கிழக்கே ஓர் அஸ்தமனம்

1961இல் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அம்பாறை மாவட்டமானது உருவாக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை அங்கே தமது பிரதிநிதித்துவத்தை நிலைநிறுத்துவதற்குத் தமிழர் ஒவ்வொருமுறையுமே படாதபாடுபட வேண்டியிருக்கிறது.

நெல்சன் மண்டேலா நினைவுரை: உண்மைகள் உறைக்குமா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

சில கதைகளைக் கேட்கும் போது, நன்றாக இருக்கிறதே என்று தோன்றும். இன்னும் சில கதைகள் கடுப்பூட்டும்; சிரித்துவிட்டு அப்பால் நகரச் செய்யும். ஆனால், உலக அரசியல் அரங்கில், அதிகார மய்யங்களில் இருப்பவர்களின் கதைகளும் இதற்கு விலக்கல்ல. சில கதைகளைக் கேட்கும்போது, தெளிவாகி விட்டார்களோ என்று எண்ணத் தோன்றும்; பின்னர் அவர்கள் தம் நடத்தைகள், அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பே இல்லை என்பதை இடித்துரைக்கும்.

50 ஆண்டுகளுக்குப் பின் பழைய இடத்துக்கு வந்துசேரப் போகின்ற தமிழ் தலைமை!

(Maniam Shanmugam)
எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் பொதுத் தேர்தல் 1970இல் தமிழரசு – தமிழ காங்கிரஸ் கட்சிகள் மண் கவ்வியது போன்ற ஒரு நிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நிச்சயமாக ஏற்படுத்தப் போகின்றது. ஏனெனில் அன்றைய சூழ்நிலைக்கும் இன்றைய சூழ்நிலைக்கும் இடையில் 50 வருடங்கள் கழிந்துவிட்டாலும் அச்சொட்டாக ஒரு ஒற்றுமை இருக்கின்றது.

சிங்கப்பெண்ணே…

(Rathan Chandrasekar)

குடிக்கிற தண்ணிக்காக ஊரே அல்லாடிக்கிட்டிருக்கு.

ஒருத்தருக்கொருத்தர் மாத்தி மாத்தி பழி சொல்லி காரணம் சொல்லிட்டிருக்க –

நம்ப வேலூர் பொம்பளைக மட்டும் –
15 வருசத்துக்குமுந்தி காஞ்சுபோன ஒரு ஆத்தையே தூர் வாரி சாதனை பண்ணிருக்காங்க.

உயிர்களை காக்க பிறந்தவர்க்கு இதயம் கணத்த கண்ணீர் அஞ்சலி

கேரள மாநிலம் கொட்டாரக்கரையைச் சேர்ந்த அனுஜித், ஐ.டி.ஐ படித்துக் கொண்டிருந்த நேரத்தில் ரயில் தண்டவாளத்தை கடந்து சென்ற சமயத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலைக் கண்டார். அந்த வழியாக ரயிலும் வந்தது. உடனே, அந்த மாணவர் தனது கையில் இருந்த சிவப்பு நிற புத்தக பையை தூக்கி பிடித்தபடி

வெலிக்கடைச்சிறைச் சாலையில் படுகொலை…கந்தன் கருணை புலிகளின் சிறைச்சாலைப் படுகொலை….

(Sutharsan Saravanamuthu)

வெலிக்கடைச்சிறைச் சாலையில் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் எனது அஞ்சலிகள், 23 ஜூலை எப்படி மறக்க முடியாததோ அப்படியே 30 மார்க்சும் மறக்கமுடியாததே.

23 07 1983 வெலிக்கடைச் சிறைக் கொலை
புத்தருக்கு இரத்த அபிஷேகம் சிங்களவனுகளால் செய்யப்பட்டது.

30 03 1987 கந்தன் கருணைக் கொலை
கந்தனுக்கு இரத்த அபிஷேகம் புலிகளால் செய்யப்பட்டது.

கேரளாவில் இன்று 1038 பேருக்கு கரோனா தொற்று: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

கேரளாவில் இன்று 1038 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது:
கேரளாவில் நாளுக்கு நாள் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நமது மாநிலத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கியதற்கு பின்னர் இன்று தான் முதன்முதலாக நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

நடிப்பில் ஸ்டைல்… ஸ்டைலில் நடிப்பு; ஸ்டைல் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் நினைவுநாள்

(வி. ராம்ஜி)

சினிமாவை, சி.பி., என்றும் சி.மு., என்றும்தான் ஒரு கோடு கிழித்துப் பிரித்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. ஒரு கதை அமைக்கப்பட்டிருக்கும். நாயகன் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார். இயக்குநர் திட்டமிட்டபடி கதை நகரும். ஆனால் ‘நடிக்கிறது இவருப்பா. அதுக்குத் தகுந்தது போல தைரியமா எத்தனை பக்கம் வேணும்னாலும் வசனம் எழுதலாம்’ என்றார்கள். ‘அவர் நடிக்கிறார்னா, அந்த சீன்ல, டைட் க்ளோஸப்பை தாராளமாவும் தைரியமாவும் வைக்கலாம்’, ‘வெறும் சோளப்பொரி போடாம, அந்த நடிப்பு யானைக்குத் தகுந்தபடி நடிக்கறதுக்கு தீனியைப் போட்டாத்தான், படமே பிரமாண்டமாகும்’ என்றெல்லாம் சொன்னார்கள். அப்படியொரு நடிப்பு அசுரன்… சிவாஜி கணேசன். அதனால்தான், ‘சி.பி., சிவாஜிக்குப் பின், சி.மு., சிவாஜிக்கு முன்’ என்று பகுத்துப் பிரித்து, பிரித்துப் பகுத்து சினிமாவைப் பார்த்தார்கள்.

தமிழ் அரசியலும் தெரிவுச் சுமையும்: யாரைத்தான் தெரிவு செய்வது?

(என்.கே. அஷோக்பரன்)

வாக்களிப்பு என்பது, நமது முழு ஜனநாயகக் கட்டமைப்புக்கான அடித்தளமாக விளங்குகின்றது. வாக்களிப்பது என்பது, நமது ஜனநாயகத்தின் மிகமிக அடிப்படையான உரிமை என்று நாங்கள் நினைக்கிறோம். ஒரு குடிமக்கள் குழு, அதன் பிரதிநிதிகளைத் தமது வாக்குகளினூடாகக் கூட்டாகத் தேர்ந்தெடுக்கும்போது, ​​சுதந்திரமான தேர்வின் மூலம், நாம் நம்மை ஆளுகிறோம் என்ற கருத்தை அது உறுதிப்படுத்துகிறது.

மயிலிட்டி மீன்பிடி இறங்குதுறைக்கு எரிபொருள் வழங்க ஏற்பாடு

மீன்பிடி துறைமுகத்தைப் பயன்படுத்தும் மீன்பிடிக் கலங்ளுக்கு எரிபொருள் வழங்குவதற்கான உடன்படிக்கை, இன்று (20) கைச்சாத்திடப்பட்டது. கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால், மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்துக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்ததுக்கும் இடையிலேயே, இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.