பாடங்களை கற்போம்….! படிப்பினையாக கொள்வோம்….!! மனித குலத்தை மீட்போம்…..!!! (பகுதி 4)

(சாகரன்)
கோவிட் -19 க்கு எதிரான போரை வியட்நாம் எவ்வாறு வென்றது.

கொரனா வைரஸ் ஐ கட்டுப்படுத்துவதில் சீனாவும், தென்கொரியாவும் அதிகம் பேசப்பட்டதற்கான காரணங்களில் ஒன்று இவ்விரு நாடுகளும் குறுகிய காலத்திற்குள் அதிகளவிலான கொரானா வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளானார்கள் என்பதாலே.

ஜூன் 20இல் பொதுத் தேர்தல்: வர்த்தமானி வௌியீடு

நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாடங்களை கற்போம்….! படிப்பினையாக கொள்வோம்….!! மனித குலத்தை மீட்போம்…..!!! (பகுதி 3)

(சாகரன்)

கோவிட் -19 க்கு எதிரான போரை வியட்நாம் எவ்வாறு வென்றது

கடுமையான தொடர்பு – தடமறிதல் (contact-tracing process) செயற்பாடுகள்:

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தொடர்பு – தடமறிதல் செயல்முறை மூன்று படிகளை உள்ளடக்கியது: வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் என்று சந்தேகிக்கப்படும் 1. நோயாளரை அடையாளம் காணுதல், 2. நோயாளர் பற்றி தகவல்களை திரட்டுதல் மற்றும் 3. நோயாளரைப் பின் தொடர்ந்து அவதானித்தல் ஆகும். கோவிட் – 19 இனால் பாதிக்கப்பட்ட, சந்தேகத்திற்கிடமான மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதார வல்லுநர்கள், பொதுப் பாதுகாப்புப் பணியாளர்கள், இராணுவம் மற்றும் அரசு ஊழியர்களைப் பயன்படுத்தி சமூகத்திலிருந்து விரைவாக இனம் கண்டு தனிமைப்படுத்துவதில் வியட்நாம் அரசு வெற்றி கண்டது.

பாடங்களை கற்போம்….! படிப்பினையாக கொள்வோம்….!! மனித குலத்தை மீட்போம்…..!!! (பகுதி 2)


(சாகரன்)

கோவிட் -19 க்கு எதிரான போரை வியட்நாம் எவ்வாறு வென்றது

வியட்நாம் கையாண்ட அணுகு முறையை சற்று விரிவாக பார்ப்போம்:
ஏப்ரல் 16 ஆம் தேதி நிலவரப்படி, 95.5 மில்லியன் மக்கள் வசிக்கும் நாடான வியட்நாமில் 268 உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் – 19 தொற்றாளர்கள், 171 வைரசில் இருந்து மீட்கப்பட்டவர்கள், 1,35,938 மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட்டவர்கள் மற்றும் பூஜ்ஜிய உயிரிழப்புகள் என்பன பதிவாகியுள்ளன. கோவிட் – 19 தொற்று நோயால் எந்த மரணமும் ஏற்படாததாகக் கூறப்படும் மிகச் சில நாடுகளில் வியட்நாம் ஒன்றாகும். இது இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டி விடயமாகும்.

’அவசரப்பட்டு தேர்தலை நடத்தி சிக்கலில் மாட்ட தேவையில்லை’

(ஏ.சி.எம் பௌசுல் அலிம்)

ஒத்தி வைக்கப் பட்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் ஆராயும் பொருட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இன்றைய தினம் முக்கிய மாநாட்டை கூட்டி இருக்கிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டத்துக்கு காவல்துறை உயரதிகாரிகளும் தேர்தல்கள் செயலகம் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாளை மறுதினம் முதல் ஊரடங்கு தளர்த்தல் பற்றிய அறிவித்தல்

ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் திங்கட்கிழமை தளர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை ,கண்டி, கோகலை, புத்தளம் மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில்  இவ்வாறு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சங்கம்புழா கிருஷ்ண பிள்ளை கவிஞர்

(J P Josephine Baba)
சங்கம்புழா கிருஷ்ண பிள்ளை என்ற கவிஞரை நினைத்தால் துயர் தொற்றி கொண்டாலும், அவருடைய கவிதைகள் ஒரு தாலாட்டும் சங்கீதம் போன்றே நம்மை பின் தொடர்கிறது. நம் கவலைகளை தேற்றும் இசையாக தொடர்கிறது. உயிரோட்டமான அவருடைய வார்த்தைகள் ஆதரவாக நம்மை பின் தொடர்கிறது.

பாடங்களை கற்போம்….! படிப்பினையாக கொள்வோம்….!! மனித குலத்தை மீட்போம்…..!!! (பகுதி 1)

(சாகரன்)

கோவிட் -19 க்கு எதிரான போரை வியட்நாம் எவ்வாறு வென்றது

உலகின் பரபரப்பான விடயங்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. அவை ஆக்கமாகவும், அழிவாகவும்; வெற்றிகளாகவும், தோல்விகளாகவும்; நன்மைகளாகவும், தீமைகளாகவும் இருந்திருக்கின்றன. இவற்றில் இருந்து பாடங்களை கற்று அவற்றை எமக்கான படிப்பனையாக கொண்டு மனித குல மீட்சிக்காக அவற்றை பயன்படுத்வோம்.

தோழர் பத்மா (அதிபர் அமலநாதன் மடு வலயம்) அடம்பன்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( EPRLF) இன் வன்னி மாவட்டத்தின் ஆரம்பகால அரசியல் செயற்பாட்டாளரான தோழர் பத்மா (அதிபர் அமலநாதன் மடு வலயம்) அடம்பன்-கன்னாட்டி கிராமத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். அவர் புற்றுநோயின் காரணமாக மரணமடைந்துள்ளார் என்ற துயரச்செய்தியை தோழர்கள் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.

2019 சாகித்ய அகாடமி விருது விருது பெற்ற தமிழக எழுத்தாளர் திரு சோ. தர்மன் அவர்களின் ஊரடங்கு அனுபவம்.

நேற்று சாயங்காலம் இலேசான பல்வலி…

டாக்டருக்கு போன்பண்ணினேன். க்ளினிக் திறப்பதில்லை என்றும் மாத்திரை மெசேஜ் பண்ணுகிறேன் வாங்கி சாப்பிடுங்கள் பார்த்துக்கொள்ளலாம் வேதனை குறையும் என்றார்…

சரியாக இரவு ஏழு மணிக்கு முகமூடி ஹெல்மெட் சகிதம் மெடிக்கலுக்குப் புறப்பட்டேன்…