பிரதமரின் கூட்டத்தை புறக்கணித்தார் மம்தா

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நிலவரம் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணித்தார்.

’அரசாங்கம் அழுத்தங்களுக்கு அடிபணியவில்லை’

“மாகாண சபை தேர்தலை இந்தியா அல்லது அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் நடத்துவதற்கு தீர்மானிக்கவில்லை” என்று அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தலைமன்னார் விபத்தில் 23 பேர் காயம்


தலைமன்னாருக்கு அருகில் ரயிலுடன் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 23 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் விபத்தில் ஒன்பது வயதான மாணவன் பலியாகியுள்ளார், சம்பவத்தில் 23 ​பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் பா.ஜனதா தோல்வி அடையும்

சட்டசபை தேர்தலில் தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் பா.ஜனதா தோல்வி அடையும் என்று சரத்பவார் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம், மேற்குவங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அசாம் தவிர மற்ற 4 மாநிலங்களில் பா.ஜனதா தோல்வியை தழுவும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

இலங்கை: கொரனா செய்திகள்

கொவிட் 19 தொற்று காரணமாக சிகிச்சைபெற்று வந்தவர்களில், மேலும் 395 பேர் பூரண குணமடைந்து இன்று(14) வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 84,648 ஆக அதிகரித்துள்ளது.

மட்டக்களப்பு விமான நிலையத்தை, ’சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டுகோள்’

மட்டக்களப்பு விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க இந்தியா அழுத்தம் தெரிவிக்க வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதியுடன் மோடி இன்று கலந்துரையாடியுள்ளார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் தொலைபேசியில் கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 250 நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடுத் திரும்பியுள்ளனர். இதுவரையில் மொத்தமாக 84 ஆயிரத்து 253 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நாட்டில் மேலும் 179 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

புர்காவைத் தடைசெய்வதற்கான ஆணையில் கைச்சாத்திட்ட அமைச்சர்

இலங்கையில் புர்காவைத் தடை செய்யும் அமைச்சரவைப் பத்திரத்தில், தான் கைச்சாத்திட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சரான, ஓய்வுபெற்ற றியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தீ விபத்து; 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை

இராகலை தோட்டம் 2ஆம் பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட தொழிலாளர் குடியிருப்பில் இன்று (12) அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. இந்த தீ விபத்தால் அந்த வீடுகளில் குடியிருந்த 14 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.