சுமந்திரன், சாணக்கியன் இல்லாவிட்டால் போராட்டம் பொத்துவிலிலேயே முடிந்திருக்கும் என, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன், பொத்துவில்-பொலிகண்டிப் பேரெழுச்சி தனிப்பட்டவர்களின் வெற்றி அல்ல எனவும், அவர் கூறினார்.
Category: செய்திகள்
’உயர்ந்த பதவியில் ஜனாதிபதி இருக்க வேண்டும்’ – விமல் வீரவங்ச
ஆளும் தரப்பில் விமலுக்கு கடும் எதிர்ப்பு
ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், முக்கிய உறுப்பினரான அமைச்சர் விமல் வீரவன்ச இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அறியமுடிகிறது. அமைச்சர் விமல் கட்சியை விமர்சித்து ஆற்றிய உரை குறித்து, இன்றைய கூட்டத்தில ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பலர் கடும் எதிர்ப்பை வெளியிட்டதையடுத்து, உறுப்பினர்களுக்கிடையில் கடும் வாதங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும், நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாகவே தான் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அமைச்சர விமல் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
பெயர் பலகையில் திருத்தம்…
யாழ்ப்பாணத்தில், புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர பஸ் நிலையத்தின் பெயர் பலகையில், தமிழில் இரண்டாம் மொழியாக இணைக்கப்பட்ட இடங்களின் பெயர்கள் முதலாவது இடத்துக்கு மாற்றப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், பெயர் பலகையில் “பேரூந்து நிலையம்” என எழுதப்பட்ட பெயர் “பேருந்து நிலையம்” எனவும் திருத்தப்பட்டுள்ளது.
சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் மாநாடு
இலங்கை: கொரோனா விபரம்
நாட்டில் மேலும் 514 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர்.இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 862 ஆக உயர்ந்துள்ளது. இன்று 740 பேர் குணமடைந்த நிலையில் தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 64 ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது.
அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாயை வழங்க தீர்மானம்
பாஜகவுக்கு தலைவலியாக பத்றுதீன் அஜ்மல் திருப்பம்
பொலிகண்டியில் நாட்டப்பட்ட “இரண்டு கற்கள்” குழப்பம் – நடந்தது என்ன?
பொத்துவிலில் தொடங்கிய பேரணி பொலிகண்டியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்போடு நிறைவுபெற்ற நிலையில் நிறைவிடத்தில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் தொடங்கி நடைபெற்று முடிந்த போராட்டத்தினை தங்களது போராட்டமாக முடித்துவைக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முன்னிலையில் சாணக்கியன் பொலிகண்டியில் கல் ஒன்றை நாட்டிவைத்தமையாலேயே குழப்பம் ஏற்பட்டதாக சம்பவத்தில் பங்குகொண்டவர்கள் தெரிவித்தனர்.
முல்லையின் எதிர்காலம் தொடருக்கு விண்ணப்பம் கோரல்
முல்லைத்தீவு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால், முல்லையின் எதிர்காலம் எனும் இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடர் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில், முல்லைத்தீவு, முள்ளியவளை, மாங்குளம், புதுக்குடியிருப்பு, விசுவமடு ஆகிய பிரசித்திபெற்ற இடங்களை மய்யப்படுத்தி அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.