புகலிட இலக்கிய சந்திப்பின் 47 வது தொடர் இம்முறை இலங்கையின் மலையகத்தில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 29ஆம் 30ஆம் திகதிகளில்இடம்பெறவுள்ள இந்நிகழ்வு கொட்டகலை யில் நடக்க ஏற்பாடாகியுள்ளது.சுமார் முப்பது வருடகாலமாக புகலிட நாடுகளில் இடம்பெற்று வந்த இந்த சந்திப்பு தொடரானது யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையிலும் நடத்தப்பட்டு வருகின்றது.
47 வது இலக்கியச் சந்திப்பு இடம் – கொட்டகலை

(“புகலிட இலக்கிய சந்திப்பின் 47 வது தொடர் இம்முறை இலங்கையின் மலையகத்தில் இடம்பெறவுள்ளது.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்நாட்டில் 27 வது தியாகிகள் தினம்

தமிழ்நாட்டில் தியாகிகள் தினம் நினைவுகூரப்பட்டது. தமிழ்நாட்டின் புளல் அகதிமுகாமில் வாழும் தோழர்கள் மற்றும் தமிழ் நாட்டின் முற்போக்கு ஜனநாயக சக்திகள் தமது அஞசலிகளை செலுத்தினார்கள்.

கனடாவில் 27 வது தியாகிகள் தினம்

இம்முறையும் வருடம் தோறும் நடைபெறும் தியாகிகள் தின நிகழ்வு கனடாவில் ஜுன் 24 ம் திகதி பிப 6 மணிக்கு ஆரம்பமாகி இரவு 10:30 மணி வரைக்கும் நடைபெற்றது. தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT)யினருடன் இணைந்து ஈபிடிபி, ரெலோ, புளட், ஈரோஸ், ஈபிஆர்எல்எவ்., சம உரிமை இயக்கம், இலங்கையின் பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுடன், பொது மக்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(“கனடாவில் 27 வது தியாகிகள் தினம்” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் அதிகாரம் அற்ற இனங்களாக தமிழ் பேசும் மக்களை மாற்றும் சதி திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுப்பு!

(சாட்டோ மன்சூர்)
சுதந்திர இலங்கையின் அரசியல் யாப்பில் சிறுபான்மை இனத்தவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த உரிமைகளும், பாதுகாப்பும் காலவோட்டத்தில் படிப்படியாகப் பறிமுதல் செய்யப்பட்டும் செயலிழக்கப்பட்டும் வருவதை யாவருமறிவர். இதை மறைமுகமாகவும், நாசூக்காகவும் இங்குள்ள தேசிய அரசியற் கட்சிகளே நன்கு திட்டமிடப்பட்ட கோட்பாட்டின் அடிப்படையில் தொடர்ந்து செய்து வருகின்றன. சோல்பரி அரசியல் சாசனப்படி பாராளுமன்றத்திற்கு 95 பிரதிநிதிகள் தெரிவு செய்யக்கூடியதாகவும் அவற்றுள் 42 பிரதிநிதிகள் சிறுபான்மையினரால் தெரிவு செய்யக்கூடிய வகையிலும் அமைந்திருந்தது.

(“அரசியல் அதிகாரம் அற்ற இனங்களாக தமிழ் பேசும் மக்களை மாற்றும் சதி திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுப்பு!” தொடர்ந்து வாசிக்க…)

இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த தலைவர்

சரியாக பத்தாண்டுகளுக்கு முன்பு ஆந்திரபிரதேசத்தில் இளைஞர் காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் ராகுல்காந்தியைச் சந்திக்க நேர்ந்தது.
அரசியலை அதிகாரத்தின் பிடியில் இருந்து விடுவித்து, மீண்டும் சேவைக்கான களமாக மாற்ற வேண்டும் என்கிற அவரது தீராத பெருங்கனவின் முதல் முயற்சி அந்த நிகழ்ச்சி. அந்த நிகழ்வில் ஒரு சிலரை அவர் சில மணித்துளிகளில் இனம் கண்டு கொண்டார். அதில் நானும் ஒருத்தி. அவரது உள்ளுணர்வு அபாரமானது என்பதை பின்னாளில் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்திருக்கிறேன்.
அடுத்த சில மாதங்களில் அவர் இளைஞர் காங்கிரசில் இந்தியா முழுவதும் நேர்மையான, களப்பணியில் விருப்பமுள்ள, மக்களை நேசிக்கின்ற இளைய தலைமுறைத் தலைவர்களை கண்டடைய ஒரு குழுவை நியமித்தார்.

(“இந்தியாவுக்கு கிடைத்த மிகச்சிறந்த தலைவர்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு முதல்வர் வினோத செயல்!?.

வடக்கு முதல்வர் மீது தமக்கு நம்பிக்கையும் தமது தொடர் ஆதரவும் இருப்பதாக ஆளுநருக்கு எழுத்து மூலம் அறிவித்து அதில் கையொப்பம் இட்டவர்களில் 15வது பெயரும் கையொப்பமும் சாட்சாத் வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் அவர்களுடையதே.

(“வடக்கு முதல்வர் வினோத செயல்!?.” தொடர்ந்து வாசிக்க…)

மரியாதைக்கு செய்ய கூடிய முஸ்லிம் தலைவர்கள் இன்று இல்லை!

கேள்வி:- உங்கள் குடும்பத்தின் அரசியல் பின்னணி என்ன?
பதில்:- எனது தந்தை கே. கே. மரைக்கார். பெயர் எடுத்த முன்னணி வர்த்தகர். இவர் கல்முனை பட்டினசபை தலைவராக விளங்கினார். சுயேச்சையாக தேர்தல் கேட்டு வென்றிருந்தார்.. இவருடைய காலத்தில் கல்முனை பல துறைகளிலும் செழித்து காணப்பட்டது. இவரே எனக்கு முன்னுதாரணம் ஆவார்.

(“மரியாதைக்கு செய்ய கூடிய முஸ்லிம் தலைவர்கள் இன்று இல்லை!” தொடர்ந்து வாசிக்க…)

சம்மந்தர், விக்னேஸ்வரன் சமரச உடன்பாடு…?

(சாகரன்)

ரொம்பவும் வெட்கப்படவேண்டிய விடயம். இந்த சமரசம் தவறுகளை ஒருவகையில் நியாயப்படுத்தி அதனைத் தொடருங்கள் என்று ஏந்த கூச்சமும் இன்றி அனுமதி வழங்கிய சமரசம். ஒரே வர்த்தைச் க்க சேர்ந்த இரு அணியினர் இடையே ஏற்பட்ட உடன்பாடு. மக்கள் நலன்களை முழுமையாக பின்தள்ளி தமது இஷ்டத்திற்கு மக்கள் பணங்களை வளங்களை தவறான வழியில் கையாடல் செய்த குற்றங்களை மக்களே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஏதேச்சாகராமான செயற்பாடு. அறம் இங்கு செய்துவிட்டது இதற்கு வேறு மதத் தலைவர்கள் சமரம் வீசி ஆசீர்வாதம் வழங்கிய செயற்பாடுகள் இதற்கு சமரசம் என்று பெயர் வேறு. தூ கேடு கெட்ட செயற்பாடு.

(“சம்மந்தர், விக்னேஸ்வரன் சமரச உடன்பாடு…?” தொடர்ந்து வாசிக்க…)

27வது தியாகிகள் தினம்

தோழர்பத்மநாபா மற்றும் தோழர்கள் பன்னிருவர் புலிகளால் சென்னை கோடம்பாக்கத்தில் வைத்து படுகாலை செய்யப்பட்ட ஜீன் 19 நாளை நாங்கள் தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கின்றோம். இந்த நாளில் ஈழ விடுதலைப்போராட்டத்தில் மரணித்த அனைவரையும் நினைவுகூரும் பொதுநாளாகக்கொண்டு நாங்கள் ஒருங்கிணைந்து ஒன்று கூடி அஞ்சலி செலுத்துகிறோம்.தோழர்பத்மநாபா அவர்களைப்போல் ஒரு மனிதரை, தலைவரை நாங்கள் இதுவரை பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை அவர் இல்லாத தலைமை இன்று வரை வெற்றிடமாக உள்ளதையே உணர்கிறோம்.
(“27வது தியாகிகள் தினம்” தொடர்ந்து வாசிக்க…)