சாத்தான் வேதம் ஓதுகிறது..!

கனடா ஒன்ராறியோ பாராளுமன்றத்திற்குத் தெரிவாகிய இரண்டு தமிழர்களிற்கும் வாழ்த்துகள்! தமிழர்கள் புலம்பெயர் தேசத்தில் அரசியலில் பலம் பெறுவது வரவேற்கத்தக்க விடயம். இதில் மாறுபாடு கிடையாது !

(“சாத்தான் வேதம் ஓதுகிறது..!” தொடர்ந்து வாசிக்க…)

கல்வியில் நாம் மீண்டு வர வேண்டும்

இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் நாங்கள் எங்களை சரி செய்து கொண்டு விஞ்ஞானத் துறையில் எங்களுடைய மாணவர்களை மேலே கொண்டுவரவில்லையென்றால் நாங்கள் இங்கே கூக்குரலிடுவதிலே எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். நாங்கள் சிங்கள மயமாக்கலுக்குள் சங்கமமாகி சரணாகதி அடைகின்ற நிலைமையே ஏற்படும். என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

(“கல்வியில் நாம் மீண்டு வர வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

With wind in her sails, ‘Steeltown Scrapper’ eyeing Ontario premier’s office

(The Canadian Press)

Sitting behind a small table at the back of her campaign bus as it rumbles down the highway, Andrea Horwath ponders the winding road that has led her to the very doors of the premier’s office. If polls are even close to right, the leader of Ontario’s New Democrats has for the first time a real chance at crossing the threshold after Thursday’s provincial vote. Life, the Hamilton politician says, has prepared her for this moment.

(“With wind in her sails, ‘Steeltown Scrapper’ eyeing Ontario premier’s office” தொடர்ந்து வாசிக்க…)

மக்கள் ஆட்சித் தலைவர்

கரூர் மாவட்டம், சின்னநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராக்கம்மாள் பாட்டிக்கு வயது எண்பது. கணவர் எப்போதே மறைந்துவிட, தனது மகள்கள் இருவரும் தனது இறுதிக் காலத்தை இன்பமாக நகர்த்த பயன்படுவார்கள் என்று மலைபோல நம்பியிருக்கிறார். ஆனால், அவர்கள் ராக்கம்மாளைக் கண்டுகொள்ளாமல் தனித்துவிட, தனக்குச் சொந்தமான `இப்பவோ அப்பவோ’ என்று உடைந்து, ஓட்டை உடைசலாக நிற்கும் கூரை வீட்டில், தட்டுமுட்டுச் சாமான்கள் சிலவற்றோடு மல்லுக்கட்டியபடி காலத்தை கடத்தி வந்திருக்கிறார்.

(“மக்கள் ஆட்சித் தலைவர்” தொடர்ந்து வாசிக்க…)

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன் பறிகொடுப்பாரா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடமிருந்து பறிப்பதற்காக, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர் மீண்டும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்காகச் சம்பந்தனுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சமர்ப்பிப்பது தொடர்பாக, அவர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதற்கு முன்னரும் அவர்கள் அடிக்கடி இந்தக் கோரிக்கையை முன்வைத்து கோஷம் எழுப்பியிருக்கிறார்கள்.

(“எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன் பறிகொடுப்பாரா?” தொடர்ந்து வாசிக்க…)

‘கூட்டமைப்பினர் பேசிய ஆதாரங்களை வெளியிடத்தயார்’ – EPDP

ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் ஆதரவு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொலைபேசி ஊடாக பேசியமைக்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன எனவும் தேவை எனில் அவற்றை வெளியிட நாம் தயார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

(“‘கூட்டமைப்பினர் பேசிய ஆதாரங்களை வெளியிடத்தயார்’ – EPDP” தொடர்ந்து வாசிக்க…)

“மத்திய அரசிடம் இருந்து சாதி, மதவெறிக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது” – உ.வாசுகி பேட்டி

‘மத்திய அரசிடம் இருந்து சாதி மற்றும் மதவெறிக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது’ என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான உ.வாசுகி தெரிவித்துள்ளார்.

(““மத்திய அரசிடம் இருந்து சாதி, மதவெறிக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்பார்க்க முடியாது” – உ.வாசுகி பேட்டி” தொடர்ந்து வாசிக்க…)

நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து கேவலமான அரசியலின் மற்றுமோர் அத்தியாயம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான நாடாளுமன்ற விவாதம், இன்று நடைபெறவிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிலரும், பகிரங்கமாகவே பிரதமருக்கு எதிராகக் கருத்து வெளியிட்டு வரும் நிலையில், இந்தப் பிரேரணை பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி விவகாரமே, இந்தப் பிரேரணையில், பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டாகும்.

(“நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்து கேவலமான அரசியலின் மற்றுமோர் அத்தியாயம்” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்பின் பிடி முன்னணியின் சறுக்கல்

(புருஜோத்தமன் தங்கமயில்)
அரசியலில், கிடைத்த சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்துவது மாத்திரமல்ல; சாதகமான சந்தர்ப்பங்களை உருவாக்குவதும் அடிப்படையானது. அதற்கு, சாவகச்சேரி நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருப்பதை அண்மைய உதாரணமாகக் கொள்ளலாம். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு- கிழக்கு பூராவும் கூட்டமைப்பு சுமார் இரண்டு இலட்சம் வாக்குகளை இழந்தது. முக்கியமாக, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகர சபைகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் தோல்வியடைந்திருந்தது.

(“கூட்டமைப்பின் பிடி முன்னணியின் சறுக்கல்” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்ரீதேவி, மிதுன், போனி கபூர்… ராம் கோபால் வர்மா சொன்னதும் நிஜத்தில் நடந்ததும் என்ன?

(எம்.குமரேசன் எம்.குமரேசன்)

`நடிகை ஸ்ரீதேவி, உண்மையிலேயே சந்தோஷமாக வாழ்ந்தாரா அல்லது நிஜத்திலும் நடித்தாரா?’ என்று பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்ரீதேவி, வாழ்க்கையில் பல விஷயங்களில் தோல்வியைச் சந்தித்தவர்தான். கோலிவுட்டுடன் ஒப்பிடுகையில் பாலிவுட் மிகப் பெரியது. பத்மினி, வைஜெயந்தி மாலா, வஹிதா ரஹ்மான், ஹேமமாலினி, ரேகா வரிசையில் தென்னிந்தியாவிலிருந்து சென்று பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிபெற்றவர் ஸ்ரீதேவி. பாலிவுட்டில் `லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற அந்தஸ்த்தைப் பெற்ற ஒரே நடிகை இவர் மட்டுமே! அவரின் சொந்த வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாகவா இருந்தது?

(“ஸ்ரீதேவி, மிதுன், போனி கபூர்… ராம் கோபால் வர்மா சொன்னதும் நிஜத்தில் நடந்ததும் என்ன?” தொடர்ந்து வாசிக்க…)