பாராளுமன்றத்தில் டை அணிய மறுத்ததால், நியூசிலாந்து மாவோரித் தலைவரான றவிரி வைடிடி இவ்வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், மேற்கத்தேய ஆடைகளை அணியத் தன்னை வலியுறுத்துவதானது தனது உரிமைகளின் மீறலொன்று எனவும், பழங்குடியினக் கலாசாரத்தை ஒடுக்குவதற்கான முயற்சியொன்று என வைடிடி தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள்
பஸ் சாரதியான பிள்ளையான் எம்.பி
சென்னை விமான நிலையத்தில் காமராஜர், அண்ணா பெயர்கள் நீக்கம்!
ஆளில்லாத தீவில் தேங்காய்களுடன் 33 நாள்கள் தப்பித்த 3 கியூபர்கள்
பஹமாஸிலுள்ள ஆளில்லாத தீவொன்றில் சிக்கியிருந்ததாக நம்பப்படும் மூவர் மீட்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அமெரிக்க கரையோரக் காவற்படை தெரிவித்துள்ளது. அங்குலிக்கா கேயில், தற்காலிகமாகத் தயாரிக்கப்பட்ட கொடியொன்றை அசைத்துக் கொண்டிருந்தபோதே வழமையான கண்காணிப்பிலிருந்த வான் குழாம் இவர்களைக் கண்டுள்ளது. இந்நிலையில், பெரும்பாலும் தேங்காய்களால் தாங்கள் உயிர் தப்பியதாக குறித்த கியூபப் பிரஜைகள் தெரிவ்வித்துள்ளனர். படகு மூழ்கியதைத் தொடர்ந்து இவர்கள் நீந்தி தீவை அடைந்துள்ளனர்
முதல் 5 உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களில் ஒன்றாக இடம்பிடித்த vivo
இலங்கை: கொரோனா தகவல்
நாட்டில் மேலும் 539 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 739ஆக அதிகரித்துள்ளது. கம்பஹா பொதுசந்தையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று (10) 75ஆக அதிகரித்துள்ளது. தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைவு
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவதற்காக கட்சி தொடங்கும் வகையில் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றி இருந்தார். ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்ததும் மக்கள் மன்ற நிர்வாகிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். மன்றத்தில் இருந்து விலகி பல்வேறு கட்சிகளிலும் சேர்ந்து வருகிறார்கள். இதனால் ரஜினி மக்கள் மன்றம் எல்லா மாவட்டங்களிலும் காலியாகி வருகிறது.