கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் ரஷ்ய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று ரஷ்ய அதிபர் விலாதிமிர் புடின் கூறியுள்ளார். இதேவேளை, உக்ரைன் இராணுவத்தை ஆயுதங்களைக் கீழே போடுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். “நான் ஒரு இராணுவ நடவடிக்கையின் முடிவை எடுத்துள்ளேன்,” என்று அவர் தொலைக்காட்சி அறிக்கையில் கூறினார்.
Category: செய்திகள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19 அன்று தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் சராசரியாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிக பட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதமும், குறைந்தப்பட்சமாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகளும் பதிவானது.
உக்ரேனுக்குள் படைகளைச் செல்ல உத்தரவிட்ட புட்டின்
உக்ரைன் அவசர நிலையை பிரகடனம் செய்தது
இயற்கை உரப் பாவனை குறித்து விழிப்புணர்வு
இலங்கை: கொரனா செய்திகள்
கொரோனா தொற்றாளர் தொகை அதிகரிப்பு. நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,283 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 639,297 ஆக அதிகரித்துள்ளது.
ஜெயக்குமாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்தது. அன்றைய தினம் ராயபுரம் தொகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக ஒருவரை அதிமுகவினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கத் தொடங்கினர்.