த.தே.கூ எம்.பியின் இரகசியம் நாமலால் அம்பலம்

நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று (08) கலந்துக்கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், அரசாங்கத்தின் ஒரு கிலோமீற்றர் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தில் ஒரு கிலோமீற்றர் பாதைக்குகூட செப்பனிடப்படவில்லை எனக் குற்றஞ்சுமத்தினார்.

தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் டிசம்பர் 14-ம் தேதி முதல் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் விவசாயிகள் பெருந்திரளாகப் பங்கேற்பர் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளை பாரத் பந்த்; அமைதியை உறுதி செய்து பாதுகாப்பை பலப்படுத்துங்கள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நாளை நடத்தும் பாரத் பந்த்தின்போது அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க பாதுகாப்பை பலப்படுத்துங்கள். அமைதியை உறுதி செய்யுங்கள் என்று மாநில அரசுகளையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவு: 35 விருதுகளைத் திருப்பித் தர குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கிச் சென்ற தடகள வீரர்கள் தடுத்து நிறுத்தம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக, தடகள வீரர்கள் தாங்கள் பெற்ற பதக்கங்கள், விருதுகளைத் திருப்பி அளிக்க குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கிச் சென்றபோது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

குவைத் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரணி முன்னேற்றம்

குவைத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் ஏறத்தாழ அரைவாசி ஆசனங்களை எதிரணி பெற்றுள்ளது. அரச தொலைக்காட்சியில் தேர்தல் ஆணைக்குழுவால் நேற்று அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, கடந்த நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்களைக் கொண்டிருந்த எதிரணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் அல்லது எதிரணியை நோக்கிய வேட்பாளர்கள், 50 ஆசனங்களைக் கொண்ட தேசிய சட்டசபையில் இம்முறை 24 ஆசனங்களைப் பெற்றுள்ளனர். எவ்வாறெனினும் இத்தேர்தலில் 29 பெண்கள் போட்டியிட்டபோதும் எவரும் வெல்லவில்லை.

எதியோப்பிய திக்ரேயில் மோதல்கள்

எதியோப்பியாவின் திக்ரேயின் பகுதிகளில் குண்டுத் தாக்குதல்கள், களவு, மோதல்கள் நேற்று தொடருவதாக திக்ரே மக்களின் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. குறித்த முன்னணியின் தலைவர்களைக் கைப்பற்றுவதற்கு சில நாள்களே உள்ளதாக எதியோப்பிய அரசாங்கப் படைகள் பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்தே மேற்குறித்த கருத்தை முன்னணி வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 326 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களுள் 172 பேர் பேலியகொடை கொத்தணியைச் சேர்ந்தவர்கள் எனவும் சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 28,203ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20,804ஆக அதிகரித்துள்ளது.

’வடக்கு, கிழக்கில் மீன்பிடி துறைமுகங்கள் உருவாகும்’

மீன்பிடித் துறை அமைச்சர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், அடுத்த ஐந்து வருடங்களில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்குத் தேவையான மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும் என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

’மினுவாங்கொடை கொத்தணி உக்ரேன் பிரஜையிடம் ஆரம்பம்’

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உக்ரேனிலிருந்து வருகை தந்த விமான ஊழியரால் ஏற்பட்டது என்று நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர், மருத்துவர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே நாடாளுமன்றில் இன்று (07) இதனைக் கூறியுள்ளார்.

புரெவிச் சூறாவளி தாக்கம்; 72 ஆயிரத்து 410 பேர் பாதிப்பு

புரெவி சூறாவளியின் தாக்கத்தையடுத்து,அசாதாரண காலநிலை காரணமாக, யாழ். மாவட்டத்தில் தற்போதுவரை 21 ஆயிரத்து 884 குடும்பங்களைச் சேர்ந்த 72 ஆயிரத்து 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.