மாப்பிள்ளைச் சொதி…. பொம்புளைச் சொதி ஆகுமா…?

(சாகரன்)

சொதியின்றி அமையாது எமது சாப்பாடு… தமிழர் வாழ்க்கை. அது இடியப்பம் சோறு என்றாக முதன்மையாக அமைந்தாலும் சில இடங்களில் புட்டிற்கும் இது இன்றி அமையாது உள்ளே செல்லாது என்றாகிப் போன வாழ்க்கை.

இரு தேசங்களின் அரசியல் போக்கை மாற்றிய கொலைகள்

(சாகர சமரன்)

சாந்தன் போன்றவர்கள் இல்லை என்றால் காத்தான் பூத்தான் போல் நானும் ஈழத்தில் வாழ்ந்திருக்கலாம்.

இந்த வாசகத்தின் அர்த்தங்களை நாம் புரிந்து கொள்வதற்கு சாந்தனின் மரண ஊரவலத்தைப் பற்றி பேசியாக வேண்டும்

தோழர் ரமணி (சிவசுந்தரம் செல்வகுமார்)யின் 60வது பிறந்தநாள் நினைவுகள்!

(Nagalingam Srisabesan )

தோழர் ரமணி (சிவசுந்தரம் செல்வகுமார்)யின் 60வது பிறந்தநாள் நினைவுகள்!ரமணி என்று அரசியற் தோழர்களாலும் செல்வியென்று உறவினர்களாலும் அழைக்கப்பட்ட தோழர் சிவசுந்தரம் செல்வகுமாரின் 60வது பிறந்தநாள் இன்றாகும். வடமராட்சியிலுள்ள பொலிகண்டியில் 29 பெப்ரவரி 1964 லீப் நாளில் பிறந்தார்.

இந்திய – மீனவர் பிரச்சினைக்கு புறக்கணிப்பு தீர்வைத் தராது

(லக்ஸ்மன்)

எல்லை தாண்டிய மீன்பிடி காரணமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கும் கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவில் இந்திய நாட்டின் பக்தர்கள் கலந்து கொள்ளாமைக்கும் இருக்கின்ற தொடர்பு சற்று வித்தியாசமானதுதான்.

5ஆவது வருடத்தை நோக்கி நகரும் “நீதிக்கான ஏக்கம்”

(ஜே.ஏ.ஜோர்ஜ்)

 “திடீரென சத்தமொன்று கேட்டது. ஒரு கணம் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. நான் கண்ணை திறந்து பார்த்தபோது, எனக்கு அருகில் காயமடைந்து விழுந்த எனது தம்பியை அங்கிருந்தவர்கள் முச்சக்கரவண்டியில் ஏற்றியதை பார்த்தேன். பின்னர் என தம்பி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ளதை இரண்டு நாட்களுக்கு பின்னரே என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. இரண்டு நாட்களாக தம்பியை பற்றி எந்த தகவலும் இல்லை” இவ்வாறு தனது கதையை பகிர்ந்து கொள்கிறார் கட்டுவாப்பிட்டிவில் வசிக்கும் 22 வயதான தினுக்கி கௌசல்யா.

உக்ரேனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம்

உக்ரேன் மீது ரஷ்யா தனது முழு அளவிலான இராணுவ நடவடிக்கையை தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. போர் தொடங்கியதில் இருந்தே அண்டை நாடான போலந்து, உக்ரேனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான போலந்து, உக்ரேனில் இருந்து வந்த அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன், உக்ரேனுக்கு ஆயுதங்களையும் வழங்கியது.

சர்ச்சையை கிளப்பும் இந்தியாவின் 29ஆம் பிராந்திய சர்ச்சை

இலங்கையின் அரசியலில் அண்டைய நாடான இந்தியாவின் தலையீடு நேரடியாகவும், மறைமுகமாகவும் நீண்ட காலமாகப் பேணப்படுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்…

1. இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை. 🦜

2. இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை. 🦜

3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன. 🦜

4. மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை. 🦜

5. இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன.🦜

6. தனது ஆகாரத்தை அவை மாற்றுவதில்லை. 🦜

7. தனது உடலில் வலுவுள்ளவரை உழைக்கின்றன. இரவு அல்லாது மற்ற நேரங்களில் ஓய்வு எடுப்பதில்லை. 🦜

8. நோய் வந்தால் உண்ணுவதில்லை. சுகமான பின் உணவு எடுத்துக்கொள்கிறது. 🦜

9. தன் குழந்தைகளுக்கு பரிபூரணமான அன்பை கொடுத்து வளர்க்கின்றன. 🦜

10. கடுமையான உழைப்பாளிகளாயிருப்பதால், இதயம், கல்லீரல், நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை. 🦜

11. இயற்கைக்கு எதிராக ஒருபோதும் செயலாற்றுவதில்லை. தனது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் இயற்க்கையிலிருந்து பெற்று கொள்கின்றன. 🦜

12. தனது கூடு மற்றும் சுற்று சுற்று சூழல்களை அனுசரனையோடு பாதுகாக்கின்றன.

🦜இதில் சில படிப்பினைகளையாவது நாம் பாடமாக எடுத்துக்கொண்டால் வாழ்வு சிறப்பது திண்ணம். 🦜🦢

பெஞ்சமின்

தமிழ்ப் பெண்புலியும், என்/எங்கள் அனுபவங்களும்…

“நிரோமியின் தாயார் இந்திய வம்சாவளியினராய் இருந்தததால் நிரோமியின் தாயை, தகப்பனின் உயர்சாதி சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதே இருக்கின்றது. 77ம் கலவரத்தின் பின் நோர்ட்டன் பிரிட்ஜிலிருக்கும் தகப்பன் இனி சிங்களப்பகுதியிற்குள் இருப்பது ஆபத்தென யாழ்ப்பாணத்திற்கு இவர்களை அனுப்பிவிட்டு வேலைக்க்காய் மத்திய கிழக்கிற்குப் போய்விடுகின்றார்.

இன்று உலக தாய்மொழி தினம்

(பெரியசாமிப்பிள்ளை செல்வராஜ் – முன்னாள்  தூதுவர் மஸ்கெலியா)

ஓர்  இனத்தின் அடையாளமாக விளங்குவது மொழி.  மொழியினது வளர்ச்சியினை சார்ந்தே அந்த இனத்தின் கலை,  கலாசார, சமூக, பண்பாட்டு அம்சங்கள் வளர்ச்சியுறுகின்றன.