ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன்களுக்கு எதிரான கிளர்ச்சிக் குழு ஒன்று, இஸ்லாமியவாத தீவிரவாத அமைப்புக்கு எதிராக போரிடத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு முன்னணி (National Resistance Front of Afghanistan -NRF) எனும் இந்த அமைப்பின் வெளி விவகாரங்கள் பிரிவு தலைவர் அலி நசாரி அமைதியான பேச்சுவார்த்தையைத் தொடரவே தாங்கள் விரும்புவதாக பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
71 ஆண்டுகளுக்கு பின்னர் எட்டிப் பார்த்த மழை
கிரீன்லாந்திலுள்ள பனிப்படலத்தின் மிக உயர்ந்த பகுதியில், 71 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக கடந்த வாரம் கனமழை பெய்துள்ளது. 1950க்கு பின்னர், கடந்த 14 முதல் 16ஆம் திகதி வரை மொத்தம் 7 பில்லியன் தொன் மழை கிரீன்லாந்து முழுவதும் பெய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மழை மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக தீவு முழுவதும் பரவலான பனி உருகல் ஏற்பட்டுள்ளதாக மூத்த விஞ்ஞானி வோல்ட் மேயர் கூறியுள்ளார். அதே வேளை பனிக்கட்டிகள் உருகிவரும் வீதம் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தலிபான்களுக்கு எதிராக தேசியக்கொடி ஏந்தி போராட்டம்
தலைதூக்கும் துப்பாக்கிகள்
இலங்கை: கொரனா செய்திகள்
மாவட்டங்களைக் கைப்பற்றினோம்: தலிபானுக்கெதிரான படைகள்
பன்ஜ்ஷிர் பள்ளத்தாக்குக்கு அருகேயுள்ள மூன்று மாவட்டங்களைத் தாம் கைப்பற்றியுள்ளதாக, வட ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராகப் போரிடும் படைகள் தெரிவித்துள்ளன. எஞ்சியுள்ள ஆப்கானிஸ்தான் அரசாங்கப் படைகளும், ஏனைய ஆயுதக் குழுக்களும் பன்ஜ்ஷிர் பள்ளத்தாக்கிலேயே கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு கடலில் தொடரும் கடற்கொள்ளை
ஒட்டுசுட்டான் மண்ணை எடுத்து
நிலைத்திருக்குமா?
இலங்கை: கொரனா செய்திகள்
நாட்டில் மேலும் 3,110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 388,806 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 18,769 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 342,159 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 39,661 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதேவேளை, மேலும் 198 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 7,183 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.