ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்படக் கலைஞர் தனிஷ் சித்திக் நேற்று இரவு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய யதார்த்தம்….
குடும்ப ஆட்சியும் இலங்கையும்
(என்.கே.அஷோக்பரன்)
சமகால அரசியலில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை என்று அண்மையில் நாமல் ராஜபக்ஷ சொல்லியிருந்த கருத்து பெரும் நகைமுரணான வரவேற்பைப் பெற்றிருந்தது. கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி, அவரின் அண்ணன் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் மற்றும் முக்கிய பொருளாதாரம் சார்ந்த அமைச்சுக்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறார்,
3 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்
‘தோட்டத் தொழிலாளர்களைத் தோட்ட அதிகாரி, சர்வாதிகாரமாக நடத்துகின்றார்‘ எனத் தெரிவித்து, குறித்தஅதிகாரியையும், அத்தோட்ட தலைமை குமாஸ்தாவையும் உடனடியாக இடமாற்றம் செய்யகோரி, தலவாக்கலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ட்றூப்,கொரின் தோட்ட தொழிலாளர்கள், அத்தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக 3 வது நாளாகவும் நேற்று (14) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
’கடலட்டை பண்ணைகள அமைக்க ஏற்பாடு’
வடமாகாணத்தில், நுற்றுக்கணக்கான கடலட்டை பண்ணை அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்: வருவதாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட இயக்கச்சியில், இயக்கி உணவகத்தை, இன்று(15) திறந்துவைத்தப் பின்னர் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவி;தார்.
இலங்கை: கொரனா செய்திகள்
கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனாவின் டெல்டா வைரஸ் திரிபு தற்போது வட மாகாணத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதி சுகாதார சேவை பணிப்பாளருமான விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெல்டா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கொள்கை பிடிப்பு மிக்கவரின் நூற்றாண்டு!
இலங்கையில் சீனா: விளங்கிக் கொள்ளலும் வினையாற்றலும்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இலங்கையின் சீனாவின் ஆதிக்கம் இப்போது முக்கிய பேசுபொருளாகியுள்ளது. இலங்கையின் தற்போதைய கவலைக்கிடமான நிலைக்கு சீனாவே காரணம் என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவை மீறி, இலங்கையில் அதிகரிக்கும் சீனா ஆதிக்கம் தமிழர்களுக்கு ஆபத்தானது என நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.
ஆறுமுகம் திட்டம் மீண்டும் வருகிறது
இரணைமடு, கல்மடு, விசுவமடு, உடையார்கட்டு போன்ற குளங்களில் இருந்து வழிந்தோடி விரயமாகின்ற நீரை பயன்படுத்தி, யாழ். மாவட்டத்துக்கான நன்னீரை பெறறுக்கொள்ளுகின்ற ஆறுமுகம் திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், நேற்று (13) இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கை: கொரனா செய்திகள்
பெரிதாக எதுவும் நடக்கவில்லை எனின் செப்டெம்பர் மாதத்துக்குள் நாட்டை முழுமையாகத் திறக்க எதிர்பார்த்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செப்டெம்பர் மாதத்துக்குள் வழங்கி முடிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.