இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 97 பேருக்கு இன்று (04) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை: கொரனா செய்திகள்

இலங்கையில் ஏற்றப்பட்டு வந்த கொவிசீல்ட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதென, தொற்று நோய் பிரிவின் பிரதானியும் தொற்றுநோய் பிரிவின் நிபுணருமான விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் பேரணி

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில், போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து,முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்கள், இன்று (01), விழிப்புணர்வு பேரணியொன்றை முன்னெடுத்ததுடன், கவனயீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். நாச்சிக்குடா சந்தியிலிருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, முழங்காவில் மகா வித்தியாலயம் வரை சென்று சென்றடைந்த்து. பின்னர், பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

இலங்கை: கொரனா செய்திகள்

சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள சினோபார்ம் தடுப்பூசி முதலில் கொழும்பு, ஹம்பாந்தோட்டை, கண்டி, புத்தளம் ஆகிய மாவட்டங்களிலுள்ள சீனர்களுக்கே முதலில் வழங்கப்படுமென்று பிரதான தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் இதனை  இலங்கையர்களுக்கு ஏற்றுவதற்கான உரிய வயதினர் குறித்து சுகாதார அமைச்சின் விசேட வைத்திய நிபுணர்கள் குழு தீர்மானித்தன் பின்னரே, சினோபார்ம் தடுப்பூசி இலங்கையர்களுக்கு ஏற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து திருப்பியனுப்பட்ட 24 பேர்

சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 24 பேர், அந்நாடுகளில் இருந்து இலங்கைக்கு திருப்பியனுப்பட்டுள்ளனர். குடிவரவு – குடியகழ்வு சட்டத்தினை மீறி 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இருந்து இவர்கள் அந்நாடுகளில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் அந்நாடுகளில் பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நுண்நிதி கடனை நிறுத்த கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்

நுண்நிதி கடனை நிறுத்த கோரி, முல்லைத்தீவில், இன்று (30) வெவ்வேறு அமைப்பினரின் ஏற்படும், 2 கவனயீர்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

நுண்கடன் திட்டத்துக்கு எதிராக கிளிநொச்சி, வவுனியா, மட்டக்களப்பிலும் கவனயீர்ப்பு

நுண்கடன் திட்டத்தை இல்லாமல் செய்து, பெண்களை பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தி, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பு ஆகிய இணைந்து, மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை, இன்று (30) முன்னெடுத்தன.

யாழுக்குப் பூட்டு; மேல் மாகாணத்துக்கு திறப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், யாழ். மாவட்டத்தில் மிக வேகமாக அதிகரித்து வருவதால், யாழ். கல்வி வலையத்திலுள்ள சகல பாடசாலைகளும் ஒரு வாரத்துக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்பு

திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்திக்குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த நிலையில் இன்று (28) மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலாமாக மீட்கப்பட்ட சிறுவன், தோப்பூர்-பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் லேனுஜன் (15 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.