துணைவேந்தராக மங்களேஸ்வரன் நியமனம்

வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கலாநிதி ரி. மங்களேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக முதல்வராக நீண்ட காலமாக கடமையாற்றிய கலாநிதி ரி. மங்களேஸ்வரன், வவுனியா பல்கலைக்கழக உருவாக்கத்துக்கு அயராது உழைத்தவராவார்.

இது தான் கொத்தலாவலை சட்டமூலம்

1. உயர் கல்வி அமைச்சு

2. கல்வி அமைச்சு

3. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

4. தொழில்முறை தர நிலைகள் நிறுவனம் (உ+ம் – S L M C , I E S L )5. பல்கலைக்கழக செனட் சபை மற்றும் கட்டுப்பாட்டுச் சபை இந்த அனைத்து நிறுவனங்களினதும் அதிகாரங்களை ஒரு சபைக்கு கொடுத்தால் எப்படி இருக்கும் ?

நீராவியடி பொங்கல் விழா: 10 பேருக்கு அனுமதி

முல்லைத்தீவு – செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் கோவிலின் வருடாந்த பொங்கல் விழாவுக்கு, இம்முறை 10 பேர் மாத்திரமே கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதியன்று, நீராவியடிப் பிள்ளையார் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா நடைபெறவுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மூடப்பட்டதா?

தலிபான் ஆதிக்கம் காரணமாக ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், இந்திய தூதரகம் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வேகமாக வெளியேறி வரும் நிலையில் அந்நாட்டின் 85 சதவீத பகுதிகள் தங்கள் வசம் வந்ததாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

வீதி வேண்டாமென வேண்டுகோள்

காரைதீவுக்குட்பட்ட நன்செய் நிலப்பிரதேசத்தில் அவசர அவசரமாக முன்னெடுக்கப்படும் கார்பெட் வீதிப் பணிகளை உடனடியாக நிறுத்தவேண்டுமென காரைதீவின் பொதுநல அமைப்புகள் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளன.

வீரவன்ச, கம்மன்பில இருவருக்கும் அதிரடி வைத்தியம் செய்கிறது அரசாங்கம்

அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரின் வசமிருக்கும் அமைச்சுகளில் சிலவற்றை அவ்விருவரிடமிருந்தும் அபகரிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது. அவ்விருவரிடமிருந்தும் மாற்றப்படும் அமைச்சின் விடயதானங்களுக்கு அமைய,ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மேலும் 3 அமைச்சுகளை வழங்குவதற்கு ஆலோசித்து வருவதாகவும் அறியமுடிகின்றது.

பயணிக்கும் சுயஸ் கால்வாயை முடக்கிய கப்பல்

சுயஸ் கால்வாயை இவ்வாண்டு மார்ச் மாதத்தில் முடக்கிய பாரிய கொள்கலன் கப்பலொன்றானது இறுதியாக சுயஸ் கால்வாயை விட்டு வெளியேறுகின்றது. கப்பலின் உரிமையாளர்கள், காப்புறுதியாளர்களுடன் இழப்பீட்டு ஒப்பந்தம் ஒன்றை எகிப்து கைச்சாத்திட்டத்தையடுத்தே குறித்த கப்பல் வெளியேறுகிறது. கப்பலானது மூன்று மாதங்களாக கால்வாய் நகரமான இஸ்மைலியா நகரத்துக்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. ஒப்பந்தத்தின் விபரங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்காத நிலையில், 550 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை எகிப்து கோரியிருந்தது.

சட்ட விரோத மணல் அகழ்வு; 13 படகுகளுடன் மூவர் சிக்கினர்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி, ஈச்சந்தீவுப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களால் கைவிட்டுச் செல்லப்பட்ட 13 படகுகள், பொலிஸாரால் நேற்று (09) கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை: கொரனா செய்திகள்

தற்போது கணிசமான சதவீதமானவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதால், பொருளாதார நடவடிக்கைகளுக்காக அதிக சந்தர்ப்பத்தை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணித்துள்ள ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்‌ஷ, சனத்தொகையில் பெருமளவானோருக்கு செப்டெம்பர் மாதத்துக்கு முன்னர் தடுப்பூசி பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.   

பெசிலிடம் இருந்தவை மஹிந்தவுக்கு மாற்றம்

நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பெசில் ராஜபக்‌ஷவுக்கு கீழிருந்த நிறுவனங்கள் சில, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் கீழிருக்கும் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துதல் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கான, சட்ட கட்டமைப்பை திருத்தி சிறப்பு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சராக பெசில் ராஜபக்‌ஷவும், பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துதல் அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவும், நேற்று முன்தினம் (08) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.