விருதை திருப்பி அளித்த வைரமுத்து

கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கவுள்ளதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார். இவ் விடயம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்தித்திருந்து. நானும் அதனை நன்றி பாராட்டி வரவேற்றேன்.

நான்காவது தடவையாக வென்ற அசாட்

சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட், 95.1 சதவீதமான வாக்குகளுடன் நான்காவது தடவையாக வென்றுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவை, செய்தியாளர் மாநாடொன்றில் சிரியப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஹம்மெளடா சப்பாஹ் நேற்று அறிவித்த நிலையில், 14 மில்லியனுக்கும் அதிகமான சிரியர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்ற நிலையில், 78 சதவீதமானோர் வாக்களித்ததாகக் கூறியுள்ளார்.

அரசியல் செய்வதற்கு இது உகந்த நேரமில்லை: அதிமுகவினருக்கு அமைச்சர் பி.மூர்த்தி கண்டிப்பு

‘‘அரசியல் செய்வதற்கு இது உகந்த நேரமில்லை, ’’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமாருக்கு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறியுள்ளார்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடுகளை, அவ்வாறே, ஜுன் 7ஆம் திகதி வரையிலும் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 31ஆம் திகதி மற்றும் அடுத்த மாதம் 4ஆம் திகதிகளில் பயணக்கட்டுபாடு தளர்த்தப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குறித்த நாள்களில் பயணக்கட்டுபாடு தளர்த்தப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இலங்கை: கொரனா செய்திகள்

காலி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் இன்று(27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான அறிவுறுத்தலை ஜனாதிபதி வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார். குறித்த மூன்று மாவட்டங்களிலும், தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களில் வசிக்கின்ற மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

’ரோஷக்காரப் பீடாதிபதி’

‘ஆளுனர் அவமதித்து விட்டதால் 30 ஆண்டுகால பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற உள்ளேன்’ என்று விருதுநகர் அரச மருத்துவக் கல்லூரி பீடாதிபதி மாற்றப்பட்டு, விடுமுறையில் சென்றுள்ள பீடாதிபதி சுகந்தி ராஜகுமாரி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி !

செங்கல்பட்டிலுள்ள தடுப்பூசி உற்பத்தி மையத்தை குத்தகைக்கு தருமாறு மத்திய அரசாங்கத்திடம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார். இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை முழுமையாக தமிழகஅரசாங்கத்துக்கு மத்திய அரசாங்கம் குத்தகையாக வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால் அங்கு உடனடியாக தடுப்பூசி தயாரிப்பை தமிழக அரசாங்கத்தால் தொடங்க முடியும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

40 பேரைக் காணவில்லை, 20,000 பேருக்கு வீடில்லை

கிழக்கு கொங்கோ ஜனநாயகக் குடியரசில், எரிமலை வெடிப்பொன்றின் பின்னர் 40 பேரை இன்னும் காணவில்லையெனவும், 20,000க்கும் அதிகமானோர் வீடற்றவர்களாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.

தேவதாசி

(V S Venkadesan)
20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது.

விதிகளை ஏற்க கூகுள் ஆயத்தம்

இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டு, புதிய டிஜிட்டல் விதிகளை ஏற்க தயார் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. சமூக ஊடகங்களான ‘டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டர்கிராம்’ போன்ற நிறுவனங்கள் தங்களது பயனாளர்களின் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தலைமை நடவடிக்கை அதிகாரி, சிறப்பு பணி தொடர்பு நபர், உள்ளுறை குறைதீர் அதிகாரி ஆகியோரை நியமிக்க வேண்டும் என்பது உட்பட பல புதிய விதிகளை மத்திய அரசாங்கம் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி வெளியிட்டது. இந்த விதிகளுக்கு இணங்கிச் செயல்பட சமூக ஊடகங்களுக்கு மூன்று மாத அவகாசம் அளிக்கப்பட்டது. ‘விதிகளுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எதிராக தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.