மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக போதைப்பொருட்களின் பாவனை மற்றும் விற்பனை குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இதன்படி, கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் போதைப்பொருட்களை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டில் 160 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மதுவரித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி நிக்சன் அவுஸ்கோன் தெரிவித்தார். இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலப் பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Category: செய்திகள்
ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்றிய இத்தாலி
இலங்கை: கொரனா செய்திகள்
கந்தன் கருணை படுகொலை நினைவுகளை மீட்போம்
இலங்கை: கொரனா செய்திகள்
போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் பேரணி
கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து,முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்கள், இன்று (01), விழிப்புணர்வு பேரணியொன்றை முன்னெடுத்ததுடன், கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். நாச்சிக்குடா சந்தியிலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, முழங்காவில் மகா வித்தியாலயம் வரை சென்று சென்றடைந்த்து. பின்னர், பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
இலங்கை: கொரனா செய்திகள்
சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள சினோபார்ம் தடுப்பூசி முதலில் கொழும்பு, ஹம்பாந்தோட்டை, கண்டி, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலுள்ள சீனர்களுக்கே முதலில் வழங்கப்படுமென்று பிரதான தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் இதனை இலங்கையர்களுக்கு ஏற்றுவதற்கான உரிய வயதினர் குறித்து சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர்கள் குழு தீர்மானித்தன் பின்னரே, சினோபார்ம் தடுப்பூசி இலங்கையர்களுக்கு ஏற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து திருப்பியனுப்பட்ட 24 பேர்
சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 24 பேர், அந்நாடுகளில் இருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பட்டுள்ளனர். குடிவரவு – குடியகழ்வு சட்டத்தினை மீறி 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இருந்து இவர்கள் அந்நாடுகளில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் அந்நாடுகளில் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.