348 பேருக்குக் கொரோனா

பெலியாகொட கொரோனா கொத்தணியைச் சேர்ந்த மேலும் 348 பேருக்குக் இன்று (01) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்து 174ஆக அதிகரித்துள்ளது.

பௌத்தமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலுக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டத்துக்கு தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றுதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய முடிவுகளை 21 ஆம் திகதி வெளியிடுகிறார் – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சி சட்டமன்ற தேர்தலை சந்திக்க தீவிரமாகி வருகிறது. அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக தமிழகத்தில் வலுவான 3ஆவது அணி அமையும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து கூறி வருகிறார். அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகள் கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

‘39 விமானங்களில் 135 பேர் பயணம்’

இலங்கையில், இன்று (31) காலை 8.30 வரையான 24 மணிநேரத்தில், 39 விமான சேவையூடாக, 135 பேர் பயணங்களை மேற்கொண்டுள்ளனர் என, கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

’கிழக்கு மாகாணத்துக்கு 14,010 தடுப்பூசிகள் கிடைத்தன’

கிழக்கு மாகாணத்தில் 14,010 கொவிட் 19 தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

த.தே.ம.மு உறுப்பினர்கள் 9 பேர் நீக்கம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளுராட்சி உறுப்பினர்கள் 09 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தரப்புடன் இணைந்து செயற்பட்டக் குற்றச்சாட்டின் கீழேயே, இவர்கள் உறுப்பினர்களே நீக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகளின் கோபத்தை தூண்டியது பாஜக

விவசாயிகளிடம் கோபத்தை தூண்டி, வன்முறையை இறக்கியது பாஜகதான், விவசாயிகள் நடத்தி வரும் வேளாண் போராட்டத்தை களங்கப்படுத்த முயல்கிறது என்று சிவசேனா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இந்தியாவின் தடுப்பூசியை ஜனாதிபதி பெற்றுக்கொண்டார்

இந்திய அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்ட 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை தாங்கிய விசேட விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று முற்பகல் 11.30க்கு வந்தடைந்தது. அந்த தடுப்பூசிகளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொண்டார். அதனை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பால்​கே கையளித்தார்.

மக்களோடு மக்களாய்…

தம்பலகாமம் கோட்டத்திற்குற்பட்ட வளங்கள் குறைந்த பாலம்போட்டாறு சித்தி விநாயகர் வித்தியாலய அதிபரின் வேண்டுகோளுக்கினங்க புலம் பெயர் தேசத்தில் உள்ள எமது தோழர்களின் நிதிப்பங்களிப்பின் மூலமாக பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் சுகாதார நடைமுறைகளை பின் பற்றி இடம் பெற்றது.இந்நிகழ்வில் எமது தோழர்களின் சார்பாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தேன். இந்நிகழ்வை பாடசாலை அதிபர் அவர்கள் தலமை தாங்கியதுடன் பிரதம விருந்தினராக வலயக்கல்வி பணிப்பாளர் அவர்களும் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நேபாள ஆளும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிரதமர்

நேபாளத்தின் ஆளும் கட்சியான கம்யூனிசக் கட்சியிலிருந்து அந்நாட்டின் இடைக்காலப் பிரதமர் கே.பி. ஷர்மா ஒளி இன்று வெளியேற்றப்பட்டதாக அவரது எதிரணியினர் தெரிவித்துள்ளனர்.