மேலும் 312 பேருக்குக் கொரோனா….701 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 312 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெலியாகொட கொத்தணியைச் சேர்ந்த 300 பேருக்கும், சிறைச்சாலைகள் கொத்தணியைச் சேர்ந்த 12 பேருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை-நபீர்வத்த முடக்கம்

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நபீர்வத்த பிரதேசம் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த தனிமைப்படுத்தல் அமுலில் இருக்குமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் கொரனா நிலவரம்

கல்முனை:

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை செய்லான் வீதி தொடக்கம் மாதவன் வீதி வரையாக உள்ள பகுதிகள், இன்று (17) முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

உண்மை!!

வெளிநாடு வர ஆசைப்படுகின்ற அனைவரும் அறிய வேண்டியது…
“நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம்.”

ரஜினியின் ’மக்கள் சேவை கட்சி; ஆட்டோ சின்னம்’

நடிகர் ரஜினிகாந்த் ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்கப் போவதாகவும் இம்மாதம் 31 ஆம்திகதி அதுகுறித்த அறிவிப்பை வெளியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

குளிக்கும் பனிக்குமிடையே; தொடர்ந்தும் விவசாயிகள் போராட்டம்

இன்று 20ஆவது நாளாக போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வரும் விவசாயிகள், இதன், ஒரு பகுதியாக, நேற்று விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்,தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போரட்டம் மேற்கொண்டனர்.

இலங்கை: கொரனா செய்திகள்

பேருவளை ரயில் நிலையம் இன்றிலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதென, ரயில்நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

1986 மார்கழி 13: ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் சுயாதீனமான செயற்பாட்டுக்கு புலிகள் தடை விதித்த நாள்!

(தோழர் மோகன்)
தனிநபர் தலைமைக்குப் பதிலாக கூட்டுத்தலைமை, இயக்கத்திற்குள் ஜனநாயகம், விமர்சனம், சுயவிமர்சனம் மூலம் பிணக்குகளுக்குத் தீர்வு காணுதல், சகோதரப் படுகொலைகளுக்கு எதிர்ப்பு, இயக்கங்கள் மத்தியில் ஒற்றுமை, இனங்களுக்கிடையே ஐக்கியம், அமைப்புக்களுக்கும் தனி நபர்களுக்கும் பேசவும் எழுதவும் ஒன்றுகூடவும் உள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளை பேணுதல், மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்தல், இயக்கங்களின் தவறான போக்குகளை விமர்சிக்கும் மக்களின் உரிமையை மதித்தல் என்பவற்றை வலியுறுத்தியும், நடைமுறைப்படுத்தியும் வந்ததுடன் சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைப் பேசிய, உழைக்கும் மக்களின், பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த பாட்டாளிவர்க்கத் தலைமையை கட்டியெழுப்ப முயன்ற ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் சுயாதீனமான செயற்பாட்டுக்கு 13.12.1986 அன்று புலிகள் தடை விதித்தனர்.

நாளை முதல் ‘மேட் இன் ஸ்ரீ லங்கா’

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சந்தைவாய்பினை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கத்தில் விசேட வேலைத்திட்டமொன்று நாளை ஆரம்பமாகவுள்ளதாக தொழில்துறை அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். இதிலிருந்து உள்ளூர் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை பெற முடியும் என, கொழும்பில் இன்று(14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.

19 வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம்

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை போன்றவை ஒழிந்து விவசாயத்துறை பெருநிறுவனங்களின் வசமாகி விடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.