பிரியங்கா காந்தி

கடந்த சில மாதங்களாக உத்திரப்பிரதேச அரசியலை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் தெரியும். உத்திரப்பிரதேச அரசை தீவிரமாக எதிர்த்து மக்களுக்கு ஆதரவான போராட்டக் களத்தில் நிற்பவர்கள்
பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களான மாயாவதி,அகிலேஷ் யாதவ் அல்ல. பிரியங்கா காந்தி தான்.

குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர் துயரத்தில் தீவிரமாக துணைநின்றவர். இதற்காக அவர் மீது,உ.பி. காங்கிரஸ் கமிட்டி தலைவர் மீதும் ஏராளமான வழக்குகள்,கைதுகள்.

உத்திரப்பிரதேச அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக பிரியங்கா காந்தி உருவெடுத்து வருகிறார். தேசிய அரசியலில் தெளிவான இடம் இருந்தும் உத்திரப்பிரதேச அரசியலில் காங்கிரஸ் கட்சி தனக்கு இட்ட அரசியல் பணியை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார் பிரியங்கா.

இதைப் பொறுக்கமுடியாத மோடி அரசு பிரியங்காவின் பாதுகாப்பு கருதி அரசு வழங்கிய வீட்டை காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

சுற்றிப்பார்த்தாலே கால்வலி எடுக்கும் ஆனந்த பவனம் மாளிகையையே நாட்டுக்கு அர்ப்பணித்த குடும்பம் இந்த அல்பத்தனத்திற்கா அஞ்சிவிடப்போகிறது.

பிரியங்கா காந்தி தான் இந்திராவின் பேத்தி என்று நிரூபிப்பார். அந்த பயம் தான் பிஜேபியை விரட்டுகிறது.

இந்த அரசையும் நிர்வாகத்தையும் இனிமேலும் எப்படி நம்புவது?

ஜூன் 16 அன்று கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்களால் காப்பாற்றி கரைக்குக் கொண்டுவரப்பட்டு, மணல்மேல்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார் தங்கச்சிமடம் சேசு. ஜூன் 13-ல் கடலுக்குச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த வில்லியம் ஹைடோவின் விசைப்படகு, அன்று இரவே நடுக்கடலில் விபத்துக்குள்ளானது. கரோனா மற்றும் தடைக்கால நிறுத்தம் போன்றவற்றுக்குப் பின்னான பயணம் அது. அதிகம் பராமரிக்கப்படாத பழுதான பழைய விசைப்படகு என்பதால், ஆழ்கடலில் படகுக்குள் கடல்நீர் வர ஆரம்பித்திருக்கிறது. தண்ணீரை வெளியேற்றும் பம்ப் வேலை செய்யவில்லை. படகு மூழ்கும் அபாயத்தில் இருக்க, அனைவரும் கிடைத்ததைப் பிடித்துக்கொண்டு கடலில் சாடியிருக்கிறார்கள்.

தோழர் தேவன் தம்பி இற்கு அஞ்சலி

மட்டக்களப்பு திருப்பழுகாமம் பிறப்பிடமாகவும் கொண்டவரும் தோழர் பத்மநாபாவை சிறுவயதில் இருந்து நேசித்த வரும் எவ்வளவோ துன்பங்கள் துயரங்கள் வரும்போதும் தோழர் பத்மநாபாவின் வழியில் நின்று கடைசி வரையும் ஆயுதப்போராட்டம் அரசியல் போராட்டம் எல்லாவற்றிலும் பங்குகொண்டு கடைசி வரைக்கும் தோழர் பத்மநாபாவை நேசித்த வரும் இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக தேவன் என்று அழைக்கப்படும் (தேவன் தம்பி தோழர்) அவர்களுக்கு எமது தோழமை புரட்சிகர அஞ்சலி

மதுரை கரோனா கண்காணிப்பு அதிகாரி திடீர் மாற்றம்: சு.வெங்கடேசன் எம்.பி.யின் புகார்தான் காரணமா?

கரோனா பரவல் தடுப்புப் பணிக்காக 33 மாவட்டங்களுக்கும் 33 ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்புக் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மதுரை மாவட்ட சிறப்பு அதிகாரி அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். சு.வெங்கடேசன் எம்.பி.யே இந்த மாற்றத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

மக்களோடு மக்களாய்: தமிழர் ஜனநாயகக் கட்சி

வவுனியாவில் தமிழர் ஜனநாயக கட்சியினர் நடாத்திய தியாகிகள் தினம் உலகெங்கும் நடைபெற்ற இணைய வழி செயற்பாட்டின் ஒரு அங்கமாக செயற்படுதப்பட்டது

சென்னையில் இன்று மாத்திரம் 26 பேர் உயிரிழப்பு

சென்னையில் இன்று(22) மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் 26 நபர்கள் உயிரிழந்துள்ளனர். சென்னையில் தினமும் 1500க்கு அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வாகனங்களை எல்லைக்கருகில் நகர்த்திய சீனா

சீன மக்களின் விடுதலை இராணுவமானது கல்வான் பள்ளத்தாக்குக்கு ஒரு வாரத்தில் 200க்கும் மேலான ட்ரக்குகள், நான்கு சக்கர வாகனங்கள், புல்டோஸர்கள், நிலத்தை நகர்த்து உபகரணத்தை நகர்த்தியுள்ளது.

பிரமதாஸவே ஆயுதம் கொடுத்தார்: ‘நானே சாட்சி’ – கருணா

தான் அம்பாறையில் கூறியிருந்த கருத்தை வைத்துக்கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர், தனக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருவதாக, முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), தெரிவித்தார்.

வருத்தம் தெரிவின்றோம்

சதாசிவம் ஜீவா என்பவரின் பதிவான ‘சேந்தன்’ என்ற தலைப்பிடப்பட்டு ஜுன் 15, 2020 இல் சூத்திரத்தில் வெளியான கட்டுரையில் பாவிக்கப்பட்ட விடயங்கள் சிலவற்றில் தனிப்பட முறையில் ஒருவரைப் பற்றிய விடயதானம் ஊடக தர்மத்திற்கு முரணாக இருப்பதாக ஆசிரியர் குழுவிற்கு எனது இணையத்தின் வாசகர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அப்பகுதியை நீக்கியுள்ளோம். மேலும் இந்த தவறிற்காக வருந்துகின்றோம். – ஆசிரியர் குழு

’இயற்கை சமநிலையை ஏற்படுத்த வேண்டும்’

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், இயற்கை சமநிலையை ஏற்படுவதற்கு அனைவரும் முன்வர வேண்டுமென, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர். க. மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், இன்று (09) நடைபெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.