இலங்கை: 2021 பட்ஜெட்டுக்கு 151 ஆதரவு

அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) மாலை நடைபெற்றது. அதில், பட்ஜெட்டுக்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

மனிதன்

(George RC)

எங்கள் பெரியம்மாவின் மகனான பாலா அண்ணை யக்கத்தில் இருந்தார்.
எங்களுக்கோ அதெல்லாம் பெரிய ஈடுபாடு இல்லை.
எங்கள் ஊருக்குள் ஒரு அண்ணை தான் பலரை இயக்கத்தில் சேர்த்தார். அப்படியே எங்கள் ஊரவர்கள் பலர் இயக்கத்தில் இருந்தார்கள்.
அந்த அண்ணையின் வீட்டில் இயக்ககாரர்கள் எல்லாம் வந்து சந்திப்புகள் நடத்துவார்கள்.

மனித நேயம்.. ஐக்கியம்… பன்முகத்தன்மை.. இவையே எமக்கு முக்கியம்

(சாகரன்)
உயிரினங்கள் சிறப்பாக மனிதர்களிடம் அதிகம் காணப்பட வேண்டியது மனித நேயம். இன்னொன்றும் அதிகமாக காணப்பட வேண்டியதாக இருக்கின்றது அதுதான் ஐக்கியமாக வாழுதல். அது மனித குலமாக இருக்கலாம், விலங்கினங்கள், பறவைகள் எல்லாம் ஐக்கியப்பட்ட செயற்பாடுகளின் மூலமே தம்மை பலமாக்கி தற்காத்து சந்தோஷமாக வாழ்வதை நாம் காணலாம்.

அரசியல் தகனம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

கொவிட்-19 நோயால் மரணிக்கும், முஸ்லிம்களின் உடல்களைத் தகனம் செய்வது தொடர்பான விவாதம், மீண்டும் சூடு பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், முதன் முறையாக இந்த விவாதம் ஆரம்பித்தது. அதன் பின்னர், கொரோனா வைரஸின் தொற்று, படிப்படியாகக் குறைந்து வந்ததை அடுத்து, மரணங்களும் குறைந்தன. இதனால், தகனம் தொடர்பான விவாதமும் தணிந்துவிட்டது.

எதிலும் தலையிடவில்லை’ -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேசிய தொலைக்காட்சியின் ஊடாக, நாட்டு மக்களுக்கு உரையாற்றி கொண்டிருக்கின்றார். ஏனைய நாடுகளுடன் நட்புற பேணப்படும் எனத் தெரிவித்த அவர், கடந்த ஒருவருட காலத்தில், சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் நீதித்துறையில் எவ்விதமான தலையீடுகளும் செய்யப்படவில்லை என்றார்“கடந்த நவம்பரில் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் தனது அரசாங்கம் பொருளாதாரத்தை மேம்படுத்தி வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்தியது” என்றும் தனதுரையில் தெரிவித்தார்.

மீனை பச்சையாக சாப்பிட்ட எம்.பி

கொரோனா அச்சத்தின் காரணமாக, மீன்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவது குறைந்துவருகின்றது. கடலுணவுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை போக்குவதற்கு அரசாங்கம் பல்வேறான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. இந்நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி, கொழும்பில் சற்றுமுன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், பச்சை மீனொன்றை அப்படியே பச்சையாக சாப்பிட்டு காண்பித்தார்.

இத்தாலியில் கடந்தாண்டு செப்டெம்பரிலேயே பரவிய கொவிட்-19

இத்தாலியில் கடந்தாண்டு செப்டெம்பர் மாதத்திலேயே கொவிட்-19 பரவியதாக அந்நாட்டின் மிலன் நகர தேசிய புற்றுநோய் நிறுவகத்தின் ஆராய்ச்சியொன்று வெளிக்காட்டியுள்ளது. இந்நிலையில், மத்திய சீனாவிலுள்ள வுஹானில் கொவிட்-19 பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம், சத்தமில்லாமல் வேறெங்கும் கொவிட்-19 பரவியிருக்கும் சந்தர்ப்பத்தை நிராகரிக்க முடியாது என்று கூறியுள்ளது. இத்தாலியில் முதலாவது கொவிட்-19 நோயாளர், வட பிராந்தியமான லொம்பார்டியில் மிலனுக்கு அருகிலுள்ள சிறிய நகரமொன்றிலேயே கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.

அனுஷா சந்திரசேகரனின் தலைமையில் புதிய கட்சி

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெ.சந்திரசேகரனின் புதல்வியும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் தலைமையில், மலையகத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகவுள்ளதாக, உயர்மட்டத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

’யாரும் என்னுடன் இதுவரை பேசவில்லை’

கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு அரசாங்கம் நியமித்த எந்தவொரு குழுவும்; தன்னுடன் இதுவரை ஒரு தடவையேனும் பேச்சு நடத்தவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கவலை தெரிவித் தார்.

இன்னொரு கூட்டமைப்பு: சவால்களும் சாத்தியங்களும்

(என்.கே. அஷோக்பரன்)

முன்னாள் வடமாகாண சபை முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன், ஊடகங்களுக்கு அண்மையில் அனுப்பிவைத்த கேள்வி பதில்களில், தமிழ்த் தேசிய கட்சிகள் நிறுவன ரீதியாக ஒன்றுபடுதல் பற்றியும், அதற்கான அடிப்படைகளாகத் தலைமைத்துவம், கொள்கைகள், நிறுவன செயற்பாடுகள் என்பனவற்றையும் அடையாளம் கண்டிருந்தார்.