கரோனாவை சரியாக கையாளவில்லை என புகார்: எடியூரப்பாவை மாற்ற பாஜக மேலிடம் திட்டம்?

கர்நாடகாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். முதல்வர் எடியூரப்பா, சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் ஆகியோரின் அலட்சியத்தாலேயே உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்துகொண்டு வருகின்றது. இந்நிலையில் நாளொன்றுக்கு நடத்தப்படவேண்டிய பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை 24 ஆயிரத்திலிருந்து 30,000 ஆக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், பி.சி.​ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டவர்கள், பரிசோதனைகளின் முடிவுகள் வெளிவரும் வரை தனிமையில் இருக்குமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நம்பிக்கையில் ​தோற்றார் நேபாளப் பிரதமர்

பாராளுமன்றத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பொன்றில் நேபாளப் பிரதமர் கஹட்கா பிரசாத் ஷர்மா ஒளி தோல்வியடைந்துள்ளார். அந்தவகையில், பிரதமர் பதவியில் தொடருவதற்கு தான் போதுமான ஆதரவைக் கொண்டிருக்கின்றார் எனக் காண்ப்பிப்பதற்கான பிரதமர் ஷர்மா ஒளியின் முயற்சி முடிவுக்கு வந்துள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

நாடு முழுயைாக முடக்கப்படாதென தெரிவித்துள்ள இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா   மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவ்வாறு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் பொருள்கள்  விநி​யோகம் மற்றும் மக்களின் அத்தியாவசிய சேவைகள் தடையின்றி தொடர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். 

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் இன்று 22 கொவிட்-19-ஆலான இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அந்தவகையில், உத்தியோகபூர்வ தரவின்படி இலங்கையில் கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 786ஆக உயர்ந்துள்ளது.  

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் அண்மைக்காலமாகக் கொரோனாத் தொற்றானது தீவிரமடைந்து வருகின்றது. இந் நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகளையும், வைத்தியசாலைகளிலுள்ள படுக்கைகளையும் அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சரும், அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளருமான டாக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

சிறைக்குள் இருந்தும், மோடியை எதிர்த்து ஒரு தேர்தல் வெற்றி!

சமூக செயற்பாட்டாளரான அகில் கோகாய் பா.ஜ.க அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவர் மீது 13 வழக்குகளைப் பதிவு செய்தது தேசிய புலனாய்வு முகமை.

தமிழர் உணர்வாழ்வு அமைப்பின் தலைவர் கைது

விடுதலைப் புலிகளை மீண்டும் முகநூல் வாயிலாக புதுப்பித்த குற்றச்சாட்டில் தமிழர் உணர்வாழ்வு அமைப்பின் தலைவர் க.மோகன் நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டுள்ளார. மட்டக்களப்பு செங்கலடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் முகநூல் வழியாக விடுதலைப் புலிகளை மீண்டும் புதுப்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டின் பேரில் 3 மாத கால பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதியினை பெற்று நேற்று இரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தன

பாகிஸ்தானில் வெடிக்கும் வன்முறைகள்

பாகிஸ்தானில் அண்மைக்காலமாக தெஹ்ரீக்-இ-லாப்பாய்க் கட்சியினரால் (டி.எல்.பி) பிரான்ஸ் அரசுக்கெதிராகப் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.

‘சீனா மேலும் அடக்குகிறது, ஆக்ரோஷமாகவிருக்கிறது’

அதிகரித்து வரும் பலம் வாய்ந்ததாக இருக்கின்ற சீனாவானது, உலக ஒழுங்குக்கு சவால் விடுப்பதாகவும், உள்நாட்டில் மேலும் அடக்குமுறையுடன் செயற்படுவதாகவும், வெளிநாடுகளில் மிகவும் ஆக்ரோஷமாக செயற்படுவதாக, சி.பி.எஸ் தொலைக்காட்சியின் 60 மினிட்ஸுடனான நேர் காணலில், ஐக்கிய அமெரிக்க இராஜங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.