எழுதப்பட்ட, எழுதப்படும் வரலாறுகளில் அரசியலை நீக்கம் செய்துவிட்டு, திரிக்கப்பட்ட வரலாற்றைக் கட்டமைக்கின்றனர். ஒடுக்குவோர் ஒடுக்கப்பட்டோர் சமூக அமைப்பில், ஒடுக்கப்பட்டோர் கண்ணோட்டத்தில் வரலாற்றை காண்பதுமில்லை, கூறுவதுமில்லை. ஒடுக்கப்பட்டோர் கண்ணோட்டத்தில் வரலாற்றை கூறுவதற்கும், காண்பதற்கும் ஒடுக்கப்பட்டோர் சிந்தனையும் – அதற்கான அரசியல் நடைமுறையும் இருக்கவேண்டும். இல்லாதபோது ஒடுக்குவோர் கண்ணோட்டங்களிலேயே வரலாறுகள் கூறப்படுகின்றது.
‘பாடும் நிலா’ மறைந்தது
10ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது
மீண்டும் கொழும்பு செல்லும் பிள்ளையான்
18 இலங்கை பிரஜைகளை திருப்பி அனுப்பிய அமெரிக்கா
அரசமைப்பு அரசியலும் தமிழ்த் தேசமும் – 02
தாமதமான தியாகிகள் தினம்
இம்முறை தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் 30வது தியாகிகள் தினம் 19/06/2020 கொரோனா தொற்று காரணாமாக 03 மாதங்கள் பிற்போடப்பட்டு இன்று 19/09/2020 நடைபெற்றது.வருடா வருடம் நடைபெறுவது போல் இம்முறையும் இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச கண்ணாடி வழங்கும் நிகழ்வு திருகோணமலை கட்சி காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் 300ற்கும் அதிகமான பயனாளிகள் பயனடைந்தனர்.
அரசமைப்பு அரசியலும் தமிழ்த் தேசமும்
(என்.கே.அஷோக்பரன்)
“சிறந்ததை எதிர்பாருங்கள், பாரதுரமானதை எதிர்கொள்ளத் திட்டமிடுங்கள், வியப்படையத் தயாராக இருங்கள்” என்றார் பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் டெனிஸ் வெயிட்லி. இன்றைய சூழலில் சிறந்ததை எதிர்பார்க்க முடியாவிட்டாலும், பாரதுரமானதை எதிர்கொள்ளத் திட்டமிடவும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தாங்கிக்கொள்ளத் தயாராகவும் இருக்க வேண்டி, சூழல் ஏற்பட்டுள்ளது என்பதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன.
மாகாண சபை முறைமை ஒழிப்பு;இறுதி தீர்மானம் இல்லை
மாகாண சபை முறைமையை ஒழிப்பது தொடர்பாக இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மாகாண சபைச் செயலாளர்கள், ஆணையாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் மேற்படி விடயங்களை தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை
‘ஈரான் மீது மீண்டும் புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்படும்’ என, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே 2018ல் போர்ச் சூழல் மூண்டது. கடந்த ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கியப் போர் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்திக் கொன்றது.