ஏங்கெல்ஸ் எனும் தியாக தீபம்

(அ.அன்வர் உசேன்)

உலகம் முழுதும் உள்ள பொதுவுடமைப் போராளிகளுக்கு வழிகாட்டும் ஆசான்களான மார்க்சின் பெயர் உச்சரிக்கப்படும் பொழுது ஏங்கெல்சின் பெயரும் இணைந்தே வருவது தவிர்க்க முடியாதது. அந்த அளவிற்கு இருவரும் சமூக மற்றும் அரசியல் தளங்களில் இணைந்து செயல்பட்டனர். அதனால்தான் லெனின் கூறினார்:‘‘புராதன இதிகாசங்கள் உன்னதமான நட்பைப் பற்றி பல உதாரணங்களைப் பேசுகின்றன. எந்த ஒரு இதிகாச மனித நட்பைவிட மிகச்சிறந்த நட்பை கொண்டிருந்த இரண்டு மகத்தான அறிஞர்கள் மற்றும் போராளிகளால்தான் தனது வர்க்கத்தின் அறிவியல் கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன எனத் தொழிலாளி வர்க்கம் பெருமைப்படலாம்!’’

வறுமையும் அரசியலும்

(என்.கே. அஷோக்பரன்)

ஹிஷாலினி என்ற 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரமும் அந்தச் சிறுமியின் அகால மரணமும், பல்வேறு வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளன. இனவாதம் இந்த நாட்டுக்குப் புதியதல்ல. 16 வயது தமிழ்ச்சிறுமி, முஸ்லிம் இன அரசியல் செய்யும், ஒரு முஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டில் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, தீக்கிரையாகி மரணித்த கொடூரம், இரண்டு சமூகங்களைச் சார்ந்தவர்கள் இடையே, இனரீதியான வாக்குவாதங்கள் சமூக ஊடகப்பரப்பில் இடம்பெறும் நிலையைத் தோற்றுவித்துள்ளது.

எங்கெல்லாம் இனவெறி தலைதூக்குகின்றதோ, அங்கெல்லாம் அறிவு செத்துவிடுகிறது. ஒரு 16 வயது சிறுமியின் கொடூர மரணத்தை, நியாயமாக விசாரித்து, அதற்கு நீதி வழங்க வேண்டும் என்கிற கருத்தை அல்லவா, மதியுள்ள மக்கள் வலியுறுத்த வேண்டும். மாறாக, குற்றம்சாட்டப்பட்டவன், தான் சார்ந்த இனத்தவன் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவனுக்கான அபத்த நியாயங்களை வாதமாக முன்வைப்பதெல்லாம், இனவாதத்தால் மழுங்கிய மூளையின் சிந்தனையல்லாது வேறென்ன?

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

(தோழர் வை. அழகலிங்கம்)

வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்கள் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன அரசியல் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை விவாதிக்கின்றனர்பள்ளி ஆசிரியர்களின் ஆன்லைன் கற்பித்தல் வேலைநிறுத்தம் ‘ஊதிய முரண்பாடுகளை’ நீக்குதல் உட்பட பல கோரிக்கைகளுடன் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. வேலை நிறுத்தம் தொடங்கி 18 நாட்கள் ஆகிவிட்டன.

‘ஹிஷலினி-189 எனும் இலக்கம் வேண்டும்’

வீட்டு பணியாளர்களை பாதுகாப்பதற்கான பரிந்துரைகளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன்,  தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கையளித்தார்

சீனாவின் நாஞ்சிங் நகர் முடக்கம்

கொரோனா டெல்டா பிறழ்வு அடையாளங்காணப்பட்டதை அடுத்து சீனாவின் நாஞ்சிங் (Nanjing) நகர் முடக்கப்பட்டுள்ளது. வூஹானில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதன் பின்னர் நாஞ்சிங் நகரில் டெல்டா பிறழ்வு முதற்தடவையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும் – 4

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

புதிய போக்குகளுக்கு அடித்தளமிடும் பூகோள அரசியல் நகர்வுகள்

உலக அலுவல்களில் தவிர்க்கவியலாத சக்தியாக, சீனா இன்று மாறியுள்ளது. இந்த மாற்றம், புதியதோர் உலக அரசியல் அரங்கைக் கட்டமைத்துள்ளது. கெடுபிடிப் போர்க் கால அரசியல் சட்டகத்துடன், இதை விளங்கிக் கொள்ளவே பலர் முனைகிறார்கள். இது சீனாவைப் பற்றி மட்டுமன்றி, தற்போதைய உலக ஒழுங்கு குறித்த தவறான சித்திரத்தையே வழங்குகிறது.

ஆறுகளை இணைக்கும் திட்டம் நிறைவேறியது

களுகங்கையையும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தையும் இணைத்து மலைகளுக்கு அடியில் இரண்டு பக்கங்களிலும் இருந்து தோண்டப்பட்ட இலங்கையின் மிக நீண்ட சுரங்கம் நடுவழியில் சந்தித்துள்ளது. மொத்தம் 7.9 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சுரங்கம் இலங்கையில் நீர்ப்பாசன வரலாற்றில் ஒரு அத்தியாயமாகும். மொத்தமாக 28 கிலோமீட்டர் சுரங்கப் பாதைகள் இந்த திட்டத்தில் அமைக்கப்படவுள்ளதோடு இறுதியில் மஹாவலி நதியும் கனகராயன் ஆறும் இணைக்கப்பட்டு முழுமையான ஒரு வடக்கு தெற்கு நீர்வழியிணைப்பு ஏற்படுத்தப்படும். ஹீரடிய ஓயாவுக்கு மேலால் அமைக்கப்படவுள்ள 400 மீற்றர் நீளமான (Aqueduct )நீரிணைப்பாலம் மிகவும் அழகான காட்சியை இலங்கை மக்களின் கண்ணுக்கு விருந்தாக்கும்.

அறிவற்ற மோட்டுப்பயல்களால் நாசமாகிப்போன இலங்கை- இந்திய ஒப்பந்தம்.


34 வருடங்கள் ஓடிவிட்டது

இதில் தமிழர்களுக்கு இருக்கும் உரிமைகளில் பத்தில் ஒன்று கூட எக்காலமும் இனி கிடையாது . உலகில் பல நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களில் இருக்கும் தவறுகள் போல இதிலும் இருக்கு ஆனால் அதில் இருக்கும் பெரும்பான்மை விடயங்கள் தமிழர்களுக்கு சாதகமானவை.
ஒப்பந்தத்தை குழப்பிய பின் ஏற்பட்ட அழிவுகள் எமது ஆயுதபோராட்டத்தின் மொத்த அழிவின் தொண்ணூறு சதவீதத்திற்கு மேலானது.

மறக்கப்பட முடியாத 1983 ஆடிக் கலவரம்…

(சாகரன்)

நேரடியாகவோ மறைமுகமாகவோ 1983ம் ஆண்டு ஆடிக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நாம். கலவரமும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வெலிக்கடைச் சிறைப் படுகொலை தொடர்ந்து வேகமெடுத்த ஆயுதப் போராட்டதிற்குள் நேரடியாக பங்காளிகளாகி பலர் இல்லாவிட்டாலும் இதன் உணர்வலைகளுக்குள் உள்ளாகாதவர்கள் என்று தமிழ் பேசும் இலங்கை மக்களை நாம் பிரித்துப் பார்க்க முடியாது.