‘சீனா மேலும் அடக்குகிறது, ஆக்ரோஷமாகவிருக்கிறது’

அதிகரித்து வரும் பலம் வாய்ந்ததாக இருக்கின்ற சீனாவானது, உலக ஒழுங்குக்கு சவால் விடுப்பதாகவும், உள்நாட்டில் மேலும் அடக்குமுறையுடன் செயற்படுவதாகவும், வெளிநாடுகளில் மிகவும் ஆக்ரோஷமாக செயற்படுவதாக, சி.பி.எஸ் தொலைக்காட்சியின் 60 மினிட்ஸுடனான நேர் காணலில், ஐக்கிய அமெரிக்க இராஜங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டை முழுமையாக முடக்கினால் பட்டினி மரணம் ஏற்படுமெனத் தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராணுவ சோதனைச் சாவடி இருப்பது எமது வசதிக்காகவே என்றும் அவர் தெரிவித்தார்.

கிர்கிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லை மோதல்களில் 31 பேர் பலி

கிர்கிஸ்தான் – தஜிகிஸ்தானின் பிரச்சினைக்குரிய எல்லையொன்றில், தண்ணீர்ப் பிரச்சினையொன்றையடுத்த மோதல்களில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதுடன், 150 பேர் காயமடைந்ததுடன், 10,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, நாட்டிலுள்ள சகல திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்கள் ஆகியன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தியா: உதவிக்கரம் நீட்டும் உலக நாடுகள்

இந்தியாவில் அண்மைக்காலமாகக் கொரோனாத் தொற்றின் பரவலானது தீவிரமடைந்துவருகின்றது. இதன் காரணமாக அங்குள்ள வைத்தியசாலைகளில் படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை நிலவிவருகின்றது. குறிப்பாக வைத்தியசாலைகளில் ஒட்சிசன் பற்றாக்குறை காணப்படுவதால் வைத்தியசாலைகள் அண்மைக்காலமாகத் திணறிவருகின்றன. இந் நிலையில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஸ்ரிங்லா தெரிவித்துள்ளார்.

மியான்மார் விமானத்தளங்கள் மீது றொக்கெட்டுகள் ஏவப்பட்டன

மியான்மாரின் இரண்டு விமானத் தளங்கள் மீது அடையாளந் தெரியாத தாக்குதலாளிகள் இன்று றொக்கெட்டுகளை ஏவியபோதும் எதுவித உயிரிழப்புகளும் ஏற்படாததோடு, சிறியளவிலான சேதமே ஏற்பட்டுள்ளது. தாக்குதல்களுக்கு எவரும் உரிமை கோராத நிலையில், செய்தியாளர் சந்திப்பொன்றில் தாக்குதல்களை மியான்மார் இராணுவம் உறுதிப்படுத்தியிருந்தது.

அர்ஜுன் மகேந்திரன் இன்றி வழக்கை முன்னெடுக்க தீர்மானம்

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கை முன்னெடுத்து செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் ஜி. புஞ்சிஹேவா ஆகியோர் இன்றி தொடர்ந்தும் வழங்கினை முன்னெடுத்து செல்லவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று (29) வழங்கியுள்ளது. வழக்கின் மேலதிக விசாரணை அடுத்த மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

திருகோணமலை மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகள் பல, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் மூடப்பட்டன. இன்றுக்காலை 7 மணிமுதல் அமுலுக்கு வரும் வகையிலேயே இந்த கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டன என கொரோனா வைரஸ் தொற்று வியாபிப்பதைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிராதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வருகின்றது.   இந் நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா” எதிர் வரும் நாட்களில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால்  பல  இடங்களை முடக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.   எனவே அத்தியாவசியப் பொருட்களுடன் மக்கள் தயாராக இருப்பது நல்லது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிக அனுமதி: மீண்டும் திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு

தூத்துக்குடி: ஒக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.