எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த….! (Part 4)

யாழ்ப்பாணப் பயணத்திற்கான தயாரிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எனது குடும்பத்துடன் எமது நட்புக் குடும்பம் ஒன்றின் பிரதான ‘புரோக்கிராமிற்குள்’ இணைக்கப்பட்டதே எனது பயண அனுபவங்கள். எனக்கான தனியான பயண விடயங்கள் இதில் உள்ளடக்கப்படக் கூடிய வாய்புகள் எனக்கு அதிகம் இருக்கவில்லை. ஆனாலும் மற்றயவர்களின் பயணச் செயற்பாட்டிற்குள் என்னை இணைத்துக் கொண்டு பல அனுபவங்களைப் பெற்றேன். அவற்றை பதிவு செய்ய விளைகின்றேன்.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த….! (Part 4)” தொடர்ந்து வாசிக்க…)

“என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்”

1983 ஜூலை இனக்கலவரத்தின் பின்னர்
‘அருண் – செல்லப்பா” தம்பதிகள் தாயகம் திரும்புகின்றனர்.

கர்த்தரும் முருகரும் கைவிட்ட காலமது!
மனிதருள் மாணிக்கம் சிங்களத்தினுள்ளும் உள்ளதென்று நிறுவிய காலமும் அதுவே!

(““என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்”” தொடர்ந்து வாசிக்க…)

மத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா?

(கே. சஞ்சயன்)
“இந்திய நிறுவனத்துடன் இணைந்து, மத்தல விமான நிலையத்தை இயக்க முடியும் என்று நம்புகிறோம்; எனவே. எல்லாவற்றையும் சீனா தான் மேற்கொள்ளுகிறது என்று யாரும் இனிமேல் குற்றம்சாட்ட முடியாது” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கூறியிருந்தார். (“மத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறதா இந்தியா?” தொடர்ந்து வாசிக்க…)

குரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
கலர்கலராய் காகிதங்கள் கப்பலாகி, கடல் நடுவே காத்துக்கிடப்பது போல, உண்மைகள் மறைக்கப்பட்டு, ஊடக ஒளியில் புதிய சித்திரம் எமக்காய் தீட்டப்படுகிறது. உணர்வுப் பிழம்புகளாய் அதை ஏற்றுக்கொண்டாடி, நாம் மகிழ்ந்திருக்கிறோம்; திருவிழா முடிந்தது. ஈழத்தமிழரும் குரோஷியர்களிடம் கற்க, நிறைய உண்டென,வெற்றியில் மகிழ்ந்திருப்போம். உண்மைகளைக் கொஞ்சமும் தேடி அறிய,ஆவலாய் இல்லாத சமூகம், தனக்கான புதைகுழியைத் தானே தோண்டுகிறது.

(“குரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்” தொடர்ந்து வாசிக்க…)

இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல: புத்தக வெளியீடு

(Karunakaran Sivarasa)
கடந்த புதன்கிழமை (18.07.2018) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட மூன்று நூல்களின் வெளியீடும் அறிமுகப்படுத்தலும் நடந்தது. (“இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல: புத்தக வெளியீடு” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த….! (Part 3)

(கடந்த வருடம் தாயகம் சென்ற போது எனக்கு கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. (பலரின் வேண்டுகோளுக்கு இணங்கள் இதனை இங்கு பதிவு செய்கின்றேன் – சமரன்)

பசி வயிற்றைக் கிண்ட மன்னார் நகரில் ஏதாவது சிற்றுண்டி உண்டால் நல்லா இருக்கும் என்று எமது பயணத்தின் திரும்பலில் முடிவு செய்தோம். எவ்வளவு வெயில் வெக்கை என்றாலும் குளிர் பானத்தை விட சூடான தேனீர் அருந்துதல் இதமாக இருக்கும் என்பது நாம் எம்வாழ்நிலையில் இருந்து இயவாக்கம் அடைந்து எமது உடம்பின் டிஎன்ஏ இல் ‘புரொக்கிராம்’ செய்யப்பட்ட விடயமாக அமைந்துவிட்டது. எமது பிள்ளைகளில் பாதி பேரும் பெற்றோராகிய நாமும் தேநீரும் சிற்றுண்டியும் எடுக்க ஏனையவர்கள் குளிப்பானத்துடன் தமது விருப்பை நிறைவேற்றிக் கொண்டனர். (“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த….! (Part 3)” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு மாகாண சபை செய்­தி­ருக்­கும் சாதனை

எது எதுக்­கெல்­லாமோ முன்­னு­தா­ர­ண­மா­கத் திக­ழும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட வடக்கு மாகாண சபை கடை­சி­யில் சபை­யின் அமைச்­ச­ரைப் பதவி விலக்க முத­ல­மைச்­ச­ருக்கு அதி­கா­ரம் இருக்­கி­றதா இல்­லையா என்­கிற சட்­டக் கேள்­விக்குப் பதில் தேடித் தரு­வ­து­டன் தனது ஆட்­சியை நிறைவு செய்­யப்­போ­கின்­றது.

(“வடக்கு மாகாண சபை செய்­தி­ருக்­கும் சாதனை” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…..(Part 3)

கறுப்பு நண்டு வாங்கிச் சமைக்கலாம் என்று தேடிய நாங்கள் ஞாயிறு அன்று தொழிலுக்கு செல்வதில்லை எனவே கிடைக்காது என்பதற்குள் கடற்தொழிலாளர்களின் இந்த ஓய்வு நாட்களுக்குள் ஒழித்திருக்கும் கட்டாய உழைப்புப் பறிப்பு மதங்களை முன்னிலைப்படுத்தி நடைபெறுவதினால் அன்றைய தினம் தொழிலுக்கு போவதை தவிர்த்து ஓய்வெடுக்கும் ஒரு நிலமையை கத்தோலிக்க மதத்தை பின்பற்றும் கடற்தொழிலாளர்களிடம் அதிகம் ஏற்படுத்தியிருக்கின்றது.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…..(Part 3)” தொடர்ந்து வாசிக்க…)

நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா, க்ஸோசா என்ற ஆப்பிரிக்க பழங்குடி இனத்தில் ஜூலை 18, 1918 ல் பிறந்தார். அப்போது அவருக்கு வைத்த பெயர், ’ரோலிஹ்லஹ்லா’ (Rolihlahla). இந்த பெயருக்கு ’பல கிளைகளுடைய மரம்’ அல்லது ’பிரச்சினைகளை உருவாக்குபவர்’ என்று அர்த்தம். இந்த பெயர் மாற்றப்பட்டதற்கு அதன் அர்த்தம் காரணமல்ல. உச்சரிக்க கடினமாக இருந்ததால் அவருடைய ஆரம்பப் பள்ளி ஆசிரியை, ’நெல்சன்’ என மாற்றி வைத்தார்.

(“நெல்சன் மண்டேலா” தொடர்ந்து வாசிக்க…)

அஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கி குற்றச்சாட்டும்

(புருஜோத்தமன் தங்கமயில்)
வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், தன்னுடைய பாதுகாப்புக்காக, பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கி ஒன்றைப் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்திருக்கின்றார்.

(“அஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கி குற்றச்சாட்டும்” தொடர்ந்து வாசிக்க…)