இறுதி அஸ்திரம் பயங்கரமானது; ஆனால், தவிர்க்கமுடியாது

பயணக்கட்டுப்பாடுகளை விதியுங்கள்; மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை கட்டுப்படுத்துங்கள்; இல்லையேல், கொரோனா மரணங்களையும் தொற்றாளர்களின் ஏறுமுகத்தையும் கட்டுப்படுத்தவே முடியாதென சுகாதார தரப்பினரும் நிபுணர்களும் வலியுறுத்தும் போதெல்லாம், ‘செவிடன் காதில் ஊதிய சங்கொலி’யைப் போன்றிருந்த அரசாங்கம், இறுதி அஸ்திரத்தைக் கையில் எடுக்கவுள்ளதாக பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. 

“மனிதனை வாழவிட்டு நீங்களும் வாழுங்கள்” என்று சொன்ன மகத்தான ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய்!

(Karthikeyan Chinnappa)

ரஷிய தலைநகரான மாஸ்கோவிலிருந்து 225கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது “யாஸ்னயா பாலியானா” கிராமம் அங்கே தான் 400,ஹெக்டேர் பரப்பளவில் பர்ச் மரங்களால் சூழப்பட்ட ரஷியாவின் மிகபிரபலமான எழுத்தாளராக விளங்கிய #லியோடால்ஸ்டாய் அவர்களின் பண்ணை அமைந்துள்ளது.

செல்வச்சந்நிதி அசாதாரணமான கோயில்

(பேராசிரியர் கா. சிவத்தம்பி)


தொண்டைமானாற்றிலுள்ள ‘செல்வச்சந்நிதி’ எனும் தலம் அதற்குரிய பக்திக் கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் பொழுது அதிகம் ஆராயப்படாத ஒரு தலமாகவேயுள்ளது. இலங்கையின் சைவக்கோயில்கள் பற்றிய முக்கிய ஆராய்ச்சிகள் சமூக அதிகாரமுடை யோரின் கோயில்களையே பெரிதும் சுற்றி நின்றுள்ளன. இது மனித இயல்பின் பால்பட்டதே.

ரிஷாட்டின் பாராளுமன்ற உரை: தொனித்த இரு விடயங்கள்

(மொஹமட் பாதுஷா)

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர், இலங்கை வரலாற்றில் முதன்முதலாக, பாராளுமன்றத்தில் தனது நிலைப்பாட்டையும் கருத்துகளையும் முன்வைத்துள்ளார். அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஆவார்.

விடை கொடுக்க மனமின்றி விடை கொடுக்கின்றோம்…..!

(தோழர் ஜேம்ஸ்)

‘தோழர் சென்னை வருகின்றேன் அடுத்த மாதம் கிராமங்களை நோக்கி பயணித்து அந்த மக்களுடன் பழக வேண்டும்….” என்றேன். இது இரு வருடங்களுக்கு முன்பு…

நாற்பது வருட கால தோழமை கலந்த நட்பு ‘வாருங்கள் தோழரே போவோம் கிராமங்களை சுற்றிப்பார்போம் நண்பர்கள் குழாமாக…”

ஓ! மானே மானே உன்னைத்தானே.. எதிர்காலம்?

(எப். முபாரக்)

இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் உள்ள பிரசித்தி பெற்ற இடங்களை வெளிநாட்டு, உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகள் பார்வையிடுவர். இதன்மூலம்  பெருமளவான அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தரக்கூடிய ஒரு துறையாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.  கடந்த வருடத்திலிருந்து, கொடிய நோயான கொவிட்- 19 பெருந்தொற்று நோயின் தாக்கம் காரணமாக, நாட்டின் சுற்றுலாத்துறை முடங்கியதோடு, தற்போது கொஞ்சம் கொஞ்சமாகச் செழித்து வருகின்றது.

‘சமூக நீதி’ கோரிக்கையாக மாற வேண்டிய நீதிக்கான கோஷங்கள்

(மயில்வாகனம் திலகராஜா – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)

கடந்த இரண்டு வாரங்களும் மலையகத்தில் மட்டுமல்லாது மலையகத்துக்கு வெளியேயும் இலங்கையில் ‘நீதி’ கோரிய கோஷங்கள் எழுந்திருந்தன. அந்த கோஷத்தை முன்னிறுத்தச் செய்தது ஒரு சிறுமியின் உயிர். அந்த சிறுமியின் துர்பாக்கிய நிலை மரணத்துக்கு நீதி வேண்டிய கோஷங்களுக்கு மத்தியில் ‘அரசியல்’ நிகழ்ச்சி நிரல்களும் தம்மைப் பிணைத்துக்கொண்டன என்பது வெளிப்படை. ஆனால், அதனையும் தாண்டிய சமூக ‘உணர்ச்சி’ நிலை மலையகத்தில் ஆத்மார்த்தமாக மேம்பட்டு நின்றது.

மாத்தளை கார்த்திகேசு

கலையும்¸ இலக்கியமும் தன் வாழ்க்கையின் ஒரு பகுதி என வாழ்ந்துக் காட்டிய கார்த்தி இன்று எம்மிடம் விடை பெற்றுச் சென்று விட்டார் மேடை நாடகக் கலைஞனாக வானொலி கலைஞனாக சினிமா கலைஞனாக இலக்கியக்காரனாக இவை யாவற்றுக்கும் மேலாக சக மனிதனோடு நெருக்கமாக வாழ்ந்துக் காட்டிய பண்பாளன்!

முகமது அலி ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை ஆற்றில் வீசியெறிந்தது ஏன்?

சொந்த நாட்டில் வசிக்கும் கறுப்பின மக்களை இழிவாக நடத்தும் அமெரிக்கா, பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் வியட்நாமுக்கு சென்று யாரைக் காப்பாற்றப் போகிறது என்று கேள்வி எழுப்பியவர் குத்துச் சண்டை வீரர் முகமது அலி.

டோக்யோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கியை உச்சத்துக்குக் கொண்டு சென்ற சிங்கப் பெண்கள்

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைக்கும் வேட்கையுடன் களமிறங்கிய இந்திய மகளிர் ஹாக்கி அணி பிரிட்டன் அணியுடன் போராடித் தோல்வியடைந்தது. ஆட்ட நேர இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் வெற்றி பெற்றது.