இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, நாட்டிலுள்ள சகல திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்கள் ஆகியன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தியா: உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்

இந்தியாவில் அண்மைக்காலமாகக் கொரோனாத் தொற்றின் பரவலானது தீவிரமடைந்துவருகின்றது. இதன் காரணமாக அங்குள்ள வைத்தியசாலைகளில் படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை நிலவிவருகின்றது. குறிப்பாக வைத்தியசாலைகளில் ஒட்சிசன் பற்றாக்குறை காணப்படுவதால் வைத்தியசாலைகள் அண்மைக்காலமாகத் திணறிவருகின்றன. இந் நிலையில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஸ்ரிங்லா தெரிவித்துள்ளார்.

மியான்மார் விமானத்தளங்கள் மீது றொக்கெட்டுகள் ஏவப்பட்டன

மியான்மாரின் இரண்டு விமானத் தளங்கள் மீது அடையாளந் தெரியாத தாக்குதலாளிகள் இன்று றொக்கெட்டுகளை ஏவியபோதும் எதுவித உயிரிழப்புகளும் ஏற்படாததோடு, சிறியளவிலான சேதமே ஏற்பட்டுள்ளது. தாக்குதல்களுக்கு எவரும் உரிமை கோராத நிலையில், செய்தியாளர் சந்திப்பொன்றில் தாக்குதல்களை மியான்மார் இராணுவம் உறுதிப்படுத்தியிருந்தது.

அர்ஜுன் மகேந்திரன் இன்றி வழக்கை முன்னெடுக்க தீர்மானம்

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கை முன்னெடுத்து செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் ஜி. புஞ்சிஹேவா ஆகியோர் இன்றி தொடர்ந்தும் வழங்கினை முன்னெடுத்து செல்லவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று (29) வழங்கியுள்ளது. வழக்கின் மேலதிக விசாரணை அடுத்த மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகள் பல, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் மூடப்பட்டன. இன்றுக்காலை 7 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையிலேயே இந்த கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன என கொரோனா வைரஸ் தொற்று வியாபிப்பதைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிராதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வருகின்றது.   இந் நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா” எதிர் வரும் நாட்களில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால்  பல  இடங்களை முடக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.   எனவே அத்தியாவசியப் பொருட்களுடன் மக்கள் தயாராக இருப்பது நல்லது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிக அனுமதி: மீண்டும் திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு

தூத்துக்குடி: ஒக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

கையேந்துவதை விட இருப்பதை காப்போம்

கையேந்துவதை விட இருக்கும் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைக் காப்போம். சிறுபான்மையினரின் பூரண ஒத்துழைப்பின்றி, பெரும்பான்மை இன மக்களின் அமோக விருப்பத்துடன் இந்த அரசாங்கம் ஆட்சிப்பீடம் ஏறியிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாகப் பதவிப்பிமாணம் செய்ததன் பின்னர், நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையிலேயே அது தெட்டத்தெளிவானது.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளையும் இந்த மாதம் 30ஆம் திகதி வரை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் மேல் மற்றும் வடமேல் மாகாண பாடசாலைகளை மாத்திரம் தற்காலிகமாக மூடுவதற்கு கல்வி அமைச்சு அறிவித்திருந்த நிலையில், இன்று சகல பாடசாலைகளையும் மூட நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை, சகல தனியார் வகுப்புகளுக்கும் தடை ​விதிக்கப்பட்டுள்ளன.

வாபஸ் பெறுவதற்கான படிமுறைகள் ஆரம்பித்தன

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறுவதின் திட்டமிடப்பட்டதன் அங்கமொன்றாக உள்ளூர் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாக, ஆப்கானிஸ்தானிலுள்ள வெளிநாட்டு இராணுவப் படைகளின் தளபதியான, ஐக்கிய அமெரிக்க இராணுவ ஜெனரல் ஸ்கொட் மில்லர் நேற்று தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தான் படைகளிடம் படிப்படியாக வெளிநாட்டு இராணுவத் தளங்கள் கையளிக்கப்படுமென மில்லர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கு தங்களது அனைத்துப் படைகளும் தயாராவதாகவும், உத்தியோகபூர்வமான குறிப்பிட்ட திகதி மே மாதம் முதலாம் திகதி என மில்லர் தெரிவித்துள்ளார்.