வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு அதில் கலந்துகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.
தேர்தல் விஞ்ஞாபனங்கள் எங்கே?
தேர்தல்கள் நெருங்கிவிட்டன. ஆனால் பிரதான தமிழ்க் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களை இன்னும் காணவில்லை. இந்தப் பத்தி எழுதப்படும் கணம் வரை குறிப்பாக வடக்கில் மையங்கொண்டுள்ள பிரதான தமிழ் அரசியல் கட்சிகள் எவையும் தங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடவில்லை. இது மிக முக்கியமாக வினாவொன்றை எழுப்புகின்றது. இது இன்றைய காலப்பகுதியில் கட்டாயம் பேசப்பட வேண்டியது.
தமிழ்த் தேசிய கட்சிகள் கேட்க வேண்டிய குரல்கள்
(புருஜோத்தமன் தங்கமயில்)
அண்மையில், ‘ஈழத்தமிழ் அரசியல்- நேற்று இன்று நாளை’ எனும் தலைப்பில், இணையவழிக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த (கலாநிதி பட்டத்துக்கான ஆய்வு மாணவர்) சட்டத்தரணி சிவகுமார் நவரெத்தினம் முன்வைத்த கருத்துகள், கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாக இருந்தன. அதுவும், தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழர் அரசியல் பரப்பு பெரிதாக கவனத்தில் கொள்ளாத விடயங்கள் பற்றி, தன்னுடைய ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
ஒரு பாடகரின் மரணம்: எதியோப்பியாவை கலங்கடிக்கும் போராட்டங்கள்
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இசைக்கு வசமாகா இதயமெதுவென்பது மிகவும் பொருத்தமான கேள்வியே. வரலாறெங்கும் ஒரு போராட்ட வடிவமாக, எதிர்ப்புக் குரலாக இசையும் பாடலும் தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட விடுதலைக்காகப் போராடும் சமூகங்களில், கலையைப் போராட்டத்தின் கருவியாக்குவோர், மக்களின் மாண்புக்குரியவர்களாகவே இருந்திருக்கிறார்கள். அவர்கள் மீது அடக்குமுறையும் அதிகாரமும் ஏவப்படும்போது, அது தங்கள் மீது ஏவப்பட்டதாக மக்கள் நினைக்கிறார்கள். கலையின் வலிமை அத்தகையது.
யாழ். பல்கலைகழக மாணவர்கள் 9 பேர் மீட்பு
மாலைத்தீவில் இருந்து 177பேர் மத்தல வருகை
ஈரோஸ் ஜனநாயக முன்னணி கூட்டமைப்புடன் கைகோர்த்தது
இழந்தவைகள் இழந்தவைகளாகட்டும் இருப்பவைகளையாவது பாதுகாப்போம்
‘வரலாறு முக்கியம் அமைச்சரே!’
(என்.கே. அஷோக்பரன்)
“வரலாறு என்பது இறந்தவர்கள் மீது ஆடப்படும் பொய்” என்பார் ஃப்ரெஞ்ச் அறிஞர் வோல்டேயர். வரலாறு என்பது எப்போதும் சிக்கலானதொன்றாகவே இருந்துகொண்டிருக்கிறது. கடந்த காலத்தில் நிகழ்ந்தவை எல்லாம் வரலாறுதான். ஆனால், கடந்த காலத்தில் என்னதான் நடந்தது என்பதை, இப்போது நாம் எப்படி அறிந்துகொள்வது? அந்த வகையில் பார்த்தால், வரலாறு என்பது வரலாற்றாசிரியர்களால் எழுதப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, இன்று எமக்கு கிடைக்கக்கூடிய வகையில் இருக்கும் பதிவுகளின் தொகுப்பு மட்டும்தான் அல்லது அந்தப் பதிவுகளுக்கு நாம் வழங்கும் பொருள்கோடல்களும் வியாக்கியானங்களும்தான். அந்தப் பதிவுகளினூடாகவும் அவற்றுக்கு வழங்கும் பொருள்கோடல், வியாக்கியானங்களூடாக கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள முயலும் ஒரு முயற்சிதான் வரலாறு எனலாம்.
மாற்றுத் தலைமை இன்றி தவிக்கும் இந்திய அரசியல்?
(எம். காசிநாதன்)
“மீண்டும் ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பிக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், அகில இந்திய அளவில் ஆளுங்கட்சியான பாரதீய ஜனதா கட்சியைச் சமாளிக்கவோ பிரதமர் நரேந்திரமோடியின் தலைமைக்குச் சவால் விடவோ, “தலைவர்கள் தேவை” என்று விளம்பரம் மேற்கொண்டாலும், யாரும் கிடைக்காத நிலை இன்று உருவாகி உள்ளது. ஜவஹர்லால் நேருவுடன் பல “அறிவாளி” தலைவர்கள் இடம்பெற்றிருந்தார்கள். தைரியமிக்க தலைவராகவும் மதிநுட்பம் மிகுந்தவருமான சர்தார் வல்லபாய் பட்டேலை முன்வைத்து “ நேருவின்” அமைச்சரவைக்குள் ஒரு மாற்றுத் தலைவர் போல் அவர் இருந்தார். ஆனால், காலப்போக்கில் நேருவின் கரமே வலுப்பெற்று, காங்கிரஸ் கட்சியின் “நம்பிக்கை நட்சத்திரமானார்” நேரு. அவரது மறைவு வரை, நேருவுக்கு மாற்றாக இந்திய அரசியலில் ஒரு “முக்கியமான மாற்றுத் தலைவர்” உருவாகவில்லை!