ரஸ்யாவுக்குச் சென்ற 27 இலங்கையர்கள் கைது

போலி ஆவணங்களை சமர்ப்பித்து, கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்காக ரஸ்யாவுக்குச் சென்ற 27 இலங்கையர்கள் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, ரஸ்யாவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

பிராந்தியத் தலைநகரை சரணடைய திக்ரே படைகளுக்கு 72 மணித்தியால காலக்கெடு

திக்ரே பிராந்தியத் தலைநகர் மெகெல்லே மீது இராணுவம் வலிந்த தாக்குதல் ஒன்றை ஆரம்பிக்க முன்னர் சரணடைவதற்கு 72 மணித்தியாலங்களை திக்ரே பிராந்தியப் படைகளுக்கு எதியோப்பியப் பிரதமர் அபி அஹ்மட் வழங்கியுள்ளார்.

தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம்

மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புவதில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாமென கல்வி அமைச்சுப் பெற்றோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கை: 2021 பட்ஜெட்டுக்கு 151 ஆதரவு

அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) மாலை நடைபெற்றது. அதில், பட்ஜெட்டுக்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

எதிலும் தலையிடவில்லை’ -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய தொலைக்காட்சியின் ஊடாக, நாட்டு மக்களுக்கு உரையாற்றி கொண்டிருக்கின்றார். ஏனைய நாடுகளுடன் நட்புற பேணப்படும் எனத் தெரிவித்த அவர், கடந்த ஒருவருட காலத்தில், சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நீதித்துறையில் எவ்விதமான தலையீடுகளும் செய்யப்படவில்லை என்றார்“கடந்த நவம்பரில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் தனது அரசாங்கம் பொருளாதாரத்தை மேம்படுத்தி வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்தியது” என்றும் தனதுரையில் தெரிவித்தார்.

மீனை பச்சையாக சாப்பிட்ட எம்.பி

கொரோனா அச்சத்தின் காரணமாக, மீன்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவது குறைந்துவருகின்றது. கடலுணவுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை போக்குவதற்கு அரசாங்கம் பல்வேறான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. இந்நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி, கொழும்பில் சற்றுமுன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், பச்சை மீனொன்றை அப்படியே பச்சையாக சாப்பிட்டு காண்பித்தார்.

இத்தாலியில் கடந்தாண்டு செப்டெம்பரிலேயே பரவிய கொவிட்-19

இத்தாலியில் கடந்தாண்டு செப்டெம்பர் மாதத்திலேயே கொவிட்-19 பரவியதாக அந்நாட்டின் மிலன் நகர தேசிய புற்றுநோய் நிறுவகத்தின் ஆராய்ச்சியொன்று வெளிக்காட்டியுள்ளது. இந்நிலையில், மத்திய சீனாவிலுள்ள வுஹானில் கொவிட்-19 பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம், சத்தமில்லாமல் வேறெங்கும் கொவிட்-19 பரவியிருக்கும் சந்தர்ப்பத்தை நிராகரிக்க முடியாது என்று கூறியுள்ளது. இத்தாலியில் முதலாவது கொவிட்-19 நோயாளர், வட பிராந்தியமான லொம்பார்டியில் மிலனுக்கு அருகிலுள்ள சிறிய நகரமொன்றிலேயே கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.

அனுஷா சந்திரசேகரனின் தலைமையில் புதிய கட்சி

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெ.சந்திரசேகரனின் புதல்வியும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் தலைமையில், மலையகத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகவுள்ளதாக, உயர்மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

’யாரும் என்னுடன் இதுவரை பேசவில்லை’

கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு அரசாங்கம் நியமித்த எந்தவொரு குழுவும்; தன்னுடன் இதுவரை ஒரு தடவையேனும் பேச்சு நடத்தவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கவலை தெரிவித் தார்.

பட்ஜெட்டில் பங்கேற்க மூன்று எம்.பிகளுக்கு இடமில்லை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாளை (17) வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார். இதன்போது, அமர்வில் பங்கேற்க சிறையிலுள்ள மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.