தியாகிகள் தின மாதத்தில் அணைந்த தியாக தீபம்! [3]

ஸ்டாலின் அண்ணா மோட்டார் எறிகணை தொழில்நுட்பம் பற்றிய அறிவை, அது சம்மந்தமான ஆங்கில புத்தகங்களை வாசித்தே தெரிந்து கொண்டார். அதில் தனக்கு தோன்றிய யுக்திகளையும் பயன்படுத்தி, எமக்கு தேவையான விதத்தில் அதனை வடிவமைத்தார். ஒருமுறை மேலெழுந்து நீண்டதூரம் சென்று இலக்கை அடைந்த பின் வீழ்ந்து, ஏற்படும் அதிர்வில் வெடிக்கும் வகையில் வடிவமைத்த மோட்டார், பரீட்சாத்தத்தின் போது, ஈடு செய்ய முடியாத உயிர் இழப்பை ஏற்படுத்தியது. பாலஸ்தீனத்தில் பயிற்சிபெற்ற தோழர் ராஜன் அவர்கள், பரீட்சாத்தத்தில் ஈடுபட்டவேளை மோட்டார் செல், பரல் உள்ளே வெடித்ததால், மிகப்பெரிய இரும்பு துண்டு, அவர் வயிற்றை பிளந்து உயிர் பிரிந்தது. அந்த உன்னதமான தோழர் உயிர் பிரியும் வேளையிலும் கூறியது, இயக்கத்தை கட்டுக்கோப்பாக நடத்துங்கள், தோழர் நாபாவின் கரங்களை பலப்படுத்துங்கள் என்பதே.

(“தியாகிகள் தின மாதத்தில் அணைந்த தியாக தீபம்! [3]” தொடர்ந்து வாசிக்க…)

கும்பகோணம் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் படத்திறப்பு விழா

 

கும்பகோணம் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் அவர்களின் படத்திறப்பு விழா அங்குள்ள ராயா மாஹாலில் காலை 10 மணிக்கு நடைபெற்றது.இந்த வைபவத்தில் குடந்தை சட்டமன்ற உறுப்பினர்(தி.முக.) சாக்கோட்டை அன்பழகன் தலைமைதாங்கி நடத்தினார். இந் நிகழ்வில் திராவிட கழக தலைவர் வீரமணி,மூத்தபத்திரிகையாளர் ரி.எஸ்.எஸ்.மணி,இந்திய தேசிய காங்கிரஸ் சி.ஜி.மணி,பெண்ணியலாளர் தோழர்ஓவியா,தோழர்சுரேஸ்பிரேமச்சந்திரன்(ஈ.பி.ஆர்.எல்.எப்),தோழர்சுகுசிறதரன்(பத்மநாபா மக்கள் முன்னணி –தமிழர் சமூக ஜனநாயக கட்சி),தோழர்சிவசக்திஆந்தன் பா.உ(ஈ.பி.ஆர்.எல்.எப்) மற்றும் திராவிடக் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

(“கும்பகோணம் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் படத்திறப்பு விழா” தொடர்ந்து வாசிக்க…)

26 வது தியாகிகள் தினம் – பாரிஸ்

பத்மநாபா மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் 26 வது தியாகிகள் தினம் கடந்த ஞாயிறு 19-06-2016 மாலை பிரான்ஸசின் தலைநகர் பரீசில் அனுஸ்டிக்கப்பட்டது. இதில் தோழர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், சமூகசெயல்பாட்டாளர்கள், மக்கள்அமைப்புக்கள, கட்சிகளின் பிரதிநிதிகள் என பலதரப்பினரும் கலந்துகொண்ட உணர்வுபூர்வமானதும் அர்த்தபபூர்வமானதுமான நிகழ்வுகள் அமைந்தது.

(“26 வது தியாகிகள் தினம் – பாரிஸ்” தொடர்ந்து வாசிக்க…)

துரையப்பா விளையாட்டு அரங்கம்

இது புதிய பிரச்சினைக்கான திறவுகோல்

இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் துரையப்பா என்ற பெயர் நிலையானது.தமிழ் அரசியல்வாதிகளில் பதவியை முழுமையாக பயன்படுத்தி அதிகம் சேவை செய்தவர்கள் ஒருவர் சாவகச்சேரி பா.உ. வே.குமாரசாமி.அடுத்தவர் மேயர் அல்பிரட் துரையப்பா.

(“துரையப்பா விளையாட்டு அரங்கம்” தொடர்ந்து வாசிக்க…)

தியாகிகள் தின மாதத்தில் அணைந்த தியாக தீபம்! [1]

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஸ்தாபகர் பத்மநாபா உட்பட, 13 தோழர்கள் பலி கொடுக்கப்பட்ட ஜூன் 19 தினத்தை, தியாகிகள் தினம் என பிரகடனப்படுத்தி தாம் இழந்த போராளிகள் உட்பட, அனைத்து விடுதலை போராளிகள், பொதுமக்களின் உன்னதமான தியாகத்தை நினைவு கூர்ந்து உலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும், வருடாவருடம் அஞ்சலி செலுத்த தோழர்கள் தவறுவதில்லை. இன்று பல அணிகளாக அவர்கள் பிரிந்து நின்றாலும், இந்த தினத்தில் அவர்கள் மனதில் நிறைந்து நிற்பது, பத்மநாபாவின் நினைவுகளே. அந்த தியாகிகள் தின வரிசையில் 26வது நினைவு நாளுக்கு சில வாரங்களுக்கு முன்பு, ஈ பி ஆர் எல் எப் இன் கலங்கரைவிளக்கம் ஒளி இழந்துபோனது. 2016 ஜூன் 1ம் திகதி ஈ பி ஆர் எல் எப் இன் இந்திய பிதாமகன், கும்பகோணத்து திராவிட தமிழன், எங்கள் ஸ்டாலின் அண்ணா இவ் உலக வாழ்வை விட்டகன்றார். ஈழ மக்கள் விடுதலைக்காக சுடர் விட்டு பிரகாசித்த தியாக தீபம் அணைந்துபோனது.

(“தியாகிகள் தின மாதத்தில் அணைந்த தியாக தீபம்! [1]” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு மாகாணசபையில் நினைவுகூரப்பட வேண்டிய தியாகிகள் தினம்.

தோழர் பத்மநாபாவும் அவரது தோழர்களும் இந்தியாவில் வைத்து 1990ஆம் ஆcanadaண்டு தமிழீழ விடுதலைப்புலிகளால் கொடூரமாக கொலைசெய்யப்பட்டனர். அந்த கூட்டு படுகொலை இடம்பெற்ற ஜூன் மாதம் 19ஆம் திகதியை ஈழமக்கள்புரட்சிகர முன்னணியினர்(நாபா) அதாவது தற்போதைய தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர் தியாகிகள் தினமாக பிரகடனம் செய்து வருடாவருடம் நினைவுகூர்ந்து வருகின்றார்கள்.

(“வடக்கு மாகாணசபையில் நினைவுகூரப்பட வேண்டிய தியாகிகள் தினம்.” தொடர்ந்து வாசிக்க…)

கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!(பகுதி 4)

(தோழர் ஜேம்ஸ்)
 
தோழர் ஸ்ராலின் அண்ணரால் எமக்கு நெருக்கமான உறவுக்குள் வந்த சிலரையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். சேஷாஸ்திரி என்ற எமது அரசியல் வித்தகர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த தோழர் பாலதண்டாயுதம் என்பவரின் மகள் சுஜாதாவின் முன்னை நாள் வாழ்கைத் துணைவர். இவர்கள் இருவரும் மாக்சிய லெனிசிய செயற்பாட்டாளர்களுடன் நெருங்கிய உறவுகளை வைத்திருந்தவர்கள். இவ்விருவரும் எமது விடுதலை அமைப்பிற்கும் ஈழவிடுதலைக்கும் செய்த செயற்பாடுகள், அர்பணிப்புக்கள் பற்றி தனியாக ஒரு புத்தகமே எழுதலாம். இன்றவரை சுஜாதா தமிழ்நாட்டில் உள்ள இடதுசாரிகள் மத்தியில் உறவுகளைப் பேணிய வண்ணம் அடிமட்ட மக்களுடன் வேலை செய்பவர். நான் தமிழ் நாடு செல்லும் போதெல்லாம் அறிவிக்காமலே அவரின் வீடு சென்ற அழவழாவி விருந்துண்டு வருவது வழக்கம்.

(“கண்டேன் தோழர் ஸ்ராலின் அண்ணனை…….!(பகுதி 4)” தொடர்ந்து வாசிக்க…)

குட்டிமணி தங்கத்துரை தேவன் ஆகிய 3வரும் பின்னர் ஜெகனும் கைது செய்யப்பட தகவல் கொடுத்தவர் பிரபாகரனே.

‘தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்’ முன்னோடி மட்டுமல்ல, எமது தமிழ் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலம் 1970 முதல் தமது மக்களின் விடுதலைக்காக உழைத்தவர்களில் தங்கத்துரை (தங்கவேல்), குட்டிமணி (யோகச்சந்திரன்), தேவன் (சுப்பிரமணியம்)ஆகிய மூவரும் 5.4.81 அன்று பருத்தித்துறை மணற்காட்டில் வைத்து கடற்படை, இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். குறிப்பிட்ட மூவரும் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு போகிறார்கள் என்பது எப்படி கடற்படைக்குத் தெரிய வந்தது? இதற்கான பதில் இன்னமும் மர்மமாகவே உள்ளது. இவர்கள் வழக்குகளில் ஈடுபட்டு இவர்களை அடிக்கடி பனாகொடை முகாமுக்கு போய் சந்தித்தவரான சட்டத்தரணி கரிகாலன், தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் என்ற தலைப்பில் ஜுனியர் விகடனில் எழுதிய தொடர் கட்டுரையில் இப்படியாகக் குறிப்பிடுகின்றார்.

(“குட்டிமணி தங்கத்துரை தேவன் ஆகிய 3வரும் பின்னர் ஜெகனும் கைது செய்யப்பட தகவல் கொடுத்தவர் பிரபாகரனே.” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் றொபேட்டின் மக்கள் பணிகளை நெஞ்சினில் சுமப்போம்!

(தோழர் ஜேம்ஸ்)

இன்று தோழர் றொபேட்டின் 13 வது நினைவு தினம். ஜனநாயகத்தை மீட்பதற்காகவும் மக்களின்; சமாதான சகவாழ்வை உறுதிப்படுத்துவதற்காகவும் தனது உயிரை அர்பணித்த ஒரு போராளியின் நினைவுநாள் இன்று. யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்த றொபேட்டின் அரசியல் காரியாலயத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை யாழ் வேம்படி மகளிர் கல்லூரியின் மாணவர் விடுதியில் பதுங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிப் பாசிஸ்ட்களின் கோழைத்தனமான சினைப்பர் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்தார். இது நடைபெற்றது ஜுன் 14, 2003 ஆண்டு. 2002 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிரபாகரனுக்கும் ரணில் விக்கரமசிங்காவிற்கும் இடையே நோர்வே அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கைப் படி தோழர் றொபேட் கொலை செய்யப்பட்ட காலகட்டத்திலும் போர் நிறுத்தமும், ஸ்கண்டிநேவியன் நாடுகளின் சர்சதேசக் கண்காணிப்பு குழுவும் தமிழ் பிரதேசங்கள் எங்கும் செயற்பாட்டிலிருந்த வேளையிலேயே இப் படுகொலை நடைபெற்றுள்ளது.

(“தோழர் றொபேட்டின் மக்கள் பணிகளை நெஞ்சினில் சுமப்போம்!” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் சுபத்திரன் (றொபேட்) அவர்களுக்கு தோழர்கள் அஞ்சலி.

யாழ்ப்பாத்தில் உள்ள பத்மநாபா மக்கள் முன்னணி அலுவகத்தில் இன்று (14.06.2016) காலை 11 மணியளவில் தோழர் சிறிதரன் தலைமையில் தோழர் சுபத்திரனுக்கு(றொபேட்) தோழர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.