சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு செப்டெம்பர் 3ஆம் திகதி

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு செப்டெம்பர் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இந்த விடயத்தை கூறினார்.

‘பேச்சுவார்த்தையின் இறுதியில் வேட்பாளர் மாறலாம்’

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கு இடம்பெறும் பேச்சுவார்த்தை நிறைவடையும்போது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக இல்லாமல் போவதற்கும் சந்தர்ப்பம் உள்ளதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

ரணிலின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம்

வவுனியாவுக்கு இன்று பிற்பகல் வருகை தந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், கவனயீர்ப்புப் போராட்டமொன்றை மேற்கொண்டனர்.

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை ஒன்றை நடத்தி, அவர்களின் பெரும்பான்மையுடன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். முல்லைத் தீவில் நேற்று(12) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 7 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக விசைப்படகை கைப்பற்றி அதிலிருந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். நேற்று ராமேஸ்வரத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். செவ்வாய்க்கிழமை அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த கிசிங்கர் என்பவருக்குச் சொந்தமான ஒரு விசைப்படகை ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைப்பற்றி அதிலிருந்து கிசிங்கர், மரிய கிதியோன், சிம்சோன், மரிய மில்லர், இன்னாசி, ஜார்ஜ், மெல்சன், ஆகிய 7 மீனவர்களை சிறைப்பிடித்தனர்.

நெல்லிக்காயுடன் பாகற்காய் சேர்த்து ஜூஸாக்கிக் குடித்தால் இன்சுலின் சுரக்கும்: சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி!

சர்க்கரை நோயாளிகளை மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்கலாமா? என்று நீதிமன்றம் கேள்வி கேட்குமளவுக்கு நிலைமை கவலைக்கிடமாகிவிட்டது. அதெல்லாம் பணக்கார நோயாச்சே...' என்று சொன்ன காலமெல்லாம் இன்று மலையேறி விட்டது. ஏழை-பணக்காரன், குழந்தை-பெரியவர் என்ற வித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் வருகிறது. அதேபோல,அது ஒரு பரம்பரை வியாதி; பெற்றோருக்கு இருந்தால் பிள்ளைகளைப் பாதிக்கும்’ என்று சொல்லப்படும் இலக்கணங்களையெல்லாம் மீறி யாருக்கு வேண்டுமானாலும் அழையா விருந்தாளியைப்போல வந்து போகிறது.

‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு தேசிய விருது இல்லையா? – இயக்குநர்கள் காட்டம்

‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து இயக்குநர் பிரம்மா மற்றும் லெனின் பாரதி ஆகியோர் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். சமீபத்தில் 66-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழுக்கு ‘பாரம்’ என்ற படத்துக்கு மட்டுமே விருது கிடைத்தது. மற்ற எந்தவொரு பிரிவிலும் தமிழ்ப் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படவில்லை.

கேரள நிலவரம்: பாறைகளுடன் தேயிலைத் தோட்டமும் உருண்டு வந்த பயங்கரம்- நேரில் பார்த்த தேயிலைத் தோட்ட தொழிலாளி

கேரளா வயநாடு மாவட்டத்தில் புதுமலா கிராமத்தில் நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டு 24 மணி நேரங்கள் ஆகிறது. ஆனாலும் இப்போது வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றிய ஒரு தகவலும் இல்லை என்று கேரளா தொலைக்காட்சிச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.

தோழர்சா.தியாகலிங்கம்எம்மைவிட்டுப்பிரிந்தார்!


ஆகஸ்ட் 8, 2019

யாழ்ப்பாணமாவட்டத்தின்சிறந்தஆசிரியர்களில்ஒருவரும், நாரந்தனைகணேசவித்தியாலயம், கொழும்புத்துறைஇந்துமகாவித்தியாலயம்என்பனவற்றின்முன்னாள்அதிபருமானதோழர்சாம்பசிவம்தியாகலிங்கம்அவர்கள்சுகவீனம்காரணமாகதமது 68ஆவதுவயதில்யாழ்ப்பாணத்தில்காலமானார்.
தோழர்தியாகலிங்கம்தாம்கற்பித்தபாடசாலைகளில்மட்டுமின்றி, பொதுவாகஅனைத்துப்பிள்ளைகளினதும்கல்வியில்எப்பொழுதும்அதிகஅக்கறைகாட்டிச்செயற்பட்டஒருவராவார்.