ஹட்டன் நகரையும் முடக்கத் தீர்மானம்

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஹட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய நகரங்களை நாளையிலிருந்து (19) ஒரு வாரத்துக்கு மூடுவதற்கு,வர்த்தக சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

நியூசிலாந்தில் முழு முடக்கம்

ஒரு புதிய கொவிட் -19 இனங்காணப்பட்டதை அடுத்து, நாடு தழுவிய முழுமையான பூட்டுதலை நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்தார். இந்த புதிய தொற்றாளர்கள் ஒக்லாந்தில் இனங்காணப்பட்டார் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

’நெருக்கடியை தீருங்கள்’ மன்றாடுகிறது மன்றம்

கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட அனைத்து பிரதான வைத்தியசாலைகளிலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரால் ஏற்படும் நெரிசல் காரணமாக வைத்தியசாலை அமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நிவர்த்தி செய்ய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

முல்லை விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம்

முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்கு சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பிலான விழிப்புணர்வு பிரசாரம், இன்று (17) மேற்கொள்ளப்பட்டது. வடமாகாண விவசாயத் திணைக்களம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விவசாயத் திணைக்களம் ஆகியன இணைந்து, இந்த பிரசார நடவடிக்கைகளை  முன்னெடுத்துள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உடுப்புக்குளம், அளம்பில், கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு சேதனப்பசளை ஊக்குவிப்புத் தொடர்பிலான விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இரவு நேர ஊரடங்கு போதுமா? மரணங்கள் மலியும் பூமி

(மொஹமட் பாதுஷா)

நாட்டின் எல்லாப் பாகங்களிலும், கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து உள்ளதால், நிலைமை கட்டுப்பாட்டை மீறிப் போவதற்கிடையில், சில வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு, சுகாதார தரப்பினர் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை விடுத்துவந்தனர். ஆனால், அந்தத் தீர்க்கமான தீர்மானத்தை எடுப்பதில், மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வந்த அரசாங்கம், இப்போது இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.

இலங்கை: கொரனா செய்திகள்

நாடளாவிய ரீதியில் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரையிலான ஊரடங்கு சட்டம், 16ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவை, வார இறுதி நாள்களில் முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Debacle in Afghanistan

(Tariq Ali)
The fall of Kabul to the Taliban on 15 August 2021 is a major political and ideological defeat for the American Empire. The crowded helicopters carrying US Embassy staff to Kabul airport were startlingly reminiscent of the scenes in Saigon – now Ho Chi Minh City – in April 1975. The speed with which Taliban forces stormed the country was astonishing; their strategic acumen remarkable. A week-long offensive ended triumphantly in Kabul. The 300,000-strong Afghan army crumbled. Many refused to fight. In fact, thousands of them went over to the Taliban, who immediately demanded the unconditional surrender of the puppet government. President Ashraf Ghani, a favourite of the US media, fled the country and sought refuge in Oman. The flag of the revived Emirate is now fluttering over his Presidential palace. In some respects, the closest analogy is not Saigon but nineteenth-century Sudan, when the forces of the Mahdi swept into Khartoum and martyred General Gordon. William Morris celebrated the Mahdi’s victory as a setback for the British Empire. Yet while the Sudanese insurgents killed an entire garrison, Kabul changed hands with little bloodshed. The Taliban did not even attempt to take the US embassy, let alone target American personnel.

அமைச்சரவை மாற்றத்தின் முழு விவரம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தில் மற்றுமொரு தடவை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், அமைச்சுக்கள் சில கைமாற்றப்பட்டன.

1. ஜி.எல்.பீரிஸ்-  வெளிநாட்டலுவல்கள்
2. தினேஸ் குணவர்தன-  கல்வி
3. பவித்ரா வன்னியாராச்சி- போக்குவரத்து
4.. கெஹலிய ரம்புக்வெல –சுகாதாரம்
5. காமினி லொக்குகே- மின்சக்தி
6. டலஸ் அழகபெரும- ஊடகம்
7. நாமல் ராஜபக்ஷ- இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுக்கு மேலதிகமாக அபிவிருத்திகளை மேற்பார்வை செய்யும் அமைச்சர்

கவலை கொண்டார் மலாலா

தலிபான் ஆதிக்கம் அதிர்ச்சியளிக்கிறது.  பெண்கள், சிறுபான்மையினரை நினைத்து கவலை கொள்கிறேன் என மலாலா தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகுவதாகவும், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நல்லிணக்கம் = பாரபட்சம்

(லக்ஸ்மன்)

வடக்கு, கிழக்கை ஆக்கிரமித்து தமிழ் மக்களை நசுக்க நினைக்கும் இந்த பேரினவாத அரசுக்கு, தமிழ் மக்கள் பாடம்புகட்டவேண்டும் என்றே தமிழர் தரப்பு ஒவ்வொரு தடவையிலும் தேர்தலில் குதிக்கிறது.  கழுதை தேய்ந்து கட்டெறும்பானதற்கு ஒப்பான அந்தப் பேச்சுக்காக கிடைக்கின்ற வாக்கும் சரி, ஆசனங்களும் சரி குறைந்து கொண்டே வருகிறது. அதே நேரத்தில் எதிர்ப்புணர்வுகளால் உசுப்பேற்றுபவர்களுக்கு ஆசனங்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதற்கு நடந்து முடிந்த தேர்தலும் நல்ல சாட்சி.