ஒன்றை இழந்துவிட்டு, பரிகாரங்களைத் தேடி அலைவதை விட, நல்லது, கெட்டதை அறிந்து, வகை பிரித்துக் கையாள்வது யதார்த்தத்துக்கு உசிதமாய் அமையும். ஏனெனில், கொவிட்-19 நோய் தொண்டைக்குழியை மூடி, உயிரைப் பறிப்பது மட்டுமன்றி, கண் பார்வையையும் பறிப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
Category: பொதுவிடயம்
General
அடுத்தவர் சட்டியை அல்ல; உங்கள் சட்டியில் கருகுவதைப் பாருங்கள்
அராஜக எம்ஜிஆர் ஆட்சிக்கு ரஜினி, கமல், பாஜக எதற்கு …?

(சாவித்திரி கண்ணன்)
மாற்று அரசியலைப் பேசும் ரஜினியும் ’’எம்.ஜி.ஆர் ஆட்சி தருவேன்’’ என்கிறார்
ஊழலற்ற நேர்மையான ஆட்சியைப் பேசும் கமலஹாசனும் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடுகிறார்!
திராவிட கட்சிகளை ஒழிப்பதே இலக்கு என்ற பாஜகவும் எம்.ஜி.ஆரை கொண்டாடுகிறது..!
இதை, ’’சுயமாக ஒரு ஆட்சியை தருவதற்கு எங்களுக்கு துப்பில்லை’’ என்பதற்கான அவர்களின் ஒப்புதல் வாக்கு மூலமாகவே நாம் பார்க்கவேண்டும்!
உண்மை!!
கொரோனா வைரஸ் கதையாடல்-1: இன்னொரு பெருந்தொற்றைத் தவிர்க்க இயலுமா?
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையிலான ஊசலாட்டத்தின் நடுவே, மனிதகுலம் முக்கியமான புள்ளியொன்றில் நிற்கின்றது. ஒருபுறம், கொவிட்-19 நோய்த் தொற்றுத் தொடங்கி, ஓராண்டாகி விட்டது. மறுபுறம், இந்தப் பெருந்தொற்றுக்கான தடுப்பு மருந்து, பரிசோதனைகளின் பின்னர், பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, இந்தப் பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பணியை, தடுப்பு மருந்தின் மீது போட்டுவிட்டு, உலகம் அப்பால் நகர்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. உலக நாடுகளின் தலைவர்கள், அமைப்புகள் அந்தத் தொனியிலேயே பேசிப் பரிகசித்துவிட்டு, அப்பால் நகர்வது நடக்கிறது.
துறைமுகப் பட்டினமொன்றின் கதை.

(வேதநாயகம் தபேந்திரன்)
”தோணி போனாலும் துறை போகாது ” இது எம் முன்னோரின் அனுபவமொழி .துறைமுகம் ( Harbour ) என்பதையே துறை என்றனர்.
யாழ்குடாநாடு துறைமுகங்கள் பலவற்றைக் கொண்டு கடல் வாணிபத்தில் சிறப்பாக இருந்தது ஒரு காலம். சிறியளவிலான துறைமுகங்கள் பல இருந்தன. இன்னமும் பெருமளவில் மீன்பிடி நோக்குடன் இயங்குகின்றன.
நீர் முகாமைத்துவம்

(கணேஸ்)
இஸ்ரேலின் ஜோர்டான் பள்ளத்தாக்கு , சாக்கடல் மற்றும் யாழ் குடாநாடும் நீர் முகாமைத்துவமும் இயற்கையின் விதிகளை மனிதர் மாற்ற முயலும் போது என்ன விபரீதங்கள் நடக்கலாம் என்பதற்கு இஸ்ரேலின் ஜோர்டான் பள்ளத்தாக்கு ஒரு உதாரணம். சாக்கடலுக்கு ஜோர்டான் நதி நீரை கொண்டுவரும் அதேவேளை அந்த பாலைவன காலநிலை பெருமளவான நீரை ஆவியாக்குவதால் பல மில்லியன் வருடங்களாக அதன் சமநிலையை பேண உதவிசெய்தது.
கடந்த அரை நூற்றாண்டுகளாக சிரியா , ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஜோர்டான் நதியின் நீரை ஏறக்குறைய முழுவதும் எடுத்து விடுவதால் சாக்கடலின் நீர் மட்டம் 30 வருடத்தில் 30 மீட்டர் குறைந்து விட்டது. இதன் காரணமாக சாக்கடலின் இருபுறமும் sinkholes தோன்றி பல ரிசோர்ட் டுகளையும் , விவசாய நிலங்களையும் இல்லாமல் செய்து விட்டது.
இப்பொழுது இதை சரி செய்வது எப்படி என்று தலையை போட்டு உடைக்கிறார்கள்இதே போன்று யாழ் குடாநாட்டில் நிலாவரை போன்ற சில இடங்களில் sinkholes அவதானிக்கப்பட்டுள்ளது. இதுவும் நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக நாங்கள் உறிஞ்சுவதால் ஏற்பட்டதாக இருக்கலாம். இவை இரண்டுமே பிழையான நீர் முகாமைத்துவத்தால் ஏற்பட்டது என்றால் மிகையில்லை.
மழைநீர் சேமிப்பு
குளங்களை காத்து புனரமைக்காதுவிடின் யாழ் நீருள் மூழ்கும்”

இரண்டு ஆண்டுக்குமுன்னரே எச்சரித்தார் எந்திரி ராமதாசன்
குடாநாட்டில் எதிர்கொள்ளப்படும் நீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள குளங்கள் அனைத்தையும் பராமரிக்கவேண்டிய தேவையேற்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்ததாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.ஆனால் அவற்றில் 300 குளங்கள் வரை இருந்த இடமே தெரியாது போயிருப்பதாக சிரேஸ்ட பொறியியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான மா.இராமதாசன் தெரிவித்துள்ளார்.
16 குளங்கள் கட்டிய கதை
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் முதியவர் ஒருவர் தனது கிராமத்தில் 16 குளங்க ள் அமைத்து அந்தப் பகுதியை பசுமை ஆக்கி உள்ளார். கர்நாடகா மாநிலம் மலவள்ளி தாலுகாவில் அமைந்துள்ள தாசணடோடி என்னும் கிராமம் குந்தினிபெட்டா மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கடந்த 40 வருடங்களுக்கு முன்பு இந்த இடம் வெறும் பாறைகளாக இருந்தது. மேலும் ஒரே குண்டும் குழியுமாக இருந்தது. மழை பெய்வதே அபூர்வமாகவும் அப்படியே மழை பெய்தாலும் அது உடனடியாக வரண்டு விடுவதுமாக இருந்தது.