சீனாவிடமிருந்து இந்தியாவின் கைகளுக்குச் சென்ற யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி திட்டம்!

சீனாவின் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் மேற்கொள்ளப்படவிருந்த காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டம் தற்போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். விமான நிலைய மேம்பாடுகள்: மீண்டும் பேச்சுவார்த்தை

யாழ்ப்பாணம் விமான நிலைய மேம்பாடுகள் மற்றும் அபிவிருத்திகள் குறித்து இந்தியா-இலங்கை இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அடுத்தவாரமளவில் இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. இதன்போது, விமான நிலையத்தின் வளர்ச்சியில் இந்திய முதலீடு, இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழரின் சாதி வகைகளும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒடுக்குமுறை வடிவங்களும்!

சாதி அமைப்பு என்ற கொடூரமான சமூகக் கட்டமைப்பு இன்றுவரை இலங்கையின் வட பகுதியில் பல நூற்றாண்டுகளாக இறுக்கமாகவும் தொடர்ச்சியாகவும் இருந்து வருகின்றது. இதைத் தகர்ப்பதற்கு காலத்துக்குக் காலம் ஒடுக்கப்படும் சமூகங்கங்களாலும், முற்போக்கு சக்திகளாலும் போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும், தமிழ் சமூகத்திலும் உலகிலும் பல சமூக பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும், 30 வருடங்களாக தமிழ் தேசியத்தை நிலைநாட்ட போர் நடைபெற்ற போதிலும், ஒரு சில சிறிய அசைவுகள் ஏற்பட்டதேயொழிய, மாற்றங்கள் என்று சொல்வதற்கு ஏற்ப எதுவும் நடைபெறவில்லை.

தோழர் எம்.ஜி.பசீர் எம்மைவிட்டுப் பிரிந்தார்!

தோழர் எம்.ஜி.பசீர் நேற்றைய தினம் (பெப்.12) புத்தளம் வைத்தியசாலையில் காலமாகி, இன்றைய தினம் நல்லடக்கம் செய்த துயரமான செய்தி வந்திருக்கிறது.தோழர் பசீர் யாழ்ப்பாண முஸ்லீம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். 1990 ஒக்டோரில் புலிகள் வடக்கில் பாரம்பரியமாக வாழ்ந்த முஸ்லீம் மக்களை வெறுமனே 2 மணித்தியால முன் அறிவித்தலில் வடக்கிலிருந்து வெளியேற்றி இனச் சுத்திகரிப்பு செய்தபோது தனது மக்களுடன் சேர்ந்து வெளியேறி அவர்களைப் போலவே மன உளைச்சலுடன் அகதி வாழ்க்கை வாழ்ந்தவர்.

இந்த நூற்றாண்டின் சாதனைப் படம் த்ரிஷ்யம்..!

(ரதன் சந்திரசேகர்)

த்ரிஷ்யம் 2013 ல் ஜீத்து ஜோஸபின் எழுத்து – இயக்கத்தில் வெளியான‘த்ரிஷ்யம்’ மலையாளப் படம் கேரளாவை ஓர் உலுக்கு உலுக்கியது.

ஆணையாளராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமனம்

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை: கொரனா நிலவரம்

நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (13) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றினால் அடையாளங்காணப்பட்டோரின் எண்ணிக்கை 74,484 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 67,831 பேர் குணமடைந்துள்ளனர். அதன் பிரகாரம், 6 ,269 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 384 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

தலவாக்கலையில் ஆர்ப்பாட்டம்

தலவாக்கலை லிந்துலை நகரசபைக்குச் சொந்தமான தலவாக்கலை தெவிசிறிபுற ரத்னில்கல பிரதேசத்தில், ஒரு குழுவினர் அத்துமீறி காணியை சுவீகரித்ததால் அதனை விடுவிக்கக்கோரி, தலவாக்கலை நகர பொதுமக்கள், இன்று(11) பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இயற்கை வளம், பல்லுயிர் பாதுகாப்பு: மரம் நடுவது எப்படி – தெரிந்து கொள்ள வேண்டிய 10 விதிகள்.

மரம் நடுவதற்கான 10 விதிமுறைகளை அறிவியலாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதைக் கவனமாக பின்பற்றுவது சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.மரம் நடுவது நன்மை தரும்; பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தைக் காக்க உதவும் என மரங்கள் பல பலனை தரும். ஆனால் இடத்திற்கு தகுந்தாற்போல ஒரு மரத்தை நடவில்லை என்றால் அதுவே தவறாக முடிந்துவிடும் என்கின்றனர் லண்டனில் உள்ள க்யூ தாவரவியல் பூங்காவை சேர்ந்த நிபுணர்கள்.

இலங்கை: கொரோனா வைரஸ்

பிரித்தானியாவில் பரவிவரும் புதிய வீரியம் கொண்ட கொரோனா வைரஸ் இலங்கையின் பல பகுதிகளிலும் பரவியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சுகாதார வைத்திய பீடத்தின் வைத்தியர் டொக்டர் சந்திம ஜீவன்தர இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு, அவிசாவளை, பியகம மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் இந்த புதிய வீரியம் கொண்ட வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.