சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து காமராஜர், அண்ணா ஆகியோரின் பெயர்களை அகற்றுவது தமிழக மக்களை அவமதிக்கிற செயல் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார் .
பொத்துவில் முதல் பொலிகண்டி வரை ஒரு புதிய நம்பிக்கை
(புருஜோத்தமன் தங்கமயில்)
‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’யிலான கவனயீர்ப்புப் பேரணி, பல்லாயிரக்கணக்கான தமிழ், முஸ்லிம் மக்களின் பங்களிப்போடு வெற்றிகரமாக நிறைவுக்கு வந்திருக்கின்றது. நீதிமன்றத் தடை உத்தரவுகள் என்று பல்வேறுபட்ட தடைகளைப் பேரணி முன்னெடுக்கப்பட்ட ஐந்து நாள்களும் தாண்ட வேண்டியிருந்தது. ஆனாலும், பேரணி வடக்கு-கிழக்கின் எட்டு மாவட்டங்களின் ஊடாகப் பயணித்து, எதிர்கால ஜனநாயக வழிப் போராட்டங்களுக்கு நம்பிக்கையுடன் பலம் சேர்த்திருக்கின்றது.
ஆளில்லாத தீவில் தேங்காய்களுடன் 33 நாள்கள் தப்பித்த 3 கியூபர்கள்
பஹமாஸிலுள்ள ஆளில்லாத தீவொன்றில் சிக்கியிருந்ததாக நம்பப்படும் மூவர் மீட்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அமெரிக்க கரையோரக் காவற்படை தெரிவித்துள்ளது. அங்குலிக்கா கேயில், தற்காலிகமாகத் தயாரிக்கப்பட்ட கொடியொன்றை அசைத்துக் கொண்டிருந்தபோதே வழமையான கண்காணிப்பிலிருந்த வான் குழாம் இவர்களைக் கண்டுள்ளது. இந்நிலையில், பெரும்பாலும் தேங்காய்களால் தாங்கள் உயிர் தப்பியதாக குறித்த கியூபப் பிரஜைகள் தெரிவ்வித்துள்ளனர். படகு மூழ்கியதைத் தொடர்ந்து இவர்கள் நீந்தி தீவை அடைந்துள்ளனர்
முதல் 5 உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்களில் ஒன்றாக இடம்பிடித்த vivo
இலங்கை: கொரோனா தகவல்
நாட்டில் மேலும் 539 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 739ஆக அதிகரித்துள்ளது. கம்பஹா பொதுசந்தையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று (10) 75ஆக அதிகரித்துள்ளது. தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைவு
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவதற்காக கட்சி தொடங்கும் வகையில் தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றி இருந்தார். ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்ததும் மக்கள் மன்ற நிர்வாகிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். மன்றத்தில் இருந்து விலகி பல்வேறு கட்சிகளிலும் சேர்ந்து வருகிறார்கள். இதனால் ரஜினி மக்கள் மன்றம் எல்லா மாவட்டங்களிலும் காலியாகி வருகிறது.
மலரவிருக்கும் 1,000 தேயிலைப் பூக்கள் நலன்புரியைக் கருகிவிடக்கூடாது
பெருதோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் 1,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி, பட்டாசு கொளுத்திய சத்தங்களால் பலருக்கும் கேட்காமல் போயிருக்கக் கூடும். ஆனால், சம்பள நிர்ணய சபையின் ஊடாக, அடைப்படைச் சம்பளம் 900 ரூபாயாகவும் பட்ஜெட் கொடுப்பனவு 100 ரூபாயாகவும் சேர்த்து, நாளொன்றுக்கு ரூ.1,000 வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.