திம்புவா…? இலங்கை – இந்தியா…? இமாலயாவா…?

(தோழர் ஜேம்ஸ்)

இலங்கை தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வை ஏற்படுத்தல் என்பதாக தற்போதும் ஒரு புது முயற்சி ஆரம்பமாகி இருப்பதாக செய்திகள் மூலம் அறிய முடிகின்றது. இதற்கான பலபரப்பை ஏற்படுத்தியவர்கள் இதற்கான முன்னெடுப்பை உலகத் தமிழர்(Global Tamil Forum) (GTF).

7500 ரூபாவில் ஒரு நாட்டைக் கைப்பற்றல்

இலங்கையில் உள்ள சீன தூதுவர் குய் சென் ஹாங், வட மாகாணத்துக்கான பயணத்தை இரண்டாவது முறையாக நவம்பர் 5-7 ஆம் திகதிகளில் முன்னெடுத்து  ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

ஓப்பன்ஹைமர்

(ரதன்)

கிறிஸ்தோபர் நோலன் இன்று உலகின் மிக முக்கியமான ஹொலிவூட் இயக்குனர். இவரது கதை சொல்லும் முறையானது நேர் கோட்டில் அமையாது தொகையற்றிருக்கும். துண்டு, துண்டாக ஒழுங்கற்றிருக்கும். (நொன்-லீனியர்) இவை எதிரொலிகளாக, சம்பவங்களின் நினைவுகளாக, இடைச் செருகல்களாகவிருக்கும். ஆடையாளச் சிக்கல்கள், ஒழுக்க மீறல், தார்மீக பிரச்சினைகளை இவரது திரைக் கதை வெளிப்படுத்தினாலும், உலக ஒழுங்கை மீறுவதாக ஒரு மாயை தோற்றுவிக்கும்.

மார்கழி 13 1986….

மார்கழி 13 இதே நாள் 1986 ஆம் ஆண்டு இருள் கவியத் தொடங்கிய நேரத்தில் ஈபிஆர்எல்எவ் இயக்கத்தை தடை செய்யும் தாக்குதலை புலிகள் தொடுத்தார்கள். தமிழ் மக்களின் விடிவிற்கான போராட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டு தமது உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராயிருந்த பல ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் புலிகளால் துரோகிகளாக்கப்பட்டார்கள். போராட்டத்திலிருந்து அந்நியமாக்கப்பட்டார்கள்.

முன்கூட்டிய தயாரிப்பு இல்லாத புதுடெல்லி சந்திப்பு

(அ. நிக்ஸன்)

ஜே.வி.பியின் அரசியல் கொள்கைகள் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு ஏற்புடையதல்ல. ஆனால், கட்சி அரசியலுக்குரிய அத்தனை பண்புகளையும் ஜே.வி.பியின் அடித்தள உறுப்பினர்கூட பின்பற்றும் ஒழுக்கம் முதன்மை பெறுகின்றது. 

ஒரு பெட்டிக் கடையின் கதை

சம்பந்தர் கடை. ஒரு பெட்டிக்கடை சம்பந்தர் கடையடி என இடத்தின் பெயரானது. ஆக இக்கடைக்கு கரவெட்டியின் பிரபல்யமான மூத்த அரசியல்வாதியான சிவசிதம்பரத்தின் வயதிருக்கும். நூறு ஆண்டுகள்.
யாழ் குடாநாட்டின் புராதனமான கிராமங்களிலொன்று கரவெட்டி.

அக்கிராமத்தின் “நடுச்சென்ரறில்” இருக்கிறது இக்கடை. இன்று உவர் நீர்க் கிணறுகளும் வயல் நிலங்களும் கொண்ட ஊரின் இப்பகுதி Real Estate பெறுமதி கூடிய பகுதியல்ல. செம்பாட்டு மண்ணும் நன்னீரும் கொண்ட நெல்லியடிப் பகுதிதான் இன்று விலைகூடிய பகுதி. ஆனால் நூறாண்டுகளுக்கு முதல் நெல் வயல்களும் மாடுகளுக்கான மேய்ச்சல் தரைகளும் கொண்ட பள்ள நிலங்களான சம்பந்தர் கடையடிப் பகுதிகளே ஊரில் விலைகூடிய பகுதிகளாக இருந்தன. சித்த மணியம் போன்ற கரவெட்டியின் செல்வந்த நிலச்சுவாந்தர்களின் வீடுகள் இப்பகுதிகளிலேயே இருந்தன.

மரணசாலைகள் ஆகின்றனவா வைதியசாலைகள்

Sureka Paraman இன் பதிவு இது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இன்னுமொரு அசமந்தப்போக்கு ♦
இரட்டைப்பெண் சிசுக்களைப்பெற்று ஐந்து நாட்கள் கூட முடிவடையாத 25 வயதே ஆன, இளம் தாயை ; வீட்டிலே பராமரிக்குமாறு அனுப்பும் அளவிற்கு , தொற்றுநோய் தடுப்பு முகாமைத்துவம் கூட முறையாக இல்லாத ஒரு வைத்தியசாலை தானா இந்த யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை ?????

தமிழ் மக்களின் இன்றைய அரசியல் கோரிக்கை

(Shanthan K Thambiah) 

மாகாண சபைகளில் மக்களாட்சி வேண்டும் என்பதே தமிழ் மக்களின் இன்றைய அரசியல் கோரிக்கை. இன்றைய தமிழ் அரசியலில். தேசியத்தரப்பினர் என்கின்ற வரையறையுடன் அவர்களுக்கான ஒற்றுமையான – நடைமுறைசாத்தியமான – தமிழர்களின் அரசியற் கோரிக்கை என்ன என்பதை – தமிழ் அரசியல் அடையாளப்படுத்த தவறிவிட்டது என்பதே உண்மை.

இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம்

இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் காசா பகுதியின் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

ஹென்றி கிசின்ஞர் 100

(ரதன்)

மனிதன் நாகரீகமடைந்து வளர்ச்சிகண்டு கூட்டமாக அலைந்து ஒருவர் தலைமை தாங்கி, பின்னர் அரசு, அரசன் என கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டபோது, மனித குழுவின் தலைமை அறத்துக்கு முக்கியத்துமளிக்கவில்லை. மாறாக தனது அரசுக்கு எது சாதகமானதோ அதனையே செய்து வந்தது. அரசியலுக்கு அறமேது?