5 நாள்களின் பின்னர் ஆய்வு செய்யும் அதிகாரசபை

பசறையில் கடந்த 20ஆம் திகதி பஸ் விபத்து இடம்பெற்ற வீதியை, இன்று ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த வீதியில் சரிந்துள்ள பாறையை அகற்றுவது தொடர்பில், அதனை சூழவுள்ள இடங்களை பரிசோதிக்கவுள்ளதாகவும் அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வட மாகாண மீனவர்களால் மாபெரும் முற்றுகைப் போராட்டம்

கடற்றொழில் அமைச்சரின் யாழ். மாவட்ட அலுவலகத்தை முடக்கி, வடக்கு மாகாண மீனவர்களால், நாளை (26) முற்றுகைப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையின் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி உள்நுழைந்து, மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே, குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தமிழரசுக் கட்சி ஏன் இப்படிச் செயல்பட்டு வருகிறது?

(Maniam Shanmugam)

தமிழரசுக் கட்சி 1949இல் உருவான கட்சி. அன்றிலிருந்து இன்றுவரை அக்கட்சியே தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியாக இருந்து வருகிறது. தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு அக்கட்சிக்கு தொடர்ந்து இருந்தும் அது இதுவரை தமிழ் மக்களுக்காக என்னத்தைச் சாதித்தது என்றால் பதில் “பூஜ்யம்” என்பதாகத்தான் இருக்கும்.

ஜெனீவாவும் இறைமையும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

இலங்கை தொடர்பாக, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளால் முன்வைக்கப்பட்ட பிரேரணையொன்று, நேற்று (23) ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்னர் அது, நேற்று முன்தினம், அதாவது திங்கட்கிழமையே வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது.

யாழ். மரக்கறி சந்தை தொகுதிக்குப் பூட்டு

யாழ்ப்பாணம் மாநகர மரக்கறிச் சந்தைத் தொகுதி, மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மரக்கறி, பழங்கள், உள்ளூர் உற்பத்திகள் மற்றும் வெற்றிலைக் கடைகள் அடங்கிய சந்தைப் பகுதி மாத்திரமே, இவ்வாறு மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உருத்திரபுர தொல்லியல் அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த தொல்லியல் அகழ்வு நடவடிக்கை, தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள உருத்திரீஸ்வரர் கோவில் வளாகத்தில் அகழ்வுப் பணி மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டம், மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்ந்தது.

இலங்கைக்கு ஏற்பட்ட தோல்வியும் வெற்றியும்!

(Maniam Shanmugam)

இலங்கையை மிரட்டி அடிபணிய வைப்பதற்காக பலம் பொருந்திய மேற்கு நாடுகளால் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கொண்டுவந்த தீர்மானம் 22 நாடுகளின் ஆதரவைப் பெற்று ‘வெற்றி’ பெற்றுள்ளது. இந்த முடிவு முன்னரே எதிர்பார்க்கப்பட்டதுதான். இந்தத் தீர்மானம் இலங்கைக்குத் தோல்வி எனக் காட்டப்பட்டாலும், நீதி செத்துவிடவில்லை என்ற உண்மையும் இதில் பொதிந்து கிடக்கிறது.

22 ஆதரவு: 11 எதிர்ப்பு: 14 தவிர்த்தது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கைத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது. இதில், இலங்கைத் தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. வாக்களிப்பிலிருந்து 14 நாடுகள் தவிர்த்து கொண்டன. அதனடிப்படையில் அந்தத் தீர்மானம் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வாக்களிப்பில் எதிர்த்து வாக்களித்த நாடுகளில், சீனா. ரஷ்யா, வெனிசுலா, பாகிஸ்தான், கியூபா ஆகிய நாடுகளும் அடங்குகின்றன.

அதில், 27 நாடுகள் ஆதரவாகவும் பிஜி எதிராகவும் வாக்களித்தன. 17 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்தன. அதில், இந்தியாவும் வாக்களிப்பை தவிர்த்து (abstain) கொண்டமை குறிப்பிடத்தக்கது.

திராவிடக் கட்சிகளின் வளர்ச்சி வரலாறு

(Kanniappan Elangovan)

1970 லிருந்து அரசியல் தளத்தில் உள்ள காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் இன்று அஇஅதிமுகவை பாஜக முற்று முழுதாக விழுங்கியதைப் பார்த்தால்…. நாம் செய்தது தவறு என உணர்வார்களா?
காங்கிரசும் கம்யூனிஸ்டும் தங்களை திமுகவிற்கு மாற்றாக வளர்த்துக்கொள்ளாமல் அஇஅதிமுகவை உருவாக்கி உயிர்கொடுத்து வளர்த்து இன்று பாஜகாவாக மாறிவருவதை எவ்வாறு புரிந்துள்ளனர்… திமுகவை அழிக்க புறப்பட்டு இன்று திமுகவோடு இணைந்து போட்டியிட்டு தங்கள் இருப்பை தற்காத்துக் கொள்ளும் நிலையில் உள்ளதை, 90 வயதுடைய தோழர் நல்லகண்ணு மற்றும் தோழர் சங்கரய்யா போன்றோரிடம் கேட்டு அறிந்து மக்களுக்கு தெரிவிப்பார்களா?

காஷ்மீரை இணைக்கும் பேசும் பாலம்

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்திலுள்ள செனாப் ஆற்றுக்கு மேலாக நிர்மாணிக்கும் பாலம், உலகிலேயே மிக உயரமான பாலமாகக் கருதப்படுகின்றது. இந்தியாவின் புகையிரத திணைக்களத்தால் நிர்மாணிக்கப்படும் இப் பாலமானது காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு நேரடி இணைப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது. வரலாற்றில் பேசப்படும் நிகழ்வாக அமைந்துள்ள அந்தப் பாலத்தின் வளைவுப் பகுதி நிறைவடைந்துள்ளது.