நீங்களும் உண்மையை பேச மாட்டீங்க..” கொரோனா மரணங்களை மூடி மறைத்த மோடி அரசு.. அம்பலப்படுத்திய ராகுல்காந்தி! பிரதமர் மோடி உண்மையை சொல்லவும் மாட்டார். மற்றவர்கள் அதனை சொல்ல அனுமதிக்கவும் மாட்டார் என ராகுல் காந்தி சாடியுள்ளார்.
Category: செய்திகள்
அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், தற்போது அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்படுகின்றது. இதில், 17 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவிப்பிரமானம் செய்துகொண்டுள்ளனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் நஷீர் அஹமட் சுற்றாடல் துறை அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
மக்களின் கருத்துகளுக்கு செவி சாய்க்க வேண்டும்
மக்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்காமை பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே சகல கட்சிகள் மற்றும் அமைப்புகளும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டே தேர்தல் ஆணைக்குழு குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
முந்தினார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை தொடர்பான அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பான பிரேரணையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளார் என பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
“சலுகைகளை எதிர்பார்க்க வேண்டாம்” ஜனாதிபதி
மேலும் 2 பில். அமெ. டொ. உதவி வழங்கத் தயார் – இந்தியா
இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவிகளை வழங்க தாம் தயாராக இருப்பதுடன், நாட்டின் உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடிகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு கைகொடுப்பதற்கும் தயாராக இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. சர்வதேச செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இலங்கையின் பொருளாதார நிலைமை மிகவும் மோசம்”
இலங்கையின் பொருளாதார நிலைவரம் மிகவும் உறுதியற்ற நிலையில் காணப்படுவதுடன், உயர் கடன் மீளச் செலுத்துகைகள், வரவு செலவு இடைவெளியை குறைப்பது, வெளியக உறுதித் தன்மையை மீளமைத்துக் கொள்வது மற்றும் நாட்டின் வறிய மற்றும் இலகுவில் பாதிப்புறக்கூடிய மக்களுக்கு ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளை தணிப்பது போன்றவற்றை சீராக்கம் செய்வதற்கு அவசரமான கொள்கைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளதாக உலக வங்கி ஆண்டில் இரு தடவைகள் வெளியிடும் பிராந்திய தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.