பயம், அச்சம் இன்றி வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும்

கோட்டாபய வின் வெற்றிக்காக வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவரும் பயம், அச்சம் இன்றி வாழக்கூடிய, பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயல்படுவார் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

13 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றார் கோத்தாபய ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ 13 இலட்சத்துக்கும் அதிக வாக்குகளினால் வெற்றி பெற்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீர இராஜினாமா

நிதியமைச்சர் மங்கள சமரவீர, தமது அமைச்சு பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக தெரிவித்து, தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது அமைச்சு பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்வதாக அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். எனினும், ஜனாநாயகத்துக்கான போராட்டத்தில் தொடர்ந்தும் ஐ.தே.கவுடன் இணைந்து போராடவுள்ளதாகவும் அவர் டுவிட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை: ஜனாதிபதித் தேர்தல் 2019 முடிவுகள்

கோட்டாபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்


இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதாக உத்தியோகப்பற்றற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. அவருக்கு தனது வாழ்த்துகளை சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கூடவே ஐதே கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து ராஜினமா சஜித்செய்துள்ளார். தமிழ் பிரதேசம் எங்கும் தனது வெற்றியை உறுதி செய்த சஜித் பிரேமதாச சிங்களப் பகுதிகளில் அதனை உறுதி செய்ய முடியவில்லை. தமிழ் பகுதிகளில் கோட்டபாய பெற்ற மிகக் குறைவான வாக்குகள் தமிழ் மக்களின் எண்ணைக் கருத்தை வெளிப்படுத்துவதாக அமைகின்றன. இதே வேளை அனுர குமார திசநாயக்க விற்கு கூடிய கூட்டம் அவருக்கான ஆதரவான வாக்குகளாக மாறவில்லை என்பதையும் உணர முடிகின்றது