எல்லோர்க்கும் எல்லோரையும் பிடிக்கும் நாள்!

ஆங்காங்கே நடந்த வாள்வெட்டு போன்ற ஒருசில அசம்பாவிதங்கள் தவிர, ஈழ விடுதலை போரில் தம்மை ஆகுருதியாக்கிய போராளிகளின் நினவு கார்த்திகை தீப ஒளி ஏற்றும் நிகழ்வு முடிந்துவிட்டது. இனி அடுத்த கார்த்திகை மாதம் மட்டும் மௌனிப்பதும், மீண்டும் நினைவு கூருவதும் தொடரும். ஒருவர் முகநூலில் இட்ட பதிவில், கடைசி தமிழன் இருக்கும் வரை கார்த்திகை மாத நினைவு கூரல் தொடரும் என்கிறார். சாசுவதமான உண்மை. உயிர் நீர்த்த தங்கள் உறவுகளை என்றும் எவரும் மறக்க மாட்டார். அவர்களின் விளையும் பயிரை முளையில் பறிகொடுத்த மனத்தாக்கம், அவர்கள் மடியும் வரை நீடிக்கும்.

(“எல்லோர்க்கும் எல்லோரையும் பிடிக்கும் நாள்!” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 80 )

பற்குணம் யாழ்பாணத்தில் பொறுப்பேற்றபோது அரச நிர்வாகம் செயலிழந்து இருந்தது.ஆயுத குழுக்களின் தலையீடுகள் அதிகமாக இருந்தன.அரசாங்க வாகனங்களை ஆயுத குழுக்கள் பறித்து தமது தேவைகளுக்கு பாவித்தனர்.பொதுவாக எந்த அமைப்புக்கும் அரச நிர்வாகம்,அந்த அதிகாரிகளின் தேவைகள் என்பவற்றை புரிந்துகொள்ளவில்லை.அரச அதிபர் பஞ்சலிங்கம் கூட வாகனம் இன்றி அவஸ்தைப் பட்டார்.

(“பற்குணம் A.F.C (பகுதி 80 )” தொடர்ந்து வாசிக்க…)

மரணித்தவர்கள் துயிலும் இடங்கள்

யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் நிர்மானிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களைத் தோண்டியெடுத்தே வன்னியில் பல வீதிகளைப் புனரமைத்தது இலங்கை அரசு என்பதனை பலர் அறிந்திருப்பீர்கள்.அப்படி புல்டோசர்களால் தோண்டியெடுத்துக் கொண்டு வந்து போடப்பட்ட வீதிகளில் சில இடங்களில் நமது பிள்ளைகளது தலைமயிர் கூட தாரோடு ஒட்டி வீதியில் இருந்ததைப் பார்த்ததாகப் பலர் சொல்லியிருக்கிறார்கள். மிகவும் துயரமான விடையம் இது.

(“மரணித்தவர்கள் துயிலும் இடங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 79 )

பற்குணம் சுயவிருப்பத்தின் பெயரில் யாழ்ப்பாணம். இடமாற்றம் பெற்று பதவியை பொறுப்பேற்றார்.அவர் யாழ்ப்பாணம் வருவதை பல உயர்சாதியினர் விரும்பாதபோதிலும் சூழ்நிலை காரணமாக அவரின் வரவை நிறுத்த முடியவில்லை.தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயலிழந்த காலம்.ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டம் இருந்தது.

(“பற்குணம் A.F.C (பகுதி 79 )” தொடர்ந்து வாசிக்க…)

பிடல் காஸ்ரோ: மனித குல வாழ்விற்காக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த தோழன்

(சாகரன்)

பொது உடமைத் தத்துவத்தை தனது நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமாக கொணடு செயற்பட்டவர். சர்வதேசம் எங்கும் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களுக்கு தனது தார்மீக ஆதரவை வழங்கியவர். மத்திய தென் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட ஏகாதிபத்திய எதிர்பு இடதுசாரிப் போராட்டங்களின் ஆதர்ச புருஷராக விளங்கியவர். தொடர்ந்த அங்கு கிடைத்த போராட்ட வெற்றிகளை ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்து காப்பாற்ற இன்று வரை அயராது உழைத்தவர். இடதுசாரிகளிடம் காணப்படும் நாடுகளின் இறமையை அங்கீகரித்து அந்தந்த நாடுகளின் உள் நாட்டுப் பிரச்சனைகளை அந்த நாட்டு மக்களே போராடி, பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில் இறுதிவரை தெளிவாக செயற்பட்டவர். எந்த வகையிலும் ஆக்கிரமிப்பு அற்ற உதவிகளை விடுதலை வேண்டிப் போராடிய நாடுகளுக்கு வழங்கியவர் இதனை நாம் தென் ஆபிரிக்காவின் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய ஆதரவில் இருந்து மற்றய எதனையும் விட அதிகம் அறியலாம்.

(“பிடல் காஸ்ரோ: மனித குல வாழ்விற்காக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த தோழன்” தொடர்ந்து வாசிக்க…)

போராட்டம் அராஜகம்-மாவீரர் நாள்

(விஜய பாஸ்கரன்)

இது புலிகளின் மாவீரர் வாரம். சிலர் புலிகளை போராளிகளாக தியாகிகளாக நினைக்கின்றனர். நாங்கள் அவர்களை ஒரு பயங்கரவாதிகளாகவே பார்க்கின்றோம். அவர்கள் நமது மண்ணில் நடாத்திய கொலைகள் மோசமானவை.போராட்டத்தின் பெயரால் நாட்டின் அனைத்து மக்களையும் அச்சுறுத்தியவர்கள். ஆயுதம் ஏந்திய சகல அமைப்புகளும் ஏதோ ஒரு வகையில் கொலைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள். ஆனால் அதற்கு அடிப்படையாக புலிகளே காரணமாக இருந்துள்ளனர். புலிகள் சக அமைப்பினர் அவர்களது ஆதரவாளர்கள் மீது வன்முறைகளை ஏவி விடவில்லை என்றால் சக அமைப்பினர்கள் நடாத்திய வன்முறைகள் கொலைகள் தானாகவே கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

(“போராட்டம் அராஜகம்-மாவீரர் நாள்” தொடர்ந்து வாசிக்க…)

மாவீரர் நாளில் கடந்த காலத்தை மீண்டும் நினைவில் கொள்வோம்!

2009ல் பதிவான கட்டுரை காலவெள்ளம் கடந்து சென்றும், நிதர்சனமாய் இன்றும் சொல்லும் ஒரே செய்தி, உசுப்பேத்தி உசுப்பேத்தி எம் இளம்தளிர்ளை இனியும் பலிக்கடா ஆக்காதீர்கள் என்பதே. இது கட்டுரையாளர் குறிப்பிடும் காசி ஆனந்தனுக்கு மட்டுமல்ல, அண்மையில் சென்னையில் நடந்த “மக்கள் சிவில் உரிமை கழக” நிகழ்வில் கலந்து, பின்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சுரேஸ் பிரேமசந்திரன் போன்றவர்களுக்கும் பொருந்தும். ஒரு சம்பவத்தை மட்டும் குறிப்பிட்டு அந்த பதிவை உங்கள் பார்வைக்கு மீண்டும் பதிவிட விரும்புகிறேன்.

(“மாவீரர் நாளில் கடந்த காலத்தை மீண்டும் நினைவில் கொள்வோம்!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும் இருப்பும் : மறைக்கப்படும் உண்மைகள்!

தமிழ் மக்கள் பேரவையின் பத்திரிகையாளர் மாநாடு கொழும்பில் நேற்று 22/11/16 அன்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றவாத அரசியல் தலைமை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தைப் பிரதியிடுவதற்கு முனைந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோல்வியடைந்த போது அதற்கு மாற்றாகத் தோற்றுவிக்கப்பட்டதே தமிழ் மக்கள் பேரவை. ஜேர்மனியில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள், தமது அரசியல் பினாமிகளை உருவாக்கும் நோக்கத்துடன் 2015 ஆம் ஆண்டு மாவை சேனாதிராசாவை அழைத்துப் பேச்சுக்கள் நடத்தின. அப் பேச்சுக்களின் அடிப்படையில் புலம்பெயர் அமைப்புக்கள் தாம் சுட்டுவிரலை நீட்டும் சிலரை கூட்டமைப்பின் வேட்பாளர்களாக நியமிக்குமாறு கேட்டுக்கொண்டன. அதற்கு கூட்டமைப்பு இணங்க மறுத்ததன் பின்புலத்திலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான பிரச்சாரமும் நிதித் திரட்டலும் புலம்பெயர் நாடுகளில் முடுக்கிவிடப்பட்டன. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலில் படு தோல்வியடைந்ததும், மீண்டும் ஜேர்மனியில் ஒன்று கூடிய அமைப்புக்கள் தமிழ் மக்கள் பேரவையைத் தோற்றுவித்தன. இதுவே தமிழ் மக்கள் பேரவைக்கான தோற்றத்தின் அடிப்படை.

(“தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும் இருப்பும் : மறைக்கப்படும் உண்மைகள்!” தொடர்ந்து வாசிக்க…)

சைப்ரஸ்: அமைதியைத் தேடி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

போரின்றி அமைதியும் அமைதியின்றிப் போரும் பொருளற்றன. அமைதியின் தேவை பெரும்பாலும் காலங்கடந்தே உணரப்படுகிறது. உணரும்போது தாமதம் மிகுந்து அமைதியின் அனைத்துக் கதவுகளும் இறுகச் சாத்திக் கிடக்கலாம். அமைதி இலகுவில் இயலுவதில்லை; அவ்வாறு இயல்வது வெகுகாலம் நிலைப்பதில்லை.  எனவேதான், கடவுளைக் கண்டாலும் அமைதியைக் காணவியலாது என்று சொல்வதுண்டு. அமைதியின் விலை மதிக்கவியலாதது. அது நிலைக்கும் போது உருவாகும் சூழலுக்கும் மகிழ்ச்சிக்கும் ஈடில்லை.

(“சைப்ரஸ்: அமைதியைத் தேடி” தொடர்ந்து வாசிக்க…)

தொழில் ஆணையாளர் கூட்டு ஒப்பந்தத்தை திருத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்ட நடவடிக்கை

  • மக்கள் தொழிலாளர் சங்கம் ஆணையாளருக்கு அறிவிப்பு

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா அச் சங்கத்தின் சார்பாக தொழில் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள 2016.11.18ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம், 18 மாதங்கள் கழிந்த பின்னர் 500/= அடிப்படை சம்பளம் உட்பட 730/= சம்பள உயர்வுடன் கைச்சாத்திடப்பட்ட சம்பள கூட்டு ஒப்பந்தம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நெறிமுறையான எதிர்பார்ப்பு (legitimate expectation), இயற்கை நீதி (Natural Justice) மற்றும் ஏற்கனவே நிலைபெற்ற உரிமைகள் (Acquired or existed rights) என்பற்றுக்கு எதிராக இருக்கின்றமையை சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, குறித்த சம்பள கூட்டு ஒப்பந்தத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டு சட்ட அந்தஸ்த்தினை வழங்க வேண்டாம் என அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, ஒப்பந்தத்தின் தர்ப்புகளான கம்பனிகள் சார்பான இலங்கை முதலாளிமார் சம்மேளனம், தொழிலாளர்களின் தரப்பான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட கூட்டு தொழிற்சங்கங்களின் நிலையம் என்பவற்றுக்கு அறிவித்து தொழிலாளர்களுக்கு எதிராக உள்ள சரத்துக்களை நீக்கி சட்ட பூர்வமானதும், நியாயமானதும் ஒப்புறவானதுமானதுமான சம்பள கூட்டு ஒப்பந்தத்தை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளார். அதனை இரு வார காலத்தினுள் செய்ய தவறுமிடத்து கூட்டு ஒப்பந்தத்திற்கான சட்ட பாதுகாவலனாக இருக்கும் தொழில் ஆணையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

(“தொழில் ஆணையாளர் கூட்டு ஒப்பந்தத்தை திருத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்ட நடவடிக்கை” தொடர்ந்து வாசிக்க…)