தோழர் சுகு இன் புத்தக வெளியீடு

(சாகரன்)

இவன் என் தோழன். 1978 அறிமுகம்… அதுவும் நல்லூரில் ஒரு ரியூட்டறி கொட்டகையில்  அரசியல் வகுப்பில். மெலிந்த உரிவம் கண்ணை மூடியபடி தலையை ஒரு பக்கமா சாய்தபடி பல மர்க்சியப் புத்தகங்களை பங்கங்கள் வாரியாக மேற்கோள் காட்டி அரசியல் வகுப்பு. இந்த வயதில் இவ்வளவு அரசியல் புத்தகங்களை அதுவும் மாக்சிச புத்தகங்களை எவ்வாறு வாசித்து கொண்டார் என்ற பிரிமிப்பு எமது நாட்டுச் சூழலுக்கு எற்ப கருத்துரைகளை வழங்கினார். அவர் வேறுயாரும் இல்லை தோழர் சுகு சிறீதரன் திருநாவுக்கரசு.

(“தோழர் சுகு இன் புத்தக வெளியீடு” தொடர்ந்து வாசிக்க…)

தலைவர் சிறீ சபாரத்தினத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தி நிற்போம்

31 வருடங்களின் முன்பு மே மாதம் ஈழவிடுதலை போராட்டத்திற்கான இறங்கு முகத்திற்கு ஆரம்ப சுழி போட்ட நாள் புலிகள் தனது ஆயுத மேலாதிக்கத்தை.. செயற்பாட்டை… தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு எதிராக ஆரம்பித்த நாள். அந்த விடுதலை அமைப்பின் செயற்பாடுகளை முடக்குகின்றோம் என்று பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து புறப்பட்டு அதன் போராளிகள் பலரைக் கொன்று இறுதியாக அதன் தலைவர் சிறீசபாரத்தினத்தை கொன்று ஈழவிடுதலைப் போராட்டத்திற்கான சாவுமணியை அடித்துக் கொண்டனர். ஈழவிடுதலை அமைப்புக்களுக்கிடையேயான ஐக்கிய முன்னணி ஈழத் தேசிய விடுதலை முன்னணியை முன்நோக்கி நகர்த்துவதில் சிறீசபாரத்தினத்னதிதும் அவர் தலமைதாங்கிய ரெலோ அமைப்பினதும் செயற்பாடுகள் வரலாற்றில் குறித்துக் கொள்ளப்படவேண்டியவை.

(“தலைவர் சிறீ சபாரத்தினத்திற்கும் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கும் அஞ்சலி செலுத்தி நிற்போம்” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் குடாநாட்டில் தலித்துக்கள் ஒரு தனித்தேசிய இனம் – சுகன்

புலம்பெயர்ந்த அகதியாக தன்னை அடையாளப்படுத்தும் சுகன் ஓர் முன்னாள் போராளியும் தீவிர பாஸிச எதிர்ப்பாளரும் இலக்கியவாதியுமாவார். ஆக்காட்டி 14வது இதழுக்கு வழங்கிய நேர்காணலில் யாழ் குடாநாட்டில் தலித்துக்கள் ஒரு தனித்தேசிய இனம் எனக் குறிப்பிடும் சுகன் „முஸ்லீம்கள் அடைந்த அரசியல் திரட்சியையும் பேரம் பேசும் வலுவையும் போல, தலித்துகளால் இன்றுவரை அடையமுடியவில்லை. தலித்துகள் தமிழர் என்ற அடையாளத்தில் ஏமாற்றப்படுவதும் சாதிரீதியாக மைய அரசியலிலிருந்து அகற்றப்படுவதும் இங்கு வெளிப்படையான நிகழ்வு. பேரம் பேசும் அரசியல் திரட்சியாக தலித் சமூகம் தம்மை ஒழுங்கமைக்காத வரை இந்த ஏமாற்றம் தொடரும்.’ என்கின்றார்.

(“யாழ் குடாநாட்டில் தலித்துக்கள் ஒரு தனித்தேசிய இனம் – சுகன்” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் சுகு ஸ்ரீதரனின் “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக” என்ற நூல்

தோழர் சுகு ஸ்ரீதரனின் “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக” என்ற நூல் நாளை 06.05.2017 மாலை 04.00 மணிக்கு யாழ்ப்பாணம், பிரதான வீதியில் உள்ள திருமறைக்கலாமன்றத்தில் வெளியிடப்படுகிறது.
நிகழ்வில் சுகுவின் அரசியல் சிந்தனைகள், செயற்பாடுகள் பற்றியும் அவர் எழுதியிருக்கும் “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக” என்ற நூல் பற்றியும் உரையாடல்கள் நடக்கின்றன.
புதிய தலைமுறையுடன் தன்னுடைய சிந்தனைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள முற்படும் தோழர் சுகுவின் நோக்கும் அணுகுமுறையும் வரவேற்கப்பட வேண்டியது. போதனைகளாக இல்லாமல், பகிர்தலாகவே சுகு எப்போதும் தன்னுடைய கருத்துகளை முன்வைப்பவர். இதுவே இந்த நூலிலும் காணப்படுகிறது.

(“தோழர் சுகு ஸ்ரீதரனின் “மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக” என்ற நூல்” தொடர்ந்து வாசிக்க…)

இவர்கள் போராளிகளா?

1987 ஐப்பசி பத்தாம் நாள் புலிகள் இந்திய இராணுவத்துடன் மோதலை தொடங்கினார்கள் .அப்போது நான் சண்டிலிப்பாயில் இருந்தேன்.மறுநாள் காலை ஏழு மணியளவில் ஒரு இந்திய இராணுவ வண்டியில் சில இராணுவத்தினருடன் அவர்கள் காரைநகரை நோக்கிப் போய்க்கொண்டிரைந்தார்கள்.அப்போது நான் எனது உறவினர், ஒருவருடன் வீதியில், நின்று கதைத்துக்,கொண்டிருந்தேன்.
ஒரு சில மணி நேரங்கள் கழித்து நான் சங்கானை சந்தைக்கு மரக்கறி வாங்க போனேன்.அப்போது ஒருவர் வடக்கத்தையாங்களை வெட்டவேண்டும்.விடக்கூடாது என சத்தம் போட்டு கொண்டே வந்தார்.

(“இவர்கள் போராளிகளா?” தொடர்ந்து வாசிக்க…)

மசிடோனியா: அதிகாரத்துக்கான அடுத்த ஆடுகளம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அதிகாரத்துக்கான ஆடுகளங்கள் தொடர்ந்தும் மாறுவன. மாறுகின்ற உலக ஒழுங்கு புதிய சவால்களை உருவாக்குகின்றது; புதிய அரங்காடிகளைத் தோற்றுவிக்கிறது. புதிய அதிகாரச் சமநிலையும் புதிய கூட்டணிகளும் உருப்பெறுகின்றன. இதன் பின்னணியில், பூகோள அரசியல் அரங்கில், புதிய களங்கள் உருவாகவும் உருவாக்கவும்படுகின்றன. புவியியல்சார் ஆதிக்கத்துக்கான அவா புதிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தோற்றுவிக்கின்றது. அவ்வாறு தோற்றம்பெறுவன அதிகாரத்துக்கான புதிய ஆடுகளமாகின்றன.

(“மசிடோனியா: அதிகாரத்துக்கான அடுத்த ஆடுகளம்” தொடர்ந்து வாசிக்க…)

அமிர்தலிங்கம் கொலைக்கான புதிய காரணங்கள்

அமிர்தலிங்கம் கொலைக்கான புதிய காரணங்களை மு. திரு நாவுக்கரசு தமிழ்வின் என்ற செத்தவீட்டு இணையத்தளத்தில் தனது வழமையான ‘ஆய்வு’ கட்டுரையாக பதிவுசெய்துள்ளார். புலிகளுக்கு இறுதிவரையும் வக்காத்து வாங்கி புலிகளும் மக்களும் அழிந்து போய்க்கொண்டிருந்த இறுதிக்காலகட்டத்தில் இந்தியா தப்பிப்போன திரு நா இப்படி ஒரு திருகு தாளம் விடுகிறார். சுட்டவனும் இல்லை சுடச்சொன்னவனும் இல்லை சுடப்பட்டவரும் இல்லை என்பதால் எதையும் எழுதலாம் என்ற மனப்பிறழ்வு கொண்ட மனிதன் தான் இதை செய்யமுடியும்.

(“அமிர்தலிங்கம் கொலைக்கான புதிய காரணங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் நாட்டில் இருக்கும் அகதிகளின் கதை தெரியுமா?

(கருணாகரன்)

தமிழ்நாடு திருச்சியில் வாழவந்தான் கோட்டையில் 10க்கு 10 அளவில் அமைக்கப்பட்ட குடிசையில், இருபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ விதிக்கப்பட்டிருக்கிறது முனியாண்டியின் குடும்பம். பெயர்தான் வாழவந்தான கோட்டையே தவிர, வாழ வந்தவர்கள் அத்தனை பேரின் வாழ்க்கை என்னவோ, பிச்சைப் பாத்திரத்தில்தான் தாளம் போட்டுக்கொண்டிருக்கிறது. மழை வந்தால், ஒழுகும் நிலையில் இருக்கிறது முனியாண்டியின் குடிசை.

(“தமிழ் நாட்டில் இருக்கும் அகதிகளின் கதை தெரியுமா?” தொடர்ந்து வாசிக்க…)

உழைப்பாளர் தினம்: மனித இயலுமையிற்குள் உழைப்பில் ஈடுபட போராடுவோம்!

குடும்பத்தில் ஒருவர் பொருள் ஈட்டலுக்கான உழைப்பில் ஈடுபட மற்றவர் குடும்பத்தை பராமரிக்கும் உழைப்பிலும் ஈடுபட்டு சந்தோஷங்களை கண்டு வந்ததே மனித குல வரலாறாக இருந்து வந்தது. இதில் நிறைவான வாழ்வையும் அதனையொட்டிய சந்தோஷங்களையும் கண்டு வந்தது மனித குலம். இன்று குடும்பத்தில் இருவரும் பொருள் தேடலுக்காக ஓட்டத்திற்கு தள்ளிய மோசமான சுரண்டலை முதலாளித்தும் செய்து இன்று அது வளர்சியடைந்த நிலையில் இருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக குடும்பத்தை பராமரிக்க மனித இயலுமைக்குள் முடியாத உழைப்பில் மனிதர்களைத் தள்ளிய யுகத்தில் நாம் இன்று நிற்கின்றோம்.

(“உழைப்பாளர் தினம்: மனித இயலுமையிற்குள் உழைப்பில் ஈடுபட போராடுவோம்!” தொடர்ந்து வாசிக்க…)

The Tamils and India’s foreign policy games

An interview with Varatharajah Perumal

Talking of the international dimension, back in the 1980s, the reason why India started supporting the Tamil militants was because India didn’t like Sri Lanka’s foreign policy under the J.R.Jayewardene government. Had Mrs Sirima Bandaranaike been in power at that time, the Tamil militatnts would not have got any help from India. Today once again, the Indians are interfering in the internal affairs of Sri Lanka in order to impose their foreign policy on Sri Lanka. The excuse they use for this is the Northern Tamil community. For example, when Narendra Modi came to the Sri Lankan parliament and talked about going beyond the 13th Amendment, he was doing so on behalf of the Northern Tamils. There is a huge Indian Tamil population in Sri Lanka and Modi does not give a twit about them because they can’t be used in India’s foreign policy games.

(“The Tamils and India’s foreign policy games” தொடர்ந்து வாசிக்க…)