வாசிக்க…)

எல்லோர்க்கும் எல்லோரையும் பிடிக்கும் நாள்!

ஆங்காங்கே நடந்த வாள்வெட்டு போன்ற ஒருசில அசம்பாவிதங்கள் தவிர, ஈழ விடுதலை போரில் தம்மை ஆகுருதியாக்கிய போராளிகளின் நினவு கார்த்திகை தீப ஒளி ஏற்றும் நிகழ்வு முடிந்துவிட்டது. இனி அடுத்த கார்த்திகை மாதம் மட்டும் மௌனிப்பதும், மீண்டும் நினைவு கூருவதும் தொடரும். ஒருவர் முகநூலில் இட்ட பதிவில், கடைசி தமிழன் இருக்கும் வரை கார்த்திகை மாத நினைவு கூரல் தொடரும் என்கிறார். சாசுவதமான உண்மை. உயிர் நீர்த்த தங்கள் உறவுகளை என்றும் எவரும் மறக்க மாட்டார். அவர்களின் விளையும் பயிரை முளையில் பறிகொடுத்த மனத்தாக்கம், அவர்கள் மடியும் வரை நீடிக்கும்.

(“எல்லோர்க்கும் எல்லோரையும் பிடிக்கும் நாள்!” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 80 )

பற்குணம் யாழ்பாணத்தில் பொறுப்பேற்றபோது அரச நிர்வாகம் செயலிழந்து இருந்தது.ஆயுத குழுக்களின் தலையீடுகள் அதிகமாக இருந்தன.அரசாங்க வாகனங்களை ஆயுத குழுக்கள் பறித்து தமது தேவைகளுக்கு பாவித்தனர்.பொதுவாக எந்த அமைப்புக்கும் அரச நிர்வாகம்,அந்த அதிகாரிகளின் தேவைகள் என்பவற்றை புரிந்துகொள்ளவில்லை.அரச அதிபர் பஞ்சலிங்கம் கூட வாகனம் இன்றி அவஸ்தைப் பட்டார்.

(“பற்குணம் A.F.C (பகுதி 80 )” தொடர்ந்து வாசிக்க…)