வீட்டுத்தோட்டத் திட்டத்தால் உணவு பஞ்சத்தை எதிர்கொள்ள முடியுமா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இலங்கையில் மிக விரைவில் பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படப் போவதாக, தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பலர் கூறுகிறார்கள். கடந்த வருடம், இரசாயன பசளை இறக்குமதிக்கு அரசாங்கம் விதித்த தடையின் காரணமாக, உள்நாட்டு உணவு உற்பத்தி வெகுவாகப் பாதித்தமையும் நாடு எதிர்நோக்கியிருக்கும் வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினையின் காரணமாக உணவு இறக்குமதி செய்ய முடியாமல் இருப்பதுமே, இந்த அச்சத்துக்கு காரணங்களாகும்.

தமிழ் இலக்கியங்களில் முற்போக்கு

இராமன் தன் மனைவியை சந்தேகித்து தீயில் இறங்க பணிக்கிறான். இறங்கி தான் பத்தினி என்பதை சொல்கிறாள். அதற்கு பிறகு கூட ஊராரின் சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார் கணவன்.

பின்னென்ன உயர்குல வேளாளன்!

எலும்பை ஊடறுத்து  

தீண்டும்  

ஊசிக்குளிர்  

வாழ்வின் மிடறறுத்து  

உயிரைத் உயிரை துரத்தி  

உறிஞ்சிக்குடிக்கும் வெஞ்சினம்  

கொடுமைகளில் சிதைந்தது சுற்றும்  

ஆன்மாவும் விறைக்கும்  

கூதல் வெளியில்  

தடுமாறிச் சுவாசிக்கும்  

தட்டுக் கெட்டு மிஞ்சிய சுற்றம்  

புல்லும் பூண்டும்  

செடியும் கொடியும் பூவும்  

நீயும் நானும் நம் மொழியும்  

பிரளயத்தில் இல்லாது போய்விட்ட  

மறுபொழுதின் அகால வேளையிலும்  

உயிர் வாழ்வான்  

‘உயர்குல’ வேளாளன்  

யார் இந்த  

‘உயர்குல வேளாளன்’?  

வலி பொங்கும்  

நெடும் பொழுதுகளில்  

நீர்ப்பை உடைந்து கசிய  

பொசுங்கிப் பெருகும்  

குருதிப் பெருக்கில்  

பிறப்பைத் தவிர்த்து  

பன்னீரும் பாலும்  

பாய்ந்தோடும் யோனி வழியாகவா  

பிறப்பெய்தினான் – இந்த  

‘உயர்குல வேளாளன்’  

குப்பி விளக்கின் உச்சிப் புகை நிழல்,  

சுவரில் நெளிந்து ஊர  

மங்கிய மஞ்சள் வெளிச்சத்தில் – அந்த  

மந்தகாச இரவுகளில்  

அம்மையப்பன்  

கூடிக் கொண்டாடும்  

கலவி தவிர்த்து  

மாங்கனி உண்ணும்  

மந்திரத்தில் பிறந்தவனா – இந்த  

‘உயர்குல வேளாளன்’ ?  

பள்ளரைப் போலும்  

பறையரைப் போலும்  

நாயைப் போலும்  

அழுக்குண்ணும் புழுக்களைப் போலும்  

முடிவெட்டும் என்னைப் போலும்  

அழுக்ககற்றும் உன்னைப் போலும்  

வெள்ளைப் பச்சை அரிசியில்  

அவித்து உருட்டிய கட்டிக்காய்  

உன்னதும் என்னதும் அல்லாத மொழியிலும்  

முணுமுணுத்து மணியடிக்கும்  

பிராமணரைப் போலும்  

பிறப்படைந்தவன் தானே- இந்த  

‘உயர்குல வேளாளன்’  

பின்னென்ன ‘உயர்குல வேளாளன்’  

களத்து மேட்டில்  

கசிந்து வியர்வை  

காய்ந்துபோக நான் விசிறி தந்தேன்  

உழுத புஜத்தில்  

வலி எழும் வேளையெல்லாம்  

நீ களைப்பாற நான்  

பதநீர் தந்தேன்  

பதிலுக்கு நீ நெல்மணி தந்தாய்  

எப்படி இடையில்  

உயர்குல குலம் நீ ஆனாய்  

எளிய சாதி நானானேன்?  

ஒளி துப்பும் சூரியனும்  

அடிவானில் விடிவெள்ளியும்  

உதிக்காத இருண்ட காலங்களில்  

மனுஸ்மிருதி சாஸ்திரம் – என்னை  

மூத்திரம் கூட பெய்ய அனுமதித்ததில்லை  

புறம் தள்ளி வாழ்தலும்  

அடிமைகளுக்கு நீ  

அரசனாவதும்  

அடுப்படியிலும் படுக்கையிலும் மட்டுமே  

உம் பெண்டிரை அனுமதிப்பதையும்  

எப்படி நீ மனுநீதி என்றாய்?  

என் குடிசைக் கூரைக்கு  

கோரைப் புல்லும்  

உன் வீட்டுக் கூரைக்கு  

ஓலைக் கிடுகும் கட்டாயம் என்று  

யார் இட்டது கட்டளை?  

என் வீட்டுப் பெண்டிரை  

மாராப்பு அணிய நீ  

அன்றெல்லாம் அனுமதித்ததில்லை  

இன்றும் உம் பெண்டிர்  

படுக்கையின் சாளரம் தாண்டி  

அப்பால் வீசும் தென்றல் சுகத்தை  

சுவாசிக்க நீ விருமபுவதில்லைத் தானே ?  

பெண்பிள்ளை சிரிப்பையும்  

புகையிலை பருவத்தையும்  

ஒப்பிட்டு பாழும் மொழி சொன்னது  

இந்த உயர்குலம் தானே  

உன் மொழியில்  

வக்கிர புத்திக்கு  

உயர்குலம் என்று பொருள்  

நீ அறிந்ததுண்டா….  

எங்கள் குடிசைத் தொகுதிக்குள் தான்  

காதல் கல்யாணம்  

முதன் முதலில் அனுமதிக்கப் பட்டது.  

போன வாரப் பத்திரிகையில் கூட நீ  

சிவந்த நிற (?)  

இந்துமத (?)  

அழகான (?)  

குடும்பப்பாங்கான (?)  

உயர்குல வெள்ளாளிச்சி தேடிக்கொண்டிருக்கிறாய்.  

     நூற்றாண்டுகள் பின்தங்கிய உன்  

     வக்கிர ஆசைக்குத்  

தடுமாறும் பத்திரிகைத் தர்மம்  

                              எண்ணம் முழுவதும்  

                                         இருள் நிறைய  

                                 பகலின் திசையில்  

                        பெயர் மட்டும் போதுமா ?  

        நாகரிகம் அடைய வேண்டாமா?  

அடுத்த நூற்றாண்டின் பெரும் சுவரை  

முட்டி மோதி  

இடித்துக் தகர்த்து விட்டு  

நிமிர்ந்து நிற்கிறது எங்கள் உலகம்  

ஆறுமுக நாவலரின்  

ஐம்பாவச் சட்டத்துக்குள்  

அடைபட்டுக் கிடக்கிறது  

உங்கள் உலகம்  

நஞ்சு கக்கும் கொடியவர்க்கும்  

சூது விதைக்கும் பாதகர்க்கும்  

எங்கள் மொழியில்  

நாவலர் என்று பெயர் இல்லை  

திண்ணப் பள்ளியில்  

மண்கூட்டிய வாகைமர நிழல் மணலில்  

ஒதுங்கி ஓரமாய் நான்  

‘அ’ கூட எழுத நீ அனுமதித்ததில்லை  

பனையேறும் பள்ளனுக்கு  

பாராளுமன்றம் எதற்கென்று அன்று  

சந்தத்துடன் சத்தமிட நீ  

நாவலரிடம் தானே கற்றுக் கொண்டாய்  

சாதி தாழ்ந்தவனுடன் சமபந்தி போஜனம்  

பாவச் செயல் என்பதையும்  

உருத்திராட்சைக் கொட்டை சுற்றிய  

மண்டைக்குள் இருந்துதானே நீ  

பரிமாறிக் கொண்டாய்  

பழங்கதையெல்லாம்  

இபபோதெதற்கு என்கிறாய்  

புதுக்கதையும் நாறித்தானே கிடக்கிறது  

கிடுகு வேலி பிய்த்து  

எங்கள் பெண்கள் வெளிவந்து  

ஆணுக்கு நிகராய்  

நிமிர்ந்து நிற்க ஆரம்பித்து  

நூற்றாண்டு ஆயிற்று….  

ஆனாலும்…  

உச்சாணி மாடியின் விளிம்பில் நின்று  

தரை நோக்கிப் பாய்ந்து  

உடலும் ஆன்மாவும்  

சிதறிச் சாவது என் வீட்டுப் பெண்களல்ல….  

ஆயிரம் பேரைச் சுமந்து  

கனகதியில் பாயும்  

தொடர் வண்டி முன் பாய்ந்து  

உடலும் ஆன்மாவும்  

சிதறிச் சாவது என் வீட்டுப்பெண்களல்ல  

அப்புறப் படுத்திக் கொள்  

உன் வீட்டுக்குப்பைகளையும்  

ஆறாயிரம் ஆண்டுகால வழக்குகளையும்  

நீ உயர்குல வேளாளன் என்பதுவும்  

உனையண்டி உன் ஊரில்  

ஆயிரம் தாழ்சாதி உள்ளன என்பதுவும்  

பெண் உன் சொல்  

மீறாள் என்பதுவும்  

நீல நிறக் கண்களும்  

வெண் சருமமும் கொண்டவர்களுக்கு  

தெரிந்தாலும் கலையில்லை  

உன்னில் வீசும் மணம்  

அவன் மூக்கை அரிக்கும்  

விதி வலியது வேளாளனே  

சிணி மணம்  

உன் மூளையின்  

ஞாபக செல்களை சுரண்டுகிறது அல்லவா….  

எம் துன்பியல் கவிதையின் இருதயம்  

தினம் தினம் கண்ணீருடன்  

எவர்க்காக உருகிச் சாகிறதோ  

அவர்கள் உனக்காகவும்  

வெடித்துக் கொள்வதுதான்  

இன்னும் என் பெரிய சோகம்.  

சக்கரவர்த்தி.  

‘அல்லாஹு அக்பர்’

நேற்று இரவு வரை

இறைவனே பெரியவன் எனும் பொருளுடைய

ஒரு வழிபாட்டுச் சொல்லாக அது இருந்தது

இன்றைக்கு அதன் பொருள்

அது மட்டுமல்ல

அக்காவுக்கு ஏழைத் தாய்வீட்டு பொங்கல் வரிசை…

ஒருகட்டு கருப்பங்கழி

காய்வெட்டா வாங்கிவந்த

பூவன்பழம் நாலுசீப்பு

கூடவே

ரெண்டண்ணம்

இஞ்சிக்கொத்து மஞ்சக்கொத்து

கடன்சொல்லி வாங்கிவந்த

பூணம் பொடவை ஒண்ணும்

பூப்போட்ட கைலி ஒண்ணும்

வரிசைப்பணம் அம்பதும்

வடக உருண்டை பொட்டலமும்

என

அம்மா அனுப்பிவைப்பாள்

அக்காவுக்கு

பொங்கல் சீர்

உந்திப் பெடல்மிதித்து

சந்தோஷமாய்

சைக்கிளேறிப்போகும்

என்னை

தெருமுனையில் திரும்பும்வரை

கையசைத்து

பின்மறைவாள்

ஆறுமைலுக்கு

அப்பாலிருக்கும்

அக்காவீடு போவதற்குள்

தெப்பலாய் நனைந்திருப்பேன்

தேகமெல்லாம்

வியர்த்திருப்பேன்

தெருமுக்கு கடைநிறுத்தி

தின்பண்டம் கொஞ்சம்

மயிலாத்தாவிடம்

பேரம்பேசி

மல்லிப்பூ ரெண்டுமுழம்

என

என்பங்குக்கு கொஞ்சம்

சீர்வரிசைப்பைக்குள்ளே

சேர்த்தே

எடுத்துப்போவேன்

” வாடா” தம்பியென

வாஞ்சையோடு அழைக்கும்

அக்காவின் வீட்டுக்குள்

வெரால்மீனு கொழம்பும்

மசால்வடையும்

மணக்கும்

எப்படியும் வருவான்

தம்பியென

கெவுளிச்சத்தத்தை வைத்தே

கணித்துசெய்திருப்பாள்

அக்கா

பனைவிசிறி தந்துவிட்டு

மோரெடுத்துவர

உள்ளறைநோக்கி ஓடும்

அக்காவுக்கு

பிறந்தவீட்டு சீரைக் கண்டு

பெருமை

பிடிபடாது.

பாக்கு இடிக்கும்

மாமியாக்காரி

பார்க்கட்டும் என்பதற்காகவே

தெருத்திண்ணையிலேயே

பரத்திவைப்பாள்

பிறந்த வீட்டு

சீதனத்தை.

“இந்த

இத்துப்போன வாழைக்காயத்

தூக்கிட்டுத்தான்

இம்புட்டுத்தூரம்

வந்தானாக்கும்”

என்னும்

நக்கலுக்கு வெகுண்டு

நாசிவிடைக்க

கிளம்புகையில்

பதறிஓடிவந்து

பாதையை மறிப்பாள்

அக்கா.

வரிசைப்பணத்தைக்

கையில்திணித்துவிட்டு

“வர்றேன்க்கா” என்ற

ஒற்றைச்சொல்லுக்கு

ஓலமிட்டு

அழுவாள்

அழுகை அடக்கி

சிரிக்கமுயன்று

கண்ணீர்மறைத்து

கவலை விழுங்கும் அக்காவை

இன்றுநேற்றா

பார்க்கிறேன்

வரிசை குறித்த

வாக்குவாதங்கள்

வருடந்தோறும்

அரங்கேறியபடிதான் இருக்கும்

அக்காவின்

புகுந்தவீட்டில்

சைக்கிள்தள்ளி

விருட்டென ஏறிமிதிக்கையில்

“வெறும்பயக் குடும்பத்துக்கு

வீறாப்புக்கு கொறச்சலில்லே”

என்னும்

குத்தல் வாசகம் கேட்டு

உச்சிவெயில்கணக்காய்

உள்ளம்

கொதிக்கும்

வெரால்மீனுகொழம்பும்

மசால்வடைவாசமும்

தெருமுனைவரை

என்னை

துரத்திவந்து

பின்மறையும்

உச்சிவெயிலில்

ஆவேசங்கொப்பளிக்க

பசித்தவயிறோடு

திரும்பும் நான்

எப்படிக் கேட்கமுடியும்

அக்காவிடம்

அம்மா கேட்டனுப்பிய

சாயம்போன இரவிக்கை

இரண்டும்

கட்டிப் பழசான

சேலை ஒன்றும் ?

(Rajinikanthan Kanthan)

75 ரூபாய்

வேளாங்கண்ணி அருகே எனக்கு ஒரு இஸ்லாமிய நண்பர் இருக்கிறார்.

நண்பர் என்றால் பள்ளி நட்போ கல்லூரி நட்போ இல்லை ஜூஸ் கடை நட்பு. ஆம் அவர் ஜூஸ் கடை வைத்திருக்கிறார்.

வேளாங்கண்ணி தாண்டும் போதெல்லாம் என் வண்டி அனிச்சையாக அந்த ஜூஸ் கடையில் நின்று விடும்.

மாணவச் செல்வங்களுக்கு அஞ்சலி

(சாகரன்)

மூச்சை நிறுத்தி…… புத்தகத்தை காக்க உயர்ந்த கரங்கள்…

(செய்தி: குறிஞ்சாங்கேணி/கிண்ணியாவில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் சென்ற படகு தண்ணீரில் மூழ்கி பலர் மரணம்)

சின்னஞ் சிறு

கரங்களினிலே

சிறு புத்தகம்

காவி

பெருங்கனவு சமைக்க

பள்ளி சென்ற

என் பாலகனே

உன் கால்கள்

துள்ளி ஓடா

இடமுண்டோ

துரு துருவென்றிருந்த

உன் கண்கள்

உறங்காதோ

நீச்சலிலும் நீ

சூரன் அன்றோ

அந்த கொடிய

சுழி நீர்

உன்னை காவு கொண்டதோ

கரம் கொடுத்து

கல்வி கொடுக்கும்

ஆசிரியரும்

தத்தளிக்கும் உன்னைக்

காப்பாற்ற

ஆவலக் குரல் எழுபியதோ

வாப்பாவும் உம்மாவும்

கரையில் நின்று…

கடலில் பாய்ந்து

உனைக்காப்பாற்ற

முனைந்தனவோ

மூன்று நிமிட

மூச்சடக்கும் திறன்

மூளையை

சாவடையச் செய்தனவோ

என் பிள்ளையே

என் கால்களும் கரங்களும்

துடிக்கின்றது

அருகில் இருந்தால்

நான் அந்த ஆழியில்

பாய்ந்து

காத்து இருக்க மாட்டேனோ

என் காலம்

முடிவை நோக்கி

வந்து கொண்டிருக்கின்றது

அந்த முடிவை

உன் உயிர்காப்பதில்

விடுதல் ஒன்று இழப்பு இல்லையே

இது என் குரலின் குரலல்ல

பலரின் குரல்

கடல் வண்டி கட்டி

சுழி ஓடி

சுற்றிச்சுற்றி ஓடி

காப்பாற்றிய

அந்த பெருமக்கள்

பெருமானாரின் அவதாரங்களே

இனி ஒரு வள்ளம்

இது போல் வேண்டாம்

இருக்கும் பாதையை

செப்பனிட முன்பு

கடல் வழிப் பாதை

சரி செய்திருக்க வேண்டாமோ

அதிகாரம் கண்ணை மூடிவிட்டதோ

கிழக்கின் அடையாளம்

காத்தான் குடி என்பார்

நான் சொல்வேன்

அது கிண்ணியா என்று

பால்ய வயதில்

கடல் கடந்து

அங்கு வந்த போது

நான் பரிதவித்ததும்

நினைவில் வந்து போனதே

கூட வந்த

தாத்தாவும்

தன்னுயிர் பிரிய முன்பு

பல கரம் பற்றி

உன்னை காப்பாற்ற

நீச்சல்தான் அடித்திருப்பார்

கால்களிலும் கைகளிலும்

வலுக் குறைக இருந்திருந்தாலும்

அந்த வாப்பாவிடம்

இருந்திருக்குமல்லோ

மனவலிமை

தன் பேராண்டியை

காப்பாற்ற

இறுதி மூச்சு வரை

இரைஞ்சிருப்பாரல்லவோ

அந்த கோணேசர்

குமரனுக்கும்

இந்த அவலக் குரல்

கேட்கவில்லையோ

மயிலில் பறந்து வந்து

தன் சிறகில் இருத்து

உன்னை காத்தருளி

மத நல்லிணத்தை

காத்திடவில்லையே

அந்த வகையில்

அந்த குமரன் மீது

எனக்கு

தீராத கோவம்தான்

உன் சன்னதியிற்கு

அடுத்த முறை

வரும் போது

இதற்கு நியாயம் கேட்க

எனது காக்க தோழருடன்

இணைந்தே வருவேன்

புராணம் பாடி

என்னை சமாதானப்படுத்தலாம் என்று

நினைக்காதே

எமது கண்ணீருக்கு

கதை சொல்வதை விடுத்து

காரியத்தை ஆற்று

எம் பிள்ளைகள்

பாதுகாத்து கடல் கடந்து

கற்பதற்கு

அடுக்கி வைத்த புத்தகங்களாக

வெள்ளைத் துணியால்

உங்கள் வெள்ளை ஆடை

உடலம் மறைத்த

அந்த புகைப்படம்

ம்…… வேறு என்ன சொல்ல

இறுதி மூச்சிலும்

உன் புத்தகத்தை

காப்பாற்ற

நீ உயர்த்திய கரத்தை

நான் அறிவேன்

என் செல்வங்களே…….!

மனைவிக்காக பெற்றோர்களை ஒதுக்காதீர்கள்!!! உண்மைச் சம்பவம்?

தினமும் அலுவலகம் செல்லும் வழியில் ஒரு பெரியவர் வெய்யிலிலும், மழையிலும் பொம்மைகள் விற்றுக் கொண்டு இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்…

கடலம்மா….! வஞ்சிக்கலாமா..? கடலம்மா……!!

(சாகரன்)

(தென்கிழக்காசிய நாடுகளில் 26.12.2004 இல் மிகப்பெரும் அழிவுகளைத் ஏற்படுத்தியது சுனாமி அனர்த்தம். பதினாறு வருடங்கள் கடந்த நிலையில் இன்று அதனை ஒட்டிய என் நினைவலைகள்……….)