தமிழ் கடல் வளம் சூறையாடப்படுகின்றதா…?

‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ என்ற இந்தக் கட்டுரைத் தொடரானது இலங்கையின் வடக்குக் கடற்பகுதி மீன்பிடி சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பரிமாணம் பற்றி ஆராய்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்திய கடல் அரசியலை விமர்சனப் பார்வையுடன் ஆராய்கின்ற இந்தத் தொடரானது, இலங்கையின் கடல் வளம் எவ்வாறு சர்வதேச சக்திகளால் கூறுபோடப்பட்டு சுரண்டப்படுகின்றது என்பதையும் அதன் பின்னணியிலுள்ள உள்ளூர் சக்திகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதாகவும் அமைகிறது. மேலும், இலங்கைத் தமிழ் கடல்சார் மக்களின் கடல் தொடர்பான இறைமை, அதில் அவர்கள் சுதந்திரமாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை தேடும் உருத்து என்பவை தொடர்பிலும் இந்தக் கட்டுரைத் தொடர் பேசவுள்ளது.

தன்னுயிரை மாய்த்துக்கொள்ளுதல் பிரச்சினைக்குத் தீர்வாகாது

ஒவ்வொரு விடயத்தையும் புரிந்துகொள்ளுதல், பிரச்சினைகள் தொடர்பில் மனம் விட்டு கலந்துரையாடுதல், தங்களுக்குள்ளே விவாதித்துக் கொள்ளுதல் இன்றேல், ஆலோசனைகளை கேட்பதன் மூலமாக, மனப்பாரம் ஓரளவுக்கேனும் குறைந்துவிடும்; பிரச்சினைகளுக்கும் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.

நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு: ஒரு சேரிப்பையனின் பகிரங்க கடிதம்

வணக்கம் எனக்கு எட்டு வயசாகும்போது என் கண்முன்னே எங்கள் வீடு எரிந்துகொண்டிருந்த நடு இராத்திரி ஒன்றில் எழுத நினைத்த கடிதம் .வெகு காலதாமதம் ஆகிவிட்டது இந்த இருக்கையும் கணிப்பொறியும் எனக்கு கிடைப்பதற்கு .

புத்தமதத்துக்கு இந்தியா முக்கியத்துவம் அளிப்பது ஏன்?

இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உதித்த  புத்த நெறியின் வரலாறானது, கி.மு 5ஆம் நூற்றாண்டில் ஆரம்பமாகின்றது. பண்டைய மகத நாட்டில் (இப்போது பீகார், இந்தியா), புத்தரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு பௌத்தம் உதித்தது.

நினைவாஞ்சலி: கலைவாதி கலீல்

(Sarawanan Komathi Nadarasa)

நம் மதிப்புக்குரிய மூத்த எழுத்தாளரும் கலைஞருமான கலைவாதி கலீல் அவர்கள் காலமான செய்தி அதிர்ச்சியையும் துயரத்தையும் தருகிறது.

இலங்கையில் தனியார் கல்வி நிறுவனங்கள் முறைமைப்படுத்தல் வேண்டும்.

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் அதனை வெற்றிகொள்ள கையாண்ட யுத்தியாக தனியார் கல்வி நிலையங்கள் அமைந்தன.

யானை

(Hemachandra Kumarasamy Iyer.)

வளர்ப்பு யானைகளுக்கு சொல்புத்தி மட்டுமே இருக்கும். பாகன்கள் சொல்றத மட்டுமே செய்யும்.
ஆனால், காட்டு யானைகள் தானே சிந்தித்து முடிவெடுக்கும் அறிவு கொண்டது.

முதலீட்டாளர்களை அடித்து விரட்டும் நாடு

(எம்.எஸ்.எம் ஐயூப்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓரளவுக்காவது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறார் என்பதையும் பொதுஜன பெரமுன இன்னமும் திருந்தவில்லை என்பதையுமே, கட்டானையில் உள்ள ஓமான் நாட்டவருக்குச் சொந்தமான ஆடை உற்பத்தித் தொழிற்சாலை மீதான தாக்குதல் எடுத்துக் காட்டுகிறது. 

தமிழில் எத்தனை எழுத்துகள்?

(இலங்கநாதன் குகநாதன்)


தமிழ் இலக்கணத்தின் அடிப்படை நூல் எது ? தொல்காப்பியம். தொல்காப்பியம் தமிழிலுள்ள எழுத்துகள் எத்தனை எனக் குறிப்பிடுகின்றது?
‘ எழுத்தெனப்படுவ அகர முதல் னகர இறுவாய் முப்பதென்ப ‘
: தொல்காப்பியம்
மேலே தொல்காப்பியமானது ‘எழுத்து’ எனச் சிறப்பித்துச் சொல்லப்படுவது ‘அ’ முதல் ‘ன்’ வரையிலான முப்பது எழுத்துகளே எனச் சொல்லுகின்றது.
உயிர் எழுத்துகள் 12
மெய் எழுத்துகள் 18
மொத்தம் 30.
ஃ என்ற எழுத்தின் ஒலியினைக் கூட ‘அக்’ எனச் சொல்லி விடமுடியும். இவ்வாறே உயிர் மெய் எழுத்துகள் 216 இனையும் சொல்லலாம்; காட்டாக, ‘க’ என்பதனை “க் + அ ” எனச் சொல்லலாம்.
‘எழுத்து’ என்ற சொல்லின் வேர்ச்சொல் ‘எழு’ என்பதாகும், அதாவது எழுப்பப்படும் ஒலியே எழுத்து ஆயிற்று ( பேச்சு மொழியிலிருந்தே எழுத்து மொழி). தமிழின் அடிப்படை ஒலி வடிவங்கள் முப்பதே. இவற்றினைச் சார்ந்து வருபவையே ஏனையவை. எனவே தமிழிலுள்ள எழுத்துகள் 30 மட்டுமே! அவற்றின் வடிவங்கள் வேண்டுமானால் 247 எனலாம். ஆங்கிலத்தில் கூட பெரிய எழுத்துகள், சிறிய எழுத்துகள், தொடர் எழுத்துகள் என 78 வடிவங்களுள்ளன, ஆனால் எழுத்துகள் எனும் போது 26 ஒலி வடிவங்களை மட்டும் தானே கூறுகின்றோம். அது போலவே தமிழிலும் முப்பது எழுத்துகளே! 247 எழுத்துகள் என அச்சுறுத்த வேண்டாம்!
🙏தமிழில் முப்பது எழுத்துகளே 🙏

(Jeeva Satha)

எங்கே போவேன் நான்

எங்கே போவேன்

முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கு

எங்கே போவேன் நான்

எங்கே போவேன்

எண்ணத்தில் பல வண்ணத்தில்

முதலில் என்கால் இடறியது

செட்டியின் பிண்டத்தில்

துரையப்பா

தார்போட்டெரித்த ரொலோ பிண்டங்கள்

காத்தான்குடி பள்ளிவாசல்

ஈறாக கேதீஸ்வரன்

முகமும் பெயரும் தெரியாத

வயித்துப் பிழைப்புக்காக

தினமுரசு வினியோகித்த பையன்

சிங்கள அரசியல்வாதிக்கு

திருநீறு பூசிவிட்ட ஐயர்

இவளவற்றையும் கடந்தும்

முள்ளிவாய்க்கால் போய்சேர்ந்தேன்

கஞ்சி