முஸ்லிம்கள் கருவேப்பிலை அல்ல

(நியாஸ் கலந்தர்)

தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்திருக்கும் “எழுக தமிழ்”நிகழ்வானது 2017.01.21 ல் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.எழுக தமிழ் நிகழ்வானது தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிக்காட்டுவதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந் நிகழ்வுக்கு முஸ்லிம்களை அழைப்பது கருவேப்பிலை அரசியல் நகர்வாகும். தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் அதன் மூலம் முஸ்லிம் மக்கள் பயன் அடைய முடியுமா என்பதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளும், முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளும் வேறுபாட்டு தன்மை கொண்டவை.

(“முஸ்லிம்கள் கருவேப்பிலை அல்ல” தொடர்ந்து வாசிக்க…)

மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’

(ப. தெய்வீகன்)

புதிய வருடத்தில் தமிழர் அரசியல் ஒருவித ஏமாற்றத்துடன்தான் புலர்ந்திருக்கிறது. அன்றாட சிக்கல்கள் முதல் அரசியல் பிரச்சினைகள் வரை எதுவுமே எதிர்பார்த்த வேகத்தில் நடைபெறாதிருக்கிறது என்ற ஏமாற்றம் ஒருபுறமிருக்க, புதிய வருடத்தில்கூட அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன என்பது குறித்து, தமிழர் தரப்பில் குழப்பத்துடன் கூடிய மௌனம்தான் காணப்படுகிறது. அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கி வருகின்ற நிபந்தனையற்ற ஆதரவுக்குப் பதிலாக அரச தரப்பிலிருந்து எந்தப் பயனையும் தமிழ் மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் கடந்த வருடம் முழுவதும் கண்டுகொண்ட ஒரே விடயம்.

(“மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’” தொடர்ந்து வாசிக்க…)

ஏறு தழுவுதல் – ஆதரவு

நாளை நடைபெறவிருக்கும் கவனயீர்ப்புக்கு ஆதரவளிப்பது பண்பாட்டு அடையாளங்கள் மற்றும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் அடையாள அழிப்புகளுக்கு எதிராக சிந்திக்கத் தொடங்கும் ஒரு தொடக்கப் புள்ளியாக இருக்கலாம். உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாகிய அறம், நீதி போன்றவற்றை தொடர்ந்தும் காத்துவரும் ஒரு மொழியின் சந்ததிகள் அதன் பண்பாட்டுத் தொடர்ச்சிக்கும் அதன் வாழ்வு முறைக்கும் ஏற்படும் ஆபத்துக்களைக் கவனத்திற்குட்படுத்த வேண்டும். நமது வாழ்க்கையை நாம் தான் தீர்மானிக்க வேண்டும்.

(“ஏறு தழுவுதல் – ஆதரவு” தொடர்ந்து வாசிக்க…)

ஜல்லிக்கட்டும் போராட்டங்களும்

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான இளைஞர்களின் மாபெரும் போராட்டம் அரசியல், சமூக, கலாச்சார உணர்வுகள் சார்ந்து மக்கள் திரள்வதற்கான துவக்கப் புள்ளி என்றால் எனக்கு மகிழ்ச்சியே.அதேவேளை இந்த போராட்டம் அடுத்து வரும் நாட்களில் என்னவாகப் போகிறது என்பதையும் நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

(“ஜல்லிக்கட்டும் போராட்டங்களும்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர்களை ஏமாற்றும் தமிழ் கோமாளி(த.தே. கூ மற்றும் மாகாணசபை) அரசியல்வாதிகளின் கனடாப் பயணத்தால் ஏற்பட்ட பாரிய ஈழ அரசியல் பிளவு.

தை 14ம் திகதி 2017, கனடாவில் மார்க்கம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற இணைநகர(மார்க்கம் & முல்லைத்தீவு) கையப்பம் இடும் விழாவில் கலந்து கொண்ட வடமாகாண முதல்வர் சீவி விக்கினேஸ்வரன் மற்றும் நிர்மலன் கார்த்திஜேசு(Jr சுமந்திரன்) குழுவினரும்.

(“தமிழர்களை ஏமாற்றும் தமிழ் கோமாளி(த.தே. கூ மற்றும் மாகாணசபை) அரசியல்வாதிகளின் கனடாப் பயணத்தால் ஏற்பட்ட பாரிய ஈழ அரசியல் பிளவு.” தொடர்ந்து வாசிக்க…)

ரெலோ இயக்கத்துக்கும் புலிகளுக்கும் மோதல் ஏற்பட்டதற்கு முக்கியமானவர் முரளிதான்.

முரளி (கிங்கோ) ஆவரங்காலைச் சேர்ந்தவர். ஐரோப்பாவில் இருந்துவிட்டு புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டர்.. 84ம் ஆண்டு தை மாதம் இவருடைய வீட்டில்தான் பண்டிதர் என்ற புலிகளின் முக்கிய உறுப்பினர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டார். புலிகள் அப்போது தலைமறைவாக இருந்து தாக்குதல்கள் நடத்திய காலம். முரளி ,திலீபனும் கூட்டங்கள் வைப்பது வழக்கம். உரும்பிராய் மேற்குப்பகுதியில் ஒருநாள் இரவில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்தப்பகுதி புளொட் இயக்கத்தினரின் ஆதிக்கத்தில் இருந்த பகுதி. திலீபனை புளொட் இயக்கத்தினர் கேள்விகள் கேட்டனர்.

(“ரெலோ இயக்கத்துக்கும் புலிகளுக்கும் மோதல் ஏற்பட்டதற்கு முக்கியமானவர் முரளிதான்.” தொடர்ந்து வாசிக்க…)

ஜல்லிக் கட்டு

முதன்முதலில் ஜல்லிக்கட்டை நேரில் காணச் சென்றபோது, எனக்கு ஏமாற்றமாக இருந்தது. கிட்டத்தட்ட நீதிமன்றத்துக்குப் போன முதல் அனுபவத்துக்கு இணையானது அது. ஊரே கூடி நிற்க, யாரையும் நெருங்க விடாத ஒரு காளையையும், அதன் முன் குதித்து, தன் பார்வையாலேயே அதை மிரட்டி, தனியொருவனாக அடக்கி, மண்டியிடவைக்கும் இளைஞரையும் எதிர்பார்த்துச் சென்றிருந்தேன். ஒரு ஊர் கூட்டம் அல்ல; பத்து ஊர்க் கூட்டம் கூடி நின்றது. வெவ்வேறு சீருடைகளில் அணிஅணியாக வீரர்கள் நின்றனர். எல்லோர் கவனமும் வாடிவாசல் நோக்கி இருந்தது. ஏகப்பட்ட முஸ்தீபுகளுக்குப் பின், வாடிவாசல் திறக்கப்பட்டபோது காளை சீறி வந்தது. வீரர்கள் கூட்டம் கூட்டமாகத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். பலர் காளை திரும்பிப் பார்த்த மாத்திரத்திலேயே ஓடி ஒதுங்கினார்கள். சிலர் பதுங்கினார்கள். சிலர் மட்டும் விடாது துரத்தினார்கள். காளையின் திமிலைப் பிடித்தவாறே இறுதி வரை ஓடியவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். “சரிண்ணே.. ஜல்லிக்கட்டு எப்போ ஆரம்பிக்கும்?” என்று அழைத்துச் சென்ற பக்கத்து வீட்டு அண்ணனிடம் கேட்டபோது அவர் என் தலையில் தட்டினார். “சினிமா பார்த்து எல்லாமே நிஜம்னு நம்புறவனாடா நீ!”

(“ஜல்லிக் கட்டு” தொடர்ந்து வாசிக்க…)

சம்பந்தனின் சிவதாண்டவமும் காலில் விழுந்துகிடக்கும் முயலகன் விக்கியும்.

சம்பந்தன் (அறம் மறத்தைவிட) மதிநுட்பம்மிக்க பக்கா அரசியல்வாதி.
புலிகள் காலத்தில் அரசியலில் நிலைக்க சமரசம் போனவர் புலியழிய யதார்த்தத்தையும் அறத்தையும் அறிந்து தனிநாட்டு கோரிக்கையை மிகச்சரியாக நிராகரித்தார். சம்பந்தரை குறைத்து மதிப்பிட்ட சங்கரி கொடுத்தவிலை சங்கரியின் அரசியல்வாழ்வு. சுமந்திரன் சம்பந்தர் பொறுக்கி எடுத்த துரும்புசீட்டு(Trump card). சம்பந்தர் போட்ட
wild card விக்கி. அது வேலை செய்யாமல் துரோகம் செய்தபோது பல மாதங்களுக்கு முன்னரே சுமந்திரன் ஆலோசனைப்படி விக்கியை கட்சியைவிட்டு கலைச்சு வேறொருவரை முதலமைச்சராக்கியிருக்கலாம். ஆனால் தீமையையும் நன்மையாக்குவதுதானே அரசியல் சாணக்கியம். விக்கியை விலக்குவதைவிட முயலகனை சிவன் உயிரோடு காலில் வைத்திருந்தமாதிரி வைப்பது பயன்.

(“சம்பந்தனின் சிவதாண்டவமும் காலில் விழுந்துகிடக்கும் முயலகன் விக்கியும்.” தொடர்ந்து வாசிக்க…)

வல்வைக்கு பட்டம் விடச்சென்ற டெனீஸஸ்வரன் பட்டமும் விட்டார் ரீலும் விட்டார் :

(த ஜெயபாலன்)
இந்த மாகாண சபைக்கு குறிப்பிடத்தக்க அதிகாரங்கள் உள்ளது என்றும் இந்த மாகாண சபையைச் சரிவர நடத்தினால் தமிழ் மக்களின் 50 வீதமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் இந்த மாகாணசபையை சரிவரச் செயற்படுத்த தவறினால் தமிழ் மக்களின் வாழ்நிலை இன்னும் பத்து ஆண்டுகளுக்கு பின் தள்ளப்படும் என்றும் வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தேசம்நெற் இற்கு தெரிவித்தார். ஜேர்மன், டோட்முன் நகரில் யூலை 12இல் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவுக் கூட்டத்திற்கு வந்திருந்த டெனீஸ்வரன் தேசம்நெற் இற்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்படி கருத்தைத் தெரிவித்து இருந்தார். அப்போது வடமாகாண சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றி பத்து மாதங்கள் ஆகியிருந்த நிலையில் பா டெனீஸ்வரன் அக்கருத்தைத் தெரிவித்து இருந்தார்.

(“வல்வைக்கு பட்டம் விடச்சென்ற டெனீஸஸ்வரன் பட்டமும் விட்டார் ரீலும் விட்டார் :” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர்கள் ஆப்பிரிக்க இனம்!

ஆதாரம்: தைப் பொங்கல்!

வருடந்தோறும் தமிழர்களால் கொண்டாடப் படும் தைப் பொங்கலும், மாட்டுப் பொங்கலும், அவர்கள் ஆப்பிரிக்க இனம் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களாக உள்ளன.

இன்றைய சூடான், எகிப்திய பகுதிகளில் வாழ்ந்த பண்டைய ஆப்பிரிக்கர்கள் எருது மாட்டையும், சூரியனையும் கடவுளாக வழிபட்டனர். எருது மாட்டின் கொம்புகளுக்கு இடையில் சூரிய வட்டம் பொறிக்கப் பட்ட தெய்வச் சிலைகள், இன்றைக்கும் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப் படுகின்றன.

பிற்காலத்தில் தோன்றிய எகிப்திய நாகரிகத்தில், அது ஹாதொர் என்ற தெய்வமாக வழிபடப் பட்டது. எருது மாட்டை தெய்வமாக வழிபடும் மதம் மேற்கே கிரேக்கம் வரையில் பரவியிருந்தது. கிரீஸ் நாட்டின் பகுதியான கிரேட்டா தீவில் அதற்கான ஆதாரங்கள் உள்ளன.

அரேபிய தீபகற்பத்திலும் எருது மாட்டை வழிபடும் மதம் பரவி இருந்தது. இஸ்லாத்திற்கு முந்திய காலகட்டத்தில், இன்றைய பாஹ்ரைன் நகரில் பிரமாண்டமான கோயில் ஒன்று இருந்தது. ஆண்டுதோறும் அங்கு நடக்கும் திருவிழாவிற்கு இன்றைய ஈரான், ஈராக், மற்றும் அரேபியாவில் இருந்து பெருமளவு பக்தர்கள் யாத்திரை சென்றனர்.

பாஹ்ரைன் தீவின் பழைய பெயர் “அவ்வல்” ஆகும். அது அந்த எருது மாட்டுக் கடவுளின் பெயர் ஆகும். இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ள, அரபு மொழியில் அவ்வல் என்ற சொல்லுக்கு சிறப்பிடம் உண்டு. அந்தச் சொல்லுக்கு முதன்மையானது, முந்தியது, பண்டைய சிறப்பு வாய்ந்தது என்று பல பொருள்கள் உண்டு.

தமிழ் மொழியில் அவ்வை என்று குறிப்பிடும் சொல், ஔவையார் என்ற புலவரை மட்டும் குறிக்கவில்லை. பண்டைய சிறப்பு வாய்ந்தது என்ற அர்த்ததிலும் பயன்படுத்தப் பட்டது. மேலும், இந்து மதக் கோயில்களில் இன்றைக்கும் எருது மாட்டு தெய்வமான நந்திக்கு முதல் வணக்கம் செலுத்த வேண்டும். இது பண்டைய ஆப்பிரிக்க மதத்தின் எச்சமாக இருக்க வேண்டும்.

(Kalai Marx)