ஓரு தேசம்…

கொடி நாள் கொண்டாடிய மறுநாளே அதன் காவலன் மீது…

தலைமை தளபதியின் மீதே கொடி போர்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி இருக்கிறானா காலன்…..

விமான விபத்தா….

இல்லை வகுப்பு வாத சக்திகளின் போர் வியூகமா என்பதெல்லாம் இனி தான் விரிவாக ஆராய வேண்டி இருக்கிறது.

சியலகொட் சம்பவம்: மதம் சார்ந்ததா, தொழில் சார்ந்ததா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளரும் பாகிஸ்தானில் சியல்கொட் நகரில் தொழிற்சாலை ஒன்றின் முகாமையாளருமான பிரியந்த குமார தியவடன என்பவர், வெள்ளிக்கிழமை (03) அவரது தொழிற்சாலை ஊழியர்களாலும் ஏனைய சில பாகிஸ்தானியர்களாலும் தாக்கப்பட்டும் எரிக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டமையால், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் வாழும் முஸ்லிம்கள், பெரும் அசௌகரித்துக்கு உள்ளாகியுள்ளனர்.

ஆரியகுள புனரமைப்பும் காழ்ப்பு அரசியலும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

ஆரியகுளம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்தது முதல் தோற்றுவிக்கப்பட்ட குழப்பங்களைக் காணும் போது, தமிழ்த் தேசிய அரசியல் காழ்ப்புணர்வுக் கூட்டத்தாலும் அயோக்கிய சிந்தனையாளர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதோ என்று அச்சப்பட வேண்டியிருக்கின்றது.

’குளங்களைப் பிடித்தவர்களை வெளியேறுமாறு தீர்ப்பு’

வவுனியா – பண்டாரிக்குளத்தின் அலைகரை பகுதியை அத்துமீறி பிடித்த ஆறு பேரையும், உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று, வவுனியா நீதிமன்று தீர்ப்பு  வழங்கியுள்ளதாக, வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எஸ்.விஸ்னுதாசன் தெரிவித்தார்.

இன்னும் பல ஆண்டுகளுக்கு கார்களை இறக்குமதி செய்ய முடியாது

கார்களை இறக்குமதி செய்வதை நிறுத்தும் அரசாங்கத்தின் முடிவால் நாட்டில் உள்ள 90% க்கும் அதிகமான கார் விநியோக நிலையங்கள் மூடப்பட்டு சுமார் 400,000 பேர் வேலை இழந்துள்ளனர் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்தார்.

கொலைகள் கொண்டாடத்திற்குரியவை அல்ல

(தோழர் சாகரன்)

சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் ஒரு இலங்கையர் சிங்கள சமூகத்தை சேர்ந்தவர் தீ கொழுத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த கொலை நடைபெற்ற விதம் எம்மைப் போன்ற பலருக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆரியகுளமும் தமிழ்த் தேசிய அரசியலும்

(என்.கே. அஷோக்பரன்)

யாழ்ப்பாண நகரிலுள்ள ஆரியகுளம், துப்புரவு செய்யப்பட்டு, அழகாகக்கப்பட்டு, ஒரு மகிழ்வூட்டும் திடலாக உருப்பெற்றிருக்கிறது. இதனை யாழ்ப்பாண மாநகர சபை செய்திருக்கிறது. அதுவும், தனியார் அறக்கட்டளையொன்றின் நிதி உதவியுடன் இது நடந்தேறி இருப்பதாக அறியக்கிடைக்கிறது.

சிலியில் வெல்கிறார் இடதுசாரி வேட்பாளர்!

சான்டியாகோ, டிச.6- டிசம்பர் 19 ஆம் தேதியன்று நடைபெற விருக்கும் சிலி ஜனாதிபதித் தேர்தலில் இடது சாரி வேட்பாளரான காப்ரியல் போரிக் வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரி விக்கின்றன.

கொழும்பில் பௌத்த அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

கொழும்பு-7இல் உள்ள பாகிஸ்தான், உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக, பல்வேறு பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இன்று (06) முன்னெடுத்தனர்.   பாகிஸ்தான் நாட்டில் எரித்து, படு​கொலைச்செய்யப்பட்ட  பொறியியலாளா் பிரியந்த குமாரவின்  கொலையைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம்  முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் பின்னர்,  பதில் உயர்ஸ்தானிகா் தன்வீர் அஹமட்டிடம் முன்னெடுக்கப்பட்டது.  

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 23  பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 15 ஆண்களும் 08 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,484 ஆக அதிகரித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 20 பேரும் 16 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 03 பேரும் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.