துருக்கி ஆதரவளிக்கும் சிரிய தேசிய இராணுவத்துக்கும், குர்திஷ்களால் தலைமை தாங்கப்படும் சிரிய ஜனநாயகப் படைகளுக்குமிடையிலான மோதல்கள் இம்மாத நடுப்படுதியிலிருந்து அதிகரித்துள்ளன.
Category: செய்திகள்
ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை
இரு கிராமங்கள் முற்றாக மூழ்கின
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இரு கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து மக்கள் வெளியே வர முடியாதளவுக்கு அவை வெள்ள நீரால் சூழப்பட்டிருப்பதாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி தெரிவித்தார்.
204 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை
உக்ரைனில் இருந்து மேலும் 204 சுற்றுலா பயணிகள் இன்று(29) மத்தல விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். உக்ரைனில் இருந்து 180 சுற்றுலா பயணிகள் நேற்று நாட்டுக்கு வருகைதந்திருந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டை வந்தடைந்த சுற்றுலா பயணிகள் பெந்தோட்டை மற்றும் கொக்கல ஆகிய பிரதேசங்களில் உள்ள ஹோட்டல்களில் தங்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
ஜா- எல பகுதியில் தொற்று அதிகரிப்பு
கட்டுநாயக்க- சீதுவ பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான ஐவர் இன்று(29) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். இவர்கள் ஜா- எல பிரதேசத்திலுள்ள விவசாய உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி நிறுவன ஊழியர்கள் 41 பேர் நேற்றைய தினமும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
மரண அறிவித்தல்
கடைசி உண்ணாவிரதப் போராட்டம்
சிவரூபன், சர்மா உள்ளிட்ட 14 பேரின் விவரம் வெளியானது
மன்னாரில்…
“மத ரீதியான உரிமைகளை சக மதத்தவர்களுடன் இணைந்து வெற்றி கொள்வோம்” எனும் தொணிப்பொருளில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) ஏற்பாடு செய்திருந்த விசேட நத்தார் நல்லிணக்க நிகழ்வும். கொரோனா விழிர்ப்புணர்வு செயற்பாடும் மன்னார் பள்ளிமுனை பாரம்பரிய நினைவுச்சின்னமான பெருக்க மர பகுதியில் மெசிடோ நிறுவனத்தின் குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை 11 மணியளவில் இடம் பெற்றது.