ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனை, ரஷ்யா, சீனா, பிரேஸில், வடகொரியா, துருக்கி, மெக்ஸிக்கோ உள்ளிட்டவை இன்னும் வாழ்த்துத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘கோட்டாவுடன் சீன ஜனாதிபதி உரையாடவில்லை’
வார இறுதியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஸும் செயலி மூலம் உரையாடினார் என, இலங்கை ஊடகங்கள் வெளியிட்டிருந்த செய்திக்கு, சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. Zoom செயலியூடாக, இலங்கை ஜனாதிபதியுடன் சீன ஜனாதிபதி, உரையாடியிருந்தார் என, இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அம்பிளாந்துறை படகுப்பாதை நீரில் மூழ்கியது
‘20சதவீத மக்களுக்கு கொவிட் தடுப்பூசி’
நமது நாட்டின் சனத்தொகையில் 20வீத மக்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்க உலக சுகாதார அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பிலான விடயங்களை ஆராய்வதற்காக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குழுவொன்றை நியமித்துள்ளார்.
நீண்ட காலத்தின் பின்னர் வெற்றிக்கனியைச் சுவைத்த பைடன்
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு
விபரீதங்களோடு விளையாடும் விந்தை
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
அறிவியலுக்கும் அபத்தத்துக்கும் இடையிலான பிரிகோடு, மிகவும் சிறியது. அறிவியலை விட, அபத்தத்துக்கு முக்கியத்துவம் அதிகமாகிப் போன உலகத்தில் நாம் வாழ்கிறோம். பயன் யாதெனில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, இப்போது ஆட்கொண்டுள்ளது. இது எதிர்பாராதது அல்ல; ஆனால், ‘முன்னே ஓடவிட்டுப் பின்னே துரத்தும்’ வித்தையை, இந்தப் பெருந்தொற்றை வைத்து, அரசியல்வாதிகள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.