யாழ் பல்கலைக் கழக தாக்குதலும் கதிர்காம கந்தனின் எதிர் ஒலியும்

(சாகரன்)

2009 மே மாத போரில் தோற்றது புலிகள் மட்டும் அல்ல நாமும்தான் என்ற உணர்வலைகளை தமிழ் மக்கள் மனங்களில் இருந்து அகற்றும் சகோரத்துவ செயற்பாடுகளை மகிந்த கூட்டமைப்போ அல்லது நல்லாட்சி மைதிரியினரோ செய்யவில்லை. இதனைச் செய்து முடிப்பதற்கான இராஜதந்திர அரசியல் செயற்பாடுகளை சம்மந்தர் கூட்டமைப்போ அல்லது விக்னேஸ்வரன் பேரவையே செய்யவில்லை. இதற்கான உடன்பாடோ திறமையோ இவர்களிடம் இல்லை. ஏன் விருப்பமும் இல்லை. மகிந்தவுடன் இணைந்து இணக்க அரசியலைச் செய்தவர்களும் இன்றும் மைத்திரியுடன் இணக்க அரசியல் செய்ய வாய்பு இருககுதா என்பதற்கு அப்பால் பரந்து பட்ட கூட்டுத்தலமையை ஏற்படுத்துவதில் வெற்றியை பெறவில்லை. ஏன் இதற்கு அதிகம் முயற்சிக்கவில்லை என்றே கூறலாம்.

(“யாழ் பல்கலைக் கழக தாக்குதலும் கதிர்காம கந்தனின் எதிர் ஒலியும்” தொடர்ந்து வாசிக்க…)

ஓமந்தையும் தாண்டிக்குளமும்

வவுனியா மாவட்டத்துக்கான பொருளாதார மையத்தை ஓமந்தையிலா? தாண்டிக்குளத்திலா? அமைப்பது என்பது தொடர்பிலான சர்ச்சை கடந்த சில வாரங்களாக மேலெழுந்திருந்தது. சர்ச்சைகள் இன்றி உள்ளக பேச்சுக்களினூடாக இறுதி முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டிய விடயமொன்றினை வடக்கு மாகாணத்தை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் சர்ச்சையாக மாற்றிவிட்டிருக்கின்றார்கள். அது, மக்களிடையே குறிப்பிட்டளவான குழப்பங்களையும் குரோதங்களையும் ஏற்படுத்தக் காரணமாகி விட்டது.

(“ஓமந்தையும் தாண்டிக்குளமும்” தொடர்ந்து வாசிக்க…)

என்னுடைய கணவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன்

யுத்தத்தின்போது 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் எனது இரண்டு பிள்ளைகளுடன் உயிர் பிழைத்த நான் இன்னும் எனது கணவரை தேடிக்கொண்டிருக்கின்றேன் என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இன்று நடைபெற்ற இலங்கை தொடர்பான உப குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேலயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

(“என்னுடைய கணவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன்” தொடர்ந்து வாசிக்க…)

மனிதக்கடத்தல்களில் மீண்டும் இடம்பிடித்த இலங்கை – அமெரிக்கா அறிவிப்பு

தொழில்களுக்காக மனிதக்கடத்தல் அமெரிக்கப்பட்டியலில் இலங்கை, நான்காவது ஆண்டாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளுக்கு மனித கடத்தலை மேற்கொள்ளும் நாடுகளில் இலங்கையையும் கண்காணிப்பு பட்டியலில் அமெரிக்கா உட்படுத்தியுள்ளது. அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கையின்படி இலங்கையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொழிலாளர்களாக பலவந்தமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வேலை செய்விக்கப்படுகின்றனர். அத்துடன் பாலியல் கடத்தல்களும் இடம்பெறுகின்றன.

(“மனிதக்கடத்தல்களில் மீண்டும் இடம்பிடித்த இலங்கை – அமெரிக்கா அறிவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

இவ்வாண்டுக்குள் 20 ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை!

இந்த ஆண்டு இறுதிக்குள் 20ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 11ஆம் திகதி 1700 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

(“இவ்வாண்டுக்குள் 20 ஆயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை!” தொடர்ந்து வாசிக்க…)

ஜெனீவாவில் புலம்பெயர் புலி அமைப்புகள் நடத்தும் துப்புக்கெட்ட அரசியலின் 10 பலன்கள்

1.    சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டிய இனப்படுகொலையை ஜெனீவாவின் மூடிய அறைகளுக்குள் முடக்கி உலக மக்களின் பார்வையிலிருந்து அன்னியப்படுத்தினார்கள்.
2. போராட்ட அரசியலை லொபி அரசியல் என்ற குறுக்கு வழிக்குள் முடக்கினார்கள்.
3. நாட்டில் தமது முகவர்களை இனம் கண்டு அவர்கள் ஊடாக தமிழ்ப் பேசும் மக்களுக்குப் போலி நம்பிக்கைகளை வழங்கி அவர்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்தனர்.
4. அமெரிக்காவின் கைப்பொம்மை அரசான ரனில்-மைத்திரி பேரினவாத அரசை நிறுவ உதவினர்.
5. ஜெனீவா முன்றலில் போராட்டம் என்ற பெயரில் ‘எமது நாடு தமிழீழம்இ எமது தலைவர் பிரபாகரன்’ என்று மட்டும் முழக்கமிட்டு உலக மக்களின் பார்வையிலிருந்து ஈழப் போராட்டத்தை அன்னியப்படுத்தினர்.
6. கடந்த எழு வருடங்களாக ஜெனீவாவைக் காரணமாக முன்வைத்து முழுமையான போராட்டத்தையும் முடக்கினர்.
7. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் உலகம் முழுவதும் அழிவுகளை நடத்தும் அமெரிக்காவிடம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறும் போர்க்குற்றத்தைத் தண்டிக்குமாறும் கோரிக்கை விடுத்துஇ மக்களின் தியாக உணர்வை கொச்சைப்படுத்தினர்.
8. அமெரிக்க அரசு இலங்கை அரசை வழி நடத்தஇ அமெரிக்க அரசின் ஆதரவாளர்களாகச் செயற்பட்டு இலங்கை அரசின் மறைமுக ஆதரவாளர்களாயினர்.
9. உலகின் அழிக்கப்பட்ட போராட்ட அமைப்புக்கள் தம்மைச் சுதாகரித்துக்கொண்டு தம்மை மீளமைத்துக்கொண்ட படிப்பினைகளை எல்லாம் நிராகரித்து அமெரிக்கஇ இந்திய அரசுகளின் அடியாள் படைகளாகச் செயற்பட்டனர்ஃ
10. தமது உள்ளூர் பினாமிகள் ஊடாக இன்றும் அமெரிக்காவையும் அதன் அடிமை நிறுவனமான ஐ.நாவையும் இன்னும் நம்புமாறு உள்ளூர் மக்களை ஏமாற்றுகின்றனர்.

ரெலோ இயக்கத்தில் இணையும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 24):

(ஐயர்)

பிரபாகரன் குழுவில் அவரோடிருந்த அனைத்து உறுப்பினர்களும் மத்திய குழு ஒன்றை அமைப்பதற்கான முடிவிற்கு வருமாறு அவரை வற்புறுத்துகின்றனர். மத்திய குழு அமைப்பது என்பது இயக்கத்தின் இராணுவ அரசியலுக்கு எதிரானது என்ற கருத்தில் பிரபாகரன் மிகவும் உறுதியாயிருக்கின்றார். இதே வேளை குட்டிமணி தங்கத்துரை போன்றோர் தமது தொழிலை மட்டுப்படுத்திக்கொண்டு அரச எதிர்ப்பு இராணுவ நடவடிக்கைகளில் தமது கவனத்தைக் குவிக்கின்றனர். அப்போது அவர்கள் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) என்ற அமைப்பாக உருவாகியிருந்தனர் என அறிந்திருந்தோம்.

(“ரெலோ இயக்கத்தில் இணையும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 24):” தொடர்ந்து வாசிக்க…)

புளொட் தோழர் சின்ன மென்டிஸ்

இவர் யாழ் மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றிய காலத்தில் எமது ஊரின் ஒரு பகுதியான வேரக்காடு என்னும் பகுதியில் புளொட் உறுப்பினர்களுக்கு இராணுவப் பயிற்சி அளித்துவந்தனர்.இதை அண்மித்த பகுதியில் இரண்டு சிறு குளங்களும் உன்னிய வயல்வெளி என்னும் பகுதியும் உண்டு. ஒரு நாள் பயிற்சி அளிக்கும்போது இரண்டு உறுப்பினர்கள் பெரியகுளத்தில் தாண்டு மூச்சுத் திணறி மரணமானார்கள்.இவர்கள் புன்னாலைக் கட்டுவன் பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதி என அழைக்கப்படும் சமூகத்தில் இருந்து வந்தவர்கள். இவரகளின் மரணம் தொடர்பாக சின்னமெண்டிஸ் சந்தேகம் கொண்டார்.ஏனெனில் அந்தக் குளம் ஆழமற்றது.அதனால் அவர் சந்தேகம் கொண்டார்.பின்னர் இறந்தவர்களின் பின்புலம்,பயிற்சி அளித்தவரகளின் பின்புலம் என்பவற்றை ஆராய்ந்தார்.

(“புளொட் தோழர் சின்ன மென்டிஸ்” தொடர்ந்து வாசிக்க…)

வெஞ்சினம் வராதோ இந்த வீணர்களின் செயல் கேட்டு

கொழும்பில் துறைமுகத்தை தாக்கச் சென்றவர்கள் தாக்குதல் நடத்தாமல் திரும்பி வந்ததற்காக சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். தண்டனை தாங்கமுடியாமல் அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். தமிழினி இந்த உண்மையைக் கூறியிருக்கிறார். ஆனால் தமிழினிக்கும் தெரியாத பல இரகசிங்கள் புலிகளிடம் உண்டு. புலிகளின் புலனாய்வுத் துறையின் மோசமான நடவடிக்கைகள் புலித் தளபதிகள், உறுப்பினர்கள் எல்லோருக்கும் தெரிவதில்லை. ராஜீவ் கொலை பற்றி புலிகளின் தளபதியாக இருந்த கருணாவுக்கும் தெரிந்திருக்கவில்லை. அது சமபந்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அவர்கள் வெளியில் வரும்போது அந்த உண்மைகளைக் கூறுவார்கள்.

(“வெஞ்சினம் வராதோ இந்த வீணர்களின் செயல் கேட்டு” தொடர்ந்து வாசிக்க…)

1990 ஆம் ஆண்டு திரு பாண்டியன் அவர்கள் கூறுவது…….

1987களில் ஈழ‌ போராளிகள் மூலம் ஜெயவர்த்தனா அரசு வழிக்கு வரவில்லை என்றால் படையெடுக்க இந்தியா தயாராக இருந்தது, அதற்கான திட்டங்கள் தயாராக வகுக்கபட்ட இடம் இந்தியாவின் கோவா. அந்த தாக்குதல் திட்டத்தை வகுத்த தளபதியும் தமிழரே வடமராட்சியில் புலிகள் அழியும் நிலையில் இந்தியா உணவுபொருள் வீசியது,இலங்கை அரசுக்கு உணவு போட்ட விமானத்தால் குண்டுகளையும் போடமுடியும் என்று சொல்லாமல் சொல்லியது இந்திய அரசு, அடுத்த கட்டத்தை உணர்ந்த சிங்கள அரசு ராணுவநடவடிக்கையினை நிறுத்திவிட்டு அமைதியானது.

(“1990 ஆம் ஆண்டு திரு பாண்டியன் அவர்கள் கூறுவது…….” தொடர்ந்து வாசிக்க…)